search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்
    X

    டாக்டர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்

    • டாக்டர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
    • பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (வயது26) நிறை மாதகர்பிணியான இவர் கடந்த 13ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் ஜோதிமீனா உயிரிழந்துள்ளார்.அதே போன்று கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (26)என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகபிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ராஜலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகமாக காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணியில் இருந்த மருத்துவர்கள் இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர். ரத்தபோக்கு நிக்காததால், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி ராஜலட்சுமி மற்றும் உயிரிழந்த ஜோதிமீனா உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷங்களை எழுப்பினர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராமு, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தின்போது பணியிலிருந்த மருத்துவர் சாரதா, செவிலியர் பரமேஸ்வரி, உதவியாளர் முத்துலெட்சுமி ஆகிய 3 பேரை பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டார். மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


    Next Story
    ×