search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியனார் கோவில்"

    • தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான்.
    • ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான்.

    இது ஒரு சிறிய கோவில் தான்.

    ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

    சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோவில் எனும் சிறப்பை சூரியனார் கோவில் பெற்றுள்ளது.

    ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

    சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.

    • திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
    • கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.

    இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.

    தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.

    பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.

    தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.

    இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.

    • நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்.
    • தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

    நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது. நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. காலவ முனிவர் என்பவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.

    முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழு நோய்தாக்காதிருக்க வரமும் அளித்தனர்.

    நவகிரகங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரகங்களுக்கு தொழுநோய் ஏற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார்.

    பின்னர் நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று அழைக்கப்படுகிறது) கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின்னர் திங்களன்று காவிரியில் நீராடி பிராண நாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.

    நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்கு தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!

    • ஆனந்த ரூபினியாம் சொர்ணாம்பிகே
    • இன்பங்களைத் தருபவளாம் சொர்ணாம்பிகே

    1. அகிலமெல்லாம் காப்பவளாம் சொர்ணாம்பிகே

    அகிலலோக நாயகியாம் சொர்ணாம்பிகே

    சரணம் என்று வந்தவரை சொர்ணாம்பிகே

    சந்ததமும் வாழ்த்துகின்ற சொர்ணாம்பிகே

    2. ஆனந்த ரூபினியாம் சொர்ணாம்பிகே

    ஆபத்தில் காப்பவளாம் சொர்ணாம்பிகே

    ஆறுமுகன் தாயனவளாம் சொர்ணாம்பிகே

    ஆறுதலைத் தந்திடுவாள் சொர்ணாம்பிகே

    3. இமவானின் செல்வியான சொர்ணாம்பிகே

    இன்பங்களைத் தருபவளாம் சொர்ணாம்பிகே

    இடர் களையும் நாயகியாம் சொர்ணாம்பிகே

    இஷ்டசித்தி அளிப்பவளாம் சொர்ணாம்பிகே

    4. ஈஸ்வரனின் நாயகியே சொர்ணாம்பிகே

    ஈஸ்வரியே எங்கள் தாயே சொர்ணாம்பிகே

    ஈடில்லாத் தெய்வமம்மா சொர்ணாம்பிகே

    ஈகை குணம் கொண்டவளாம் சொர்ணாம்பிகே

    5. உலகளந்தோன் சோதாரியே சொர்ணாம்பிகே

    உண்மை பரம்பொருளே சொர்ணாம்பிகே

    உலகாளும் நாயகியே சொர்ணாம்பிகே

    உன் பாதம் சரணடைந்தேன் சொர்ணாம்பிகே

    6. ஐங்கரனி தாயான சொர்ணாம்பிகே

    ஐயமெல்லாம் தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே

    ஐயப்பன் தாயான சொர்ணாம்பிகே

    ஐஸ்வரிய தேவதையாம் சொர்ணாம்பிகே

    7. எங்கும் நிறைந்தவளாம் சொர்ணாம்பிகே

    எவ்வுலகும் காப்பவளாம் சொர்ணாம்பிகே

    எங்கள் குறை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே

    எங்கள் குல தெய்வமம்மா சொர்ணாம்பிகே

    8. ஏழைகளைக் காப்பவளாம் சொர்ணாம்பிகே

    ஏகரோக நாயகியே சொர்ணாம்பிகே

    ஏகாந்த ரூபிணியாம் சொர்ணாம்பிகே

    ஏழிசை வாலியான சொர்ணாம்பிகே

    9. கற்பூர நாயகியே சொர்ணாம்பிகே

    கானக வாசனியாம் சொர்ணாம்பிகே

    கனகநவ மணிகள் பூண்ட சொர்ணாம்பிகே

    கண்கண்ட தெய்வமம்மா சொர்ணாம்பிகே

    10. தஞ்சமென்ற பேர்களையே சொர்ணாம்பிகே

    தயவுடனே காப்பவளாம் சொர்ணாம்பிகே

    தவயோக நாயகியாம் சொர்ணாம்பிகே

    தவசிகளை காப்பவளாம் சொர்ணாம்பிகே

    11. ஜெகம் புகழும் நாயகியாம் சொர்ணாம்பிகே

    ஜென்மவினை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே

    சதுர் மறைவின் நாயகியே சொர்ணாம்பிகே

    சத்ய சொரூபினியாம் சொர்ணாம்பிகே

    12. பரமனது பாகம் அமர்ந்த சொர்ணாம்பிகே

    பக்தர்களை காப்பவளாம் சொர்ணாம்பிகே

    பரம் பொருளின் தத்துவமே சொர்ணாம்பிகே

    பலவினைகள் போக்கிடுவார் சொர்ணாம்பிகே

    13. மண்ணுலக நாயகியாம் சொர்ணாம்பிகே

    மக்கள் குறை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே

    மாதவனின் சோதரியாம் சொர்ணாம்பிகே

    மாதுஜனஷகியாம் சொர்ணாம்பிகே

    14. மனக்குறை தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே

    மனநிறைவைத் தந்திடுவாள் சொர்ணாம்பிகே

    மனம் மகிழ்ந்து எல்லோர்க்கும் சொர்ணாம்பிகே

    மங்களங்கள் தந்திடுவாள் சொர்ணாம்பிகே

    15. மலைமகளாம் எங்கள் அன்னை சொர்ணாம்பிகே

    மனக்கவலை போக்கிடுவாள் சொர்ணாம்பிகே

    இகபர நாயகியாம் சொர்ணாம்பிகே

    இன்னல்களைப் போக்கிடுவாள் சொர்ணாம்பிகே

    16. தஞ்சமென்ற பேர்களையே சொர்ணாம்பிகே

    தயவுடனே காப்பவளாம் சொர்ணாம்பிகே

    தவயோக நாயகியாம் சொர்ணாம்பிகே

    தவசிகளைக் காப்பவளாம் சொர்ணாம்பிகே

    17. தருமத்தின் நாயகியாம் சொர்ணாம்பிகே

    தத்துவப் பரம்பொருளே சொர்ணாம்பிகே

    சத்திய சொரூபினியே சொர்ணாம்பிகே

    சமயம் அறிந்து காப்பவளாம் சொர்ணாம்பிகே

    18. ஞாயிறு என்னும் பதியில் வாழும் சொர்ணாம்பிகே

    நம்பினோரைக் காப்பவளாம் சொர்ணாம்பிகே

    சங்கரனின் நாயகியாம் சொர்ணாம்பிகே

    சங்கடங்கள் தீர்ப்பவளாம் சொர்ணாம்பிகே

    19. கருணை உள்ளம் கொண்டவளாம் சொர்ணாம்பிகே

    கற்பகமே மெய்ப் பொருளே சொர்ணாம்பிகே

    20. ஸ்ரீராஜராஜேஸ்வரி லலிதாம்பா சொர்ணாம்பிகே

    ராஜயோகம் தந்திடுவாள் சொர்ணாம்பிகே

    நித்யகல்யாணி நிமலே சொர்ணாம்பிகே

    நித்தியானந்த ரூபினியே சொர்ணாம்பிகே


    • சங்கிலியார் அவதரித்த ஞாயிறு நாடு இன்றும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.
    • ஓம் ஆதித்யாய நமஹ

    சூரிய நமஸ்கார மந்திரம்

    ஓம் மித்ராய நமஹ

    ஓம் ரவயே நமஹ

    ஓம்சூர்யாய நமஹ

    ஓம் ககாய நமஹ

    ஓம் பூஷ்ணே நமஹ

    ஓம் ஹிரண்யகர்பாய நமஹ

    ஓம் மரீசயே நமஹ

    ஓம் ஆதித்யாய நமஹ

    ஓம் சவித்ரே நமஹ

    ஓம் அர்காய நமஹ

    ஓம் பாஸ்கராய நமஹ

    ஓம் ஸ்ரீ சத்விகு சூரியநாராயண நமஹ

    சங்கிலியார் அவதரித்த ஞாயிறு நாடு இன்றும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.

    இது நாம் பெற்ற பெரும் பேறு ஆகும்.

    இன்றும் திருவொற்றியூரில் பிரமோற்சவ ஒன்பதாம் நாள் மகிழடி சேவை உற்சவத்தன்று திருக்கல்யாண மகோற்சவம் சுந்தரருக்கும் சங்கிலியாருக்கும் நடைபெறுகிறது.

    இப்போதும் சங்கிலியார் மரபினர் இவ்விழாவில் சங்கிலியாருக்கும் சுந்தரருக்கும் தாலி, கூரைப்புடவை, வஸ்திரம் சீர்வரிசை வழங்கி அன்னதானமும் அளித்து அந்த பெருமை காத்து வருகிறார்கள்.

    ஞாயிறு நாட்டு மக்களும், வேளாள மரபினர்களும் ஸ்ரீசங்கிலிநாச்சியார் அடையப்பெற்றிருக்கும் பேரும் புகழும் தெய்வீகத்தன்மையும் வியக்கத்தக்கனவாகும்.

    • பஞ்ச பாஸ்கர தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள தலங்களாகும்.
    • அதில் ஒன்று ஞாயிறு தலம். சூரிய பகவான் பூசித்ததால் இத்திருநாமம் பூண்டது.

    பஞ்ச பாஸ்கர தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள தலங்களாகும்.

    அதில் ஒன்று ஞாயிறு தலம். சூரிய பகவான் பூசித்ததால் இத்திருநாமம் பூண்டது.

    வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்று குறிப்பிடுவார்கள்.

    இதனால் இந்த தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. மற்ற 4 பாஸ்கர தலங்கள் விபரம் வருமாறு:

    1. ஞாயிறு & சென்னைக்கு அருகில்

    2. திருச்சிறுகுடி & நன்னிலம் அருகில்

    3. திருமங்களகுடி & ஆடுதுறை அருகில்

    4. திருப்பரிதி நியமம் & நீடாமங்கலம் அருகில்

    5. தலைஞாயிறு & திருவாரூர் அருகில்

    • துறவிகள், சாமியார்கள், சன்னியாசிகளின் கைகளில் ‘திருவோடு’ பார்த்து இருப்பீர்கள்.
    • ஞாயிறு கோவிலில் திருவோடு மரம் வளர்க்கிறார்கள்.

    துறவிகள், சாமியார்கள், சன்னியாசிகளின் கைகளில் 'திருவோடு' பார்த்து இருப்பீர்கள்.

    இந்த திருவோடுகள் ஒரு மரத்தில் இருந்து கிடைக்கிறது.

    சிறு காயாக வந்து, தேங்காயை விட பெரிய காயாகி பிறகு திருவோடு போன்று அந்த காய் மாறி விடுகிறது. இதனால் இந்த மரத்துக்கு திருவோடு மரம் என்று பெயர்.

    திருச்சி தென்னூரில் உள்ள உக்கிரமா காளியம்மன் ஆலயத்தில் திருவோடு மரம் தல விருட்சமாக உள்ளது.

    வேறு எங்கும் இந்த மரத்தை வளர்க்க மாட்டார்கள்.

    ஆனால் ஞாயிறு கோவிலில் திருவோடு மரம் வளர்க்கிறார்கள்.

    ஆலய ராஜகோபுரம் அருகே சங்கிலி நாச்சியார் சன்னதிக்கு பக்கத்தில் இந்த மரம் உள்ளது.

    தற்போது அந்த திருவோடு மரத்தில் 10க்கும் மேற்பட்ட காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருக்கின்றன.

    பச்சை நிறத்தில் காணப்படும் அந்த திருவோடு காய்கள் விளைந்து முற்றியதும் தெரிந்துவிடும்.

    சில சமயம் விளைச்சல் முற்றி திருவோடு காய்கள் கீழே விழுந்து விடுவதுண்டு.

    அதை எடுத்து சரி பாதியாக வெட்டினால் 2 திருவோடுகள் கிடைத்து விடும்.

    பச்சையாக இருக்கும் திருவோடு காய்ந்ததும் நன்கு கெட்டியாகிவிடும்.

    அதைத்தான் யாசகம் பெற சன்னியாசிகள் பயன்படுத்துகிறார்கள்.

    ஞாயிறு திருத்தலத்தில் விளையும் இந்த திருவோடுகளை இலவசமாக சன்னியாசிகளுக்கு கொடுத்து விடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • அதில் லிங்கத்தின் தலையில் வெட்டு காயம் இருப்பதை பக்தர்கள் பார்க்க முடியும்.
    • ஞாயிறு தலத்துக்கு வழிபட செல்லும்போது நினைவில் வைத்துக் கொண்டு இதை தவறாமல் பார்த்து வாருங்கள்.

    சோழ மன்னன் வடக்கு நோக்கி படையெடுத்து வந்தபோது இந்த தலத்தில் உள்ள குளத்தில் வித்தியாசமாக இருந்த தாமரை மலரை பறிக்க முயன்றான்.

    அந்த தாமரை விலகி செல்லவே அதன் மீது தனது வாளை வீசினான்.

    அந்த வாள் மலர் மீது பட்டு வெட்டியது. ரத்தம் பீறிட்டது. இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்

    கருவறையில் உள்ள லிங்கத்தின் தலையிலும் வெட்டுக்காயம் உள்ளது.

    ஆனால் மலர் அலங்காரங்களால் புஷ்பரதேஸ்வரர் லிங்கம் மறைக்கப்பட்டு விடுவதால்

    அதன் மீதுள்ள வெட்டு காயத்தை பக்தர்களால் காண இயலாது.

    என்றாலும் நந்தி அருகே உள்ள மண்டபத்தின் தூணில் புஷ்பரதேஸ்வரர் லிங்கம் இடம் பெற்றுள்ளது.

    அதில் லிங்கத்தின் தலையில் வெட்டு காயம் இருப்பதை பக்தர்கள் பார்க்க முடியும்.

    ஞாயிறு தலத்துக்கு வழிபட செல்லும்போது நினைவில் வைத்துக் கொண்டு இதை தவறாமல் பார்த்து வாருங்கள்.

    • இத்தலத்தில் அம்பிகையின் பெயர் சொர்ணாம்பிகை.
    • கருவறைக்குள் அம்பிகையின் சிலைக்கு முன்பாக இந்த சக்கரம் நிறுவப்பட்டுள்ளது.

    இத்தலத்தில் அம்பிகையின் பெயர் சொர்ணாம்பிகை.

    இவருக்கு கருணாம்பிகை என்ற பெயரும் உண்டு.

    இவர் சிவபெருமான் வலது பக்கம் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

    இத்தலம் உருவான போது அம்பிகை மிகவும் உக்கிரத்துடன் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    பொதுவாக அம்பிகையின் உக்கிரத்தை தணிக்கும் சக்கரங்களை ஆதிசங்கரர் நிறுவி இருப்பதை பல்வேறு தலங்களில் காணலாம்.

    அதேபோன்று ஒரு சக்கரத்தை இத்தலத்திலும் ஆதிசங்கரர் நிறுவி உள்ளார்.

    கருவறைக்குள் அம்பிகையின் சிலைக்கு முன்பாக இந்த சக்கரம் நிறுவப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக சொர்ணாம்பிகை அமைதியும், சாந்தமும் தவழ காணப்படுகிறாள்.

    தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தேவையானதை வாரி வழங்கும் சிறப்பையும் இந்த அம்பிக்கை பெற்றுள்ளாள்.

    வழக்கமாக சிவாலயங்களில் தனி சன்னதியில் இருக்கும் அம்பாள் முன்பு பலி பீடம், கொடி மரம் ஆகியவை நிறுவப்பட்டு இருக்கும்.

    ஆனால் ஞாயிறு தலத்தில் பலி பீடமோ, கொடி கம்பமோ இல்லை. அதற்கும் தனியாக ஒரு ஐதீகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    • சிவ ஆலயங்களுக்கு நீங்கள் வழிபடசென்றால் இறுதியில் நவக்கிரக சன்னதி இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.
    • இங்கு சூரிய பகவான் வீற்றிருந்து அருள் பாலிப்பதால் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லை.

    சிவ ஆலயங்களுக்கு நீங்கள் வழிபடசென்றால் இறுதியில் நவக்கிரக சன்னதி இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.

    எல்லா பழமையான ஆலயங்களிலும் நிச்சயம் நவக்கிரக சன்னதி இருக்கும். ஆனால் ஞாயிறு தலத்தில் நவக்கிரக சன்னதி இல்லை.

    இங்கு சூரிய பகவான் வீற்றிருந்து அருள் பாலிப்பதால் நவக்கிரக சன்னதி அமைக்கப்படவில்லை.

    நவக்கிரகங்களுக்கு உரிய அனைத்து வழிபாடுகளையும் பக்தர்கள் இந்த சூரிய பகவானுக்கே செய்து விடுகிறார்கள்.

    கிரகங்களின் தலைவராக சூரியன் இருப்பதால் அனைத்து கிரகங்களுக்கான பலன்களையும் இவரே தந்து அருளுவதாக ஐதீகம்.

    • சிவாலய கருவறை கோஷ்டத்தில் ஞான குருவான தெட்சிணாமூர்த்தி வீற்றிருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
    • சில தலங்களில் இரு கால்களையும் சேர்த்தப்படி தெட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.

    சிவாலய கருவறை கோஷ்டத்தில் ஞான குருவான தெட்சிணாமூர்த்தி வீற்றிருப்பதை நாம் பார்த்து இருப்போம்.

    பொதுவாக தெட்சிணாமூர்த்தி சிற்பம் கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்திருப்பார்.

    சிவனின் 64 வடிவங்களில் ஒருவரான இவர் சனந்தர், கனகர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய 4 பேருக்கும் வேதங்களை போதிப்பார்.

    இவர் ஒரு காலை தொங்கவிட்டபடி காணப்படுவார்.

    சில தலங்களில் இரு கால்களையும் சேர்த்தப்படி தெட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார்.

    ஆனால் ஞாயிறு தலத்தில் தெட்சிணாமூர்த்தி ஒரு காலை சற்று கீழே இறக்கி விட்டபடி காணப்படுகிறார்.

    இது வித்தியாசமான அமைப்பாக கருதப்படுகிறது.

    • ஒரு ஆலயத்தில் தெற்கு பகுதியில் ராஜகோபுரம் இருந்தால், அந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகத் திகழும்.
    • சூரிய கிரகணம் தொடர்பான அனைத்து தோஷங்களுக்கும் இங்கு முழுமையான பரிகாரம் கிடைக்கும்.

    பொதுவாக ஒரு ஆலயத்தில் தெற்கு பகுதியில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு இருந்தால், அந்த தலம் மிகச்சிறந்த பரிகார தலமாகத் திகழும்.

    ஆலயங்கள் உருவான காலத்தில் இருந்து இது நடைமுறையில் உள்ளது.

    ஞாயிறு தலத்திலும் தென் திசையில் ராஜகோபுரம் அமைந்துள்ளதால், இதுவும் பரிகாரத்தலம் என்று பெயர் பெற்றுள்ளது.

    சூரிய கிரகணம் தொடர்பான அனைத்து தோஷங்களுக்கும் இந்த ஆலயத்தில் முழுமையான பரிகாரம் கிடைக்கும்.

    ×