search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியனார் கோவில்"

    • ஞாயிறு திருத்தலத்துக்கு செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ் வசதி உள்ளது.
    • செங்குன்றத்தில் இருந்து நிறைய டவுண் பஸ் சேவைகள் உள்ளன.

    ஞாயிறு திருத்தலத்துக்கு செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ் வசதி உள்ளது.

    காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் அந்த பஸ் சேவை இயக்கப்படுகிறது.

    செங்குன்றத்தில் இருந்து நிறைய டவுண் பஸ் சேவைகள் உள்ளன.

    'ஞாயிறு' என்று போர்டுடன் பஸ் சேவை உள்ளது.

    ஆனால் செங்குன்றம் ஞாயிறு இடையே சுமார் 1 மணி நேரத்துக்கு ஒரு தடவையே டவுண் பஸ் சேவை இயக்கப்படுகிறது.

    காரில் சென்றால் மிக விரைவில், குறித்த நேரத்துக்குள் இந்த தலத்துக்கு சென்று வர முடியும்.

    காரில் செல்பவர்கள் செங்குன்றம் வழியாக செல்வதே நல்லது.

    செங்குன்றத்தில் இருந்து சோத்துப்பாக்கம் சாலை வழியாக செல்ல வேண்டும்.

    வழியில் அருமந்தை எனும் ஊர் வரும்.

    அதை தாண்டினால் ஞாயிறு கிராமம் வந்து விடும்.

    சாலை ஓரத்திலேயே ஆலயம் அமைந்துள்ளது.

    எனவே தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.

    மிக எளிதாக சென்றடையலாம்.

    ஆனால் ஆலயம் அமைந்துள்ள பகுதி மிகவும் குக்கிராமம் என்பதால் அதற்குரிய ஏற்பாடுகளுடன் செல்வது நல்லது.

    பூஜைக்குரிய பொருட்கள் மற்றும் பூக்களை புறப்படும் போது வாங்கிக்கொள்ளவும்.

    அதுபோல சாப்பாடு விஷயத்திலும் கவனம் தேவை.

    அந்த ஊரில் எந்த ஓட்டலும் கிடையாது.

    எனவே எந்த சாப்பாடும் கிடைக்காது.

    • இந்த கோவில் கருவறைக்கு நேர் எதிரில் சிவனை பார்த்தப்படி சூரிய பகவான் உள்ளார்.
    • மன்னர்கள் கட்டியதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்த தலத்தில் உள்ளன.

    இந்த கோவில் கருவறைக்கு நேர் எதிரில் சிவனை பார்த்தப்படி சூரிய பகவான் உள்ளார்.

    அந்த கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் பல்லவ விநாயகர், நடராஜர், கால பைரவர் அமைந்துள்ளனர்.

    இந்த தலத்தில் ஒரே ஒரு பிரகாரம்தான் உள்ளது.

    பிரகாரத்தில் உற்சவர் சன்னதி, கமல விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி, காசி விஸ்வநாதர் சன்னதி, சங்கிலி நாச்சியார் சன்னதி உள்ளன.

    சங்கிலி நாச்சியார் சன்னதி மட்டும் வடக்கு நோக்கி உள்ளது.

    மற்ற அனைத்து சன்னதிகளும் மூலவர் சன்னதி போல கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இத்தலம் சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    அந்த பழமையின் சிறப்பை இந்த கோவிலில் உள்ள மண்டபத்தில் காணலாம்.

    மண்டப தூண்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள் கண்கவரும் வகையில் அமைந்துள்ளன.

    கோவில் வளாகம் முழுவதும் ஆங்காங்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக செடி

    கொடிகள் வளர்த்துள்ளனர்.

    நட்சத்திரத்திற்கு ஏற்ப மரங்களும் வளர்த்துள்ளனர்.

    இதனால் ஆலயம் குளர்ச்சியாக இருக்கிறது. ஈசனுக்கு எதிரே சிவனுக்கு மிகவும் பிடித்த நாகலிங்க மரம் உள்ளது.

    கோவிலின் தென் புறத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. அதை 5 நிலை கோபுரமாக சீரமைத்துள்ளனர்.

    பழமையும், புதுமையும் கலந்ததாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    பொதுவாக பழமையான சிவாலயங்கள் மிக பெரிய அளவில் காணப்படும்.

    ஆனால் இந்த ஆலயம் மிகப்பெரிய ஆலயம் அல்ல.

    அதற்காக மிக சிறிய ஆலயமாகவும் இதை கருத முடியாது.

    மன்னர்கள் கட்டியதற்கான அனைத்து ஆதாரங்களும் இந்த தலத்தில் உள்ளன.

    நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு தலத்தை அமைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த தலம் சூரிய பகவானுக்குரிய தலமாக திகழ்கிறது.

    சூரியன் நீராடிய குளம் அந்த ஆலயத்தின் அருகில் உள்ளது.

    அந்த தீர்த்தத்திற்கு சூரிய தீர்த்தம் என்று பெயர்.

    சூரியன் நீராடி ஈசனை வழிபட்டதால் அந்த குளத்திற்கு இந்த பெயர் வந்துள்ளது.

    சூரியனை போலவே நாமும் அந்த ஈசனை வழிபட்டால் சூரியனுக்கு தோஷம் நீங்கியது போல நமக்கும் தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி.

    • தொண்டை மண்டலத்தில் 32 சிவ தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.
    • அதில் குறிப்பிடத்தக்கது ஞாயிறு திருத்தலம்.

    தொண்டை மண்டலத்தில் 32 சிவ தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

    ஆனால் பாடல் பெறாவிட்டாலும் பக்தர்களின் மனதில் 100க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் இடம் பிடித்துள்ளன.

    அதில் குறிப்பிடத்தக்கது ஞாயிறு திருத்தலம்.

    சங்க காலத்தில் இத்தலம் தெய்வ தன்மையும், செல்வமும், வளமும், சான்றோர்களும் நிறைந்த ஊராக திகழ்ந்தது.

    இவ்வூரை சுற்றி உள்ள வயல்கள் பச்சை பசேல் என்று காணப்பட்டதால் இயற்கை எழில் மிக்கதாக இருந்தது.

    அதனால்தான் இந்த தலத்தை நாடு என்று சான்றோர்கள் போற்றி ஞாயிறு நாடு என்று அழைத்தனர்.

    ஞாயிறு நாட்டில் பல புகழ்பெற்ற சிவாலயங்கள் இருந்தன. கால வெள்ளத்தில் பல சிவாலயங்கள் அழிந்து விட்டன.

    மிஞ்சி இருப்பது ஞாயிறு தலம் மட்டும்தான். கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த தலத்தின் சிறப்பை மக்கள் உணர்ந்து வர தொடங்கி உள்ளனர்.

    இந்த தலம் சூரிய தலமாகும். இங்கு உள்ள சூரிய பகவானை வணங்கினால் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்பது ஐதீகம்.

    இத்தலத்து ஈசன் பூவிலிருந்து தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார்.

    • சோழ மன்னன் மயங்கி விழுந்த இடத்தை ‘மாரம்பேடு’ என்று சொல்கிறார்கள்.
    • மன்னனின் கத்தி விழுந்த இடம் “கத்திவாக்கம்” என்று பெயர் பெற்றுள்ளது.

    சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்டதால், "ஞாயிறு" என்ற பெயரில் ஊர் உருவானதாக புராணங்களில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த ஞாயிறு ஊரைச்சுற்றி இருக்கும் ஊர்கள் சோழ மன்னன், இந்த ஊரில் சிவாலயம் கட்டியதை

    உறுதிபடுத்தும் வகையில் தற்போதும் உள்ளதை காண முடிகிறது.

    தாமரை மலரில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்ததும் சோழ மன்னனின் குதிரை பாய்ந்து ஓடிச்சென்று ஒரு இடத்தில் போய் விழுந்தது.

    அந்த இடம் குதிரைபாளையம் என்று அழைக்கப்படுகிறது.

    சோழ மன்னன் மயங்கி விழுந்த இடத்தை 'மாரம்பேடு' என்று சொல்கிறார்கள்.

    மன்னனின் கத்தி விழுந்த இடம் "கத்திவாக்கம்" என்று பெயர் பெற்றுள்ளது.

    • ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    நவக்கிரகங்கள் - சூரியன்

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் கிருஷ்ணரின் புத்திரனான சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு,

    பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்குக் கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், சாரதரிடம் மன்னிப்புக் கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்குச் சூரிய புராணத்தை உரைத்தார்.

    அதனைக் கேட்டு அவன் நோய் நீங்கியதாகப் புராணம் கூறும்.

    வடநாட்டில் "முல்தானத்தில்" உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பெற்றது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் "திருக்கண்டியூர்" மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் உள்ள"பனையபுரம்" ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி, அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள "ஆதித்யபுரம், கும்பகோணம் கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் "சூரியமூலை" ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் சூரியனை வழிபட ஏற்ற தலங்கலாகும்.

    • வடநாட்டில் மூலஸ்தானத்தில் உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு, பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்கு கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், நாரதரிடம் மன்னிப்பு கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்கு சூரிய புராணத்தை உரைத்தார். அதனை கேட்டு அவன் நோய் நீங்கியதாக புராணம் கூறுகிறது. வடநாட்டில் `மூலஸ்தானத்தில்' உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் `திருக்கண்டியூர்' மற்றும் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அருகில் உள்ள`பனையபுரம்' ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி (ஹப்ளி அருகில்) அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள `ஆதித்யபுரம், கும்பகோணம்-கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் `சூரியமூலை' ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் வழிபட ஏற்றதாகும்.

    ×