என் மலர்
நீங்கள் தேடியது "Slab"
- கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
- 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் காங்கிரீட் கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த கல்யாண் மங்கலராகோ பகுதியில் சப்தசுருங்கி என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் கட்டிடத்தைக் காலி செய்யுமாறு குடியிருப்புவாசிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் நேற்று மதியம் 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் காங்கிரீட் கூரை திடீரென இடிந்து கீழ்ப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் கீழ் வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உயிருக்குப் போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி நமஸ்வி (2), பெண்கள் பிரமிளா (56), சுனிதா (38), சுஷிலா (78), சுஜாதா (38) மற்றும் வெங்கட்(42) ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- நீண்ட நாட்களாக மாற்றப்படாத சிலாப் கற்களை மாற்றியமைக்கும் பணி நடந்தது.
- தண்டவாள இயக்க பாதுகாப்பு குழுவினர் சிலாப்புகளை மாற்றி அமைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் - ஈரோடு ரெயில் வழித்தடத்தில் விரிசல் மற்றும் நீண்ட நாட்களாக மாற்றப்படாத சிலாப் கற்களை மாற்றியமைக்கும் பணி நடந்தது.பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தண்டவாளங்கள், அவற்றின் தாங்கி நிற்கும் சிலாப் மற்றும் ஜல்லிக்கற்கள் பரிசோதிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் - ஊத்துக்குளி - ஈரோடு ரெயில் வழித்தடத்தில் தண்டவாள இயக்க பாதுகாப்பு குழுவினர் சிலாப்புகளை மாற்றி அமைத்தனர்.






