search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நஷ்ட ஈடு"

    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார்.
    • போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் பழைய காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரமணி (வயது 24). இவர் கடந்த 4.5.2017 அன்று ஊ.மங்கலம் அம்பேத்கர் சிலை அருகே கடலூர்-விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து வீரமணியின் தாய் அனுசுயா, சகோதரி ரதி ஆகியோர் நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான வீரமணியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க வேண்டும் என கடந்த 18.3.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை வீரமணியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீரமணியின் குடும்பத்தினர், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், வீரமணியின் குடும்பத்துக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.23 லட்சத்து 68 ஆயிரத்து 129 வழங்க வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளனர்.
    • பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. 

    இதனையடுத்து பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 24-ந்தேதி வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சை யின் போது குடலையும், கர்ப்பபையினையும் சேர்த்து தையல் போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பத்மாவதி குடும்பத்தார் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து பத்மாவதி குடும்பத்தார் அங்கிருந்து சென்றனர். 

    இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்மாவது, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஆஸ்ப த்திரியின் டாக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • தவணைகள் முடிந்த பிறகும் ஆட்டோவின் பெர்மிட் திரும்ப கொடுக்கவில்லை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்குவதற்காக கடன் வாங்கினார். இதற்காக அவர் தவணைகள் மூலம் வட்டியும் அசலுமாக கடன் தொகை முழுவதையும் செலுத்தி விட்டார். ஆனால் தவணைகள் முடிந்த பிறகும் ஆட்டோவின் பெர்மிட் திரும்ப கொடுக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கன்னியாகுமரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஆட்டோவின் பெர்மிட், நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

    • நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
    • ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் பள்ளியாடியை சேர்ந்த எட்வின்பால், புதிய மோட்டார் சைக்கிள் வாங்க திட்டமிட்டார். இதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை பதிவு செய்த ஒரிஜினல் ஆர்.சி. புத்தகம், நிதி நிறுவனம் வசம் இருந்தது. இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் தொலைந்து விட்டது என நிதி நிறுவனம் கூறியது. இதனைத் தொடர்ந்து எட்வின்பால், வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் எட்வின் பால் வழக்கு தொடர்ந்தார்.

    ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வழக்கை விசாரித்து, நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டினர். மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய ஆர்.சி. புத்தகம், ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • விபத்தில் பலியான தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    • கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

    கடலூர்:

    புவனகிரி அருகே உள்ள வில்லியநல்லூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் நவீன்ராஜ் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த 9.7.2018 அன்று மோட்டார் சைக்கிளில் கடலூர்-பூண்டியாங்குப்பம் சாலையில் சென்ற போது, அவ்வழியாக வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நஷ்டஈடு பெற்று தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 21.1.2021 அன்று, நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காததால் நவீன்ராஜ் பெற்றோர், கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், விபத்தில் இறந்த நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 311 கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சம்ப ந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் ஜப்தி செய்ய ப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23).கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்.
    • கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23). இவர் கடந்த 16 .10. 2014 அன்று கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்  அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்    இதனையடுத்து அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மகனை இழந்த ராஜேந்திரனின் தந்தை சேகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் நஷ்டஈடு கேட்டு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

      வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26 .4 .2018 அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 12 லட்சத்து 24ஆயிரம் தொகை மற்றும் வழக்கு செலவுகளுக்கான தொகை ஆகியவற்றை நஷ்ட ஈடாக ராஜேந்திரன் தந்தை சேகரிடம், செலுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.நஷ்ட ஈடு தொகையை மூன்று தவணைகளாக செலுத்திய நிலையில், பாக்கித் தொகையை அளிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் நஷ்ட ஈடு தொகை அளிக்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட்டு அமீனா காசிநாதன் தலைமையிலான கோர்ட்டு ஊழியர்கள் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினர்.மனுதாரர் தரப்பில்ள் வக்கீல்கள் ஜெயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் வாதாடினர்.

    • பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது
    • பார்சல் நிறுவனத்தினர் எந்த வித பதிலும் கூறாமல் மரியாதை குறைவாக பேசியுள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே நகரை சேர்ந்தவர் நாகராஜன் மகன் மோகன்குமார் (32). இவர் மெசினரி எக்யூப்மெண்ட் என்ற பெயரில் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். தொழில் ரீதியாக ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் கம்ப்ரசருக்கு பயன்படுத்தும் 13 டிரில்லிங் ராடுவை பார்சல் செய்து பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் உள்ள கேபிஎன் விரைவு பார்சல் சர்வீஸ் நிறுவனம் மூலம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, மூலனூரை சேர்ந்த சூரி என்ற வாடிக்கையாளருக்கு கடந்த 2021, ஜூன் மாதம் 28ம்தேதி அனுப்பியுள்ளார். ஆனால் பார்சல் உரிய வாடிக்கையாளருக்கு சென்றயடை வில்லை.இதனால் மோகன் குமார் பார்சல் நிறுவனத்தை அனுகி நான் அனுப்பிய பார்சல் எனது வாடிக்கையாளருக்கு சென்றடையவில்லை. ஆகையால் நான் அனுப்பிய பார்சலை திரும்பி அளிக்கவேண்டும். இல்லையேல் ட்ரில்லிங் ராடுவின் மதிப்பான ரூ.30 ஆயிரம் பணத்தை திருப்ப தரவேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பார்சல் நிறுவனத்தினர் எந்த வித பதிலும் கூறாமல் அலைக்கழித்ததோடு, மரியாதை குறைவாக பேசியுள்ளனர்.இதனால் மனஉளைச்சல் அடைந்த மோகன்குமார் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் கேபிஎன் விரைவு பார்சல் நிறுவனத்தினர் சேவை குறைபாடு புரிந்தால் பாதிக்கப்பட்ட மோகன்குமாருக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், மோகன்குமார் அனுப்பிய பார்சலை அவரிடமே ஒப்படைக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


    • எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குமளங்குளத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் சிவக்குமார் (வயது 33). இவர் ஜவுளிக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8.12.2018 அன்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 16.9.2020 அன்று சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நஷ்டஈடு தொகை வழங்காததால் கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, விபத்தில் இறந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 706 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • சிவகுமார் மனைவி சங்கரி சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார்.
    • சிவகுமார் தம்பி பிரசாந்துடன் சுகுமாரின் வீட்டிற்கு சென்று மனைவி இறப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டு தகராறு செய்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரிய கொழுவாரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 33) இவர் வீட்டிற்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்நிலையில் இவரது வீட்டிற்கு எதிர்ப்புறம் இருக்கக்கூடியவர் சிவகுமார் அவரது மனைவி சங்கரி. சங்கரி சில நா ட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார். சிவகுமாரின் மனைவி சங்கரி இறந்தத ற்கு சுகுமார்தான் காரணம் என்று சிவகுமார் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளார். 

    நேற்று அப்போது இந்த தகராறு பயங்கரமான சண்டையாக மாறியது. அதில் சிவகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுகுமாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் சுகுமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சுகுமாரை மீட்டு புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோட்ட குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து சுகுமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிவகுமார் மற்றும் அவரது தம்பி பிரசாந்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×