search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இயற்கை எழில் மிக்க ஞாயிறு தலம்
    X

    இயற்கை எழில் மிக்க ஞாயிறு தலம்

    • தொண்டை மண்டலத்தில் 32 சிவ தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.
    • அதில் குறிப்பிடத்தக்கது ஞாயிறு திருத்தலம்.

    தொண்டை மண்டலத்தில் 32 சிவ தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன.

    ஆனால் பாடல் பெறாவிட்டாலும் பக்தர்களின் மனதில் 100க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் இடம் பிடித்துள்ளன.

    அதில் குறிப்பிடத்தக்கது ஞாயிறு திருத்தலம்.

    சங்க காலத்தில் இத்தலம் தெய்வ தன்மையும், செல்வமும், வளமும், சான்றோர்களும் நிறைந்த ஊராக திகழ்ந்தது.

    இவ்வூரை சுற்றி உள்ள வயல்கள் பச்சை பசேல் என்று காணப்பட்டதால் இயற்கை எழில் மிக்கதாக இருந்தது.

    அதனால்தான் இந்த தலத்தை நாடு என்று சான்றோர்கள் போற்றி ஞாயிறு நாடு என்று அழைத்தனர்.

    ஞாயிறு நாட்டில் பல புகழ்பெற்ற சிவாலயங்கள் இருந்தன. கால வெள்ளத்தில் பல சிவாலயங்கள் அழிந்து விட்டன.

    மிஞ்சி இருப்பது ஞாயிறு தலம் மட்டும்தான். கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த தலத்தின் சிறப்பை மக்கள் உணர்ந்து வர தொடங்கி உள்ளனர்.

    இந்த தலம் சூரிய தலமாகும். இங்கு உள்ள சூரிய பகவானை வணங்கினால் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்பது ஐதீகம்.

    இத்தலத்து ஈசன் பூவிலிருந்து தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார்.

    Next Story
    ×