என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தண்டவாளம்"
- பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
குழித்துறை மேற்கு ெரயில் நிலையம் அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார் ராஜ், ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பிணமாக கிடந்தவர் தலை முழுவதும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாதவாறு கிடந்தார்.
எனவே அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
- பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை
நாகர்கோவில்:
தோவாளை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.
சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், மரியவளன் ஆகியோர் இன்று அதிகாலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சின்னசேலம் அருகே தண்டவாள பகுதியில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.
- அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருேக வரதப்புனூர் கிராமத்தில் ெரயில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு உடற் கூர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன பெண் அணிந்திருந்த உடைகள் காக்கி வெள்ளை நிறத்தில் வெள்ளை பூ போட்ட சேலை, ரோஸ் நிறத்தில் ஜாக்கெட், அணிந்திருந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தோர் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து மாறு சின்னசேலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும்
- நீண்ட நாட்களாக மாற்றப்படாத சிலாப் கற்களை மாற்றியமைக்கும் பணி நடந்தது.
- தண்டவாள இயக்க பாதுகாப்பு குழுவினர் சிலாப்புகளை மாற்றி அமைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் - ஈரோடு ரெயில் வழித்தடத்தில் விரிசல் மற்றும் நீண்ட நாட்களாக மாற்றப்படாத சிலாப் கற்களை மாற்றியமைக்கும் பணி நடந்தது.பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தண்டவாளங்கள், அவற்றின் தாங்கி நிற்கும் சிலாப் மற்றும் ஜல்லிக்கற்கள் பரிசோதிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் - ஊத்துக்குளி - ஈரோடு ரெயில் வழித்தடத்தில் தண்டவாள இயக்க பாதுகாப்பு குழுவினர் சிலாப்புகளை மாற்றி அமைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்