search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loss compensation"

    • விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23).கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்.
    • கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23). இவர் கடந்த 16 .10. 2014 அன்று கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்  அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்    இதனையடுத்து அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மகனை இழந்த ராஜேந்திரனின் தந்தை சேகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் நஷ்டஈடு கேட்டு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

      வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26 .4 .2018 அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 12 லட்சத்து 24ஆயிரம் தொகை மற்றும் வழக்கு செலவுகளுக்கான தொகை ஆகியவற்றை நஷ்ட ஈடாக ராஜேந்திரன் தந்தை சேகரிடம், செலுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.நஷ்ட ஈடு தொகையை மூன்று தவணைகளாக செலுத்திய நிலையில், பாக்கித் தொகையை அளிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் நஷ்ட ஈடு தொகை அளிக்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட்டு அமீனா காசிநாதன் தலைமையிலான கோர்ட்டு ஊழியர்கள் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினர்.மனுதாரர் தரப்பில்ள் வக்கீல்கள் ஜெயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் வாதாடினர்.

    • சிவகுமார் மனைவி சங்கரி சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார்.
    • சிவகுமார் தம்பி பிரசாந்துடன் சுகுமாரின் வீட்டிற்கு சென்று மனைவி இறப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டு தகராறு செய்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரிய கொழுவாரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 33) இவர் வீட்டிற்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்நிலையில் இவரது வீட்டிற்கு எதிர்ப்புறம் இருக்கக்கூடியவர் சிவகுமார் அவரது மனைவி சங்கரி. சங்கரி சில நா ட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார். சிவகுமாரின் மனைவி சங்கரி இறந்தத ற்கு சுகுமார்தான் காரணம் என்று சிவகுமார் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளார். 

    நேற்று அப்போது இந்த தகராறு பயங்கரமான சண்டையாக மாறியது. அதில் சிவகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுகுமாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் சுகுமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சுகுமாரை மீட்டு புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோட்ட குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து சுகுமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிவகுமார் மற்றும் அவரது தம்பி பிரசாந்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×