search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி பிணம்"

    • கெடிலம் ஆற்றின் தண்ணீர் இல்லாத கரைப்பகுதியில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா பாலம் உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள் ஏராளமானோர் கெடிலம் ஆற்றில் திரண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கெடிலம் ஆற்றின் தண்ணீர் இல்லாத கரைப்பகு தியில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இந்த தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இறந்த நிலையில் கிடந்த மூதாட்டி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எப்படி இறந்தார்? தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் 

    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள், ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பிரிவு அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இறந்து போன அந்த மூதாட்டி நீல நிறத்தில், புள்ளிகள் போட்ட நைட்டி அணிந்திருந்தார். அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், பல்லடம் போலீசாரை 9498101343, என்ற எண்ணிலோ, அல்லது பல்லடம் போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அவர் யார்? என்று அடையாளம் ெதரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவின்றி தவித்து வந்தார். அவருக்கு பொதுமக்கள் உணவளித்து ஆதரவாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த மூதாட்டி சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இறந்து கிடந்தார். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விசைப்படகு துறை பகுதியில் நேற்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
    • இந்நிலையில் இரவு 8 மணி அளவில், அங்கிருந்த விசைப்படகு ஓட்டுநரை அணுகிய அந்த மூதாட்டி, தான் மறுகரைக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள விசைப்படகு துறை பகுதியில் நேற்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.

    அவர், தான் சங்ககிரி பகுதியில் இருந்து வந்து இருப்பதாகவும் ஆற்றின் மறு கரையில் உள்ள நெறிஞ்சிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் இரவு 8 மணி அளவில், அங்கிருந்த விசைப்படகு ஓட்டுநரை அணுகிய அந்த மூதாட்டி, தான் மறுகரைக்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த விசைப்படகு ஓட்டுநர், மீண்டும் காலையில் தான் இனி விசைப்படகு போக்குவரத்து நடைபெறும் என கூறியுள்ளார். இதன் பின்னரும் மூதாட்டி தொடர்ந்து அந்த பகுதியிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை பூலாம்பட்டி படகு துறை பகுதியில் அந்த மூதாட்டி காவிரி ஆற்றில் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர் சங்ககிரி பகுதியில் இருந்து வந்ததாக கூறியதை அடுத்து போலீசார் சங்ககிரி சுற்றுவட்டார பகுதியில் சம்பந்தப்பட்ட பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே தண்டவாள பகுதியில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருேக வரதப்புனூர் கிராமத்தில் ெரயில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்ன சேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு உடற் கூர் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்து போன பெண் அணிந்திருந்த உடைகள் காக்கி வெள்ளை நிறத்தில் வெள்ளை பூ போட்ட சேலை, ரோஸ் நிறத்தில் ஜாக்கெட், அணிந்திருந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தோர் சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து மாறு சின்னசேலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும்

    ×