என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஞாயிறு தலம் செல்வது எப்படி?
    X

    ஞாயிறு தலம் செல்வது எப்படி?

    • ஞாயிறு திருத்தலத்துக்கு செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ் வசதி உள்ளது.
    • செங்குன்றத்தில் இருந்து நிறைய டவுண் பஸ் சேவைகள் உள்ளன.

    ஞாயிறு திருத்தலத்துக்கு செல்ல சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ் வசதி உள்ளது.

    காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் அந்த பஸ் சேவை இயக்கப்படுகிறது.

    செங்குன்றத்தில் இருந்து நிறைய டவுண் பஸ் சேவைகள் உள்ளன.

    'ஞாயிறு' என்று போர்டுடன் பஸ் சேவை உள்ளது.

    ஆனால் செங்குன்றம் ஞாயிறு இடையே சுமார் 1 மணி நேரத்துக்கு ஒரு தடவையே டவுண் பஸ் சேவை இயக்கப்படுகிறது.

    காரில் சென்றால் மிக விரைவில், குறித்த நேரத்துக்குள் இந்த தலத்துக்கு சென்று வர முடியும்.

    காரில் செல்பவர்கள் செங்குன்றம் வழியாக செல்வதே நல்லது.

    செங்குன்றத்தில் இருந்து சோத்துப்பாக்கம் சாலை வழியாக செல்ல வேண்டும்.

    வழியில் அருமந்தை எனும் ஊர் வரும்.

    அதை தாண்டினால் ஞாயிறு கிராமம் வந்து விடும்.

    சாலை ஓரத்திலேயே ஆலயம் அமைந்துள்ளது.

    எனவே தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.

    மிக எளிதாக சென்றடையலாம்.

    ஆனால் ஆலயம் அமைந்துள்ள பகுதி மிகவும் குக்கிராமம் என்பதால் அதற்குரிய ஏற்பாடுகளுடன் செல்வது நல்லது.

    பூஜைக்குரிய பொருட்கள் மற்றும் பூக்களை புறப்படும் போது வாங்கிக்கொள்ளவும்.

    அதுபோல சாப்பாடு விஷயத்திலும் கவனம் தேவை.

    அந்த ஊரில் எந்த ஓட்டலும் கிடையாது.

    எனவே எந்த சாப்பாடும் கிடைக்காது.

    Next Story
    ×