search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death of wife"

    • சிவகுமார் மனைவி சங்கரி சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார்.
    • சிவகுமார் தம்பி பிரசாந்துடன் சுகுமாரின் வீட்டிற்கு சென்று மனைவி இறப்பிற்கு நஷ்ட ஈடு கேட்டு தகராறு செய்துள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரிய கொழுவாரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 33) இவர் வீட்டிற்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்நிலையில் இவரது வீட்டிற்கு எதிர்ப்புறம் இருக்கக்கூடியவர் சிவகுமார் அவரது மனைவி சங்கரி. சங்கரி சில நா ட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து விட்டார். சிவகுமாரின் மனைவி சங்கரி இறந்தத ற்கு சுகுமார்தான் காரணம் என்று சிவகுமார் சுகுமாரிடம் தகராறு செய்துள்ளார். 

    நேற்று அப்போது இந்த தகராறு பயங்கரமான சண்டையாக மாறியது. அதில் சிவகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுகுமாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் சுகுமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சுகுமாரை மீட்டு புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோட்ட குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து சுகுமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிவகுமார் மற்றும் அவரது தம்பி பிரசாந்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×