search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளையில் ரெயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி பிணம்
    X

    தோவாளையில் ரெயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி பிணம்

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை

    நாகர்கோவில்:

    தோவாளை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், மரியவளன் ஆகியோர் இன்று அதிகாலை அங்கு சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×