என் மலர்
நீங்கள் தேடியது "Suryanar Temple"
- வடநாட்டில் மூலஸ்தானத்தில் உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது.
- தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.
ஆனால் சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு, பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்கு கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.
பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், நாரதரிடம் மன்னிப்பு கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்கு சூரிய புராணத்தை உரைத்தார். அதனை கேட்டு அவன் நோய் நீங்கியதாக புராணம் கூறுகிறது. வடநாட்டில் `மூலஸ்தானத்தில்' உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது என்பர்.
தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் `திருக்கண்டியூர்' மற்றும் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அருகில் உள்ள`பனையபுரம்' ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.
உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி (ஹப்ளி அருகில்) அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள `ஆதித்யபுரம், கும்பகோணம்-கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் `சூரியமூலை' ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் வழிபட ஏற்றதாகும்.
- நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்.
- தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.
நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது. நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. காலவ முனிவர் என்பவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.
முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழு நோய்தாக்காதிருக்க வரமும் அளித்தனர்.
நவகிரகங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரகங்களுக்கு தொழுநோய் ஏற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார்.
பின்னர் நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று அழைக்கப்படுகிறது) கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின்னர் திங்களன்று காவிரியில் நீராடி பிராண நாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.
நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்கு தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!
- திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
- கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.
இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.
பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.
இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.
- இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
- இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கினர்.
தலவரலாறு
முன்னொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்று ஒருவர் இருந்தார். ஒருநாள் ஒரு இளந்துறவி காலவ முனிவரிடம் வந்தார். தனது வருங்காலம் பற்றி அறிவிக்கும்படி கேட்டார். காலவ முனிவர் தமது ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார். உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை என்றார்.

உடனே அந்த இளந்துறவி காலவ முனிவரைப் பார்த்து, மற்றவரின் வருங்காலம் பற்றிக் கூறும் நீர் உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டோ? எனக்கேட்டு நகைத்து மறைந்தார்.
காலவ முனிவர் தன்னுடைய வருங்காலத்தை எண்ணிப் பார்த்தார். தனது முன்வினைப் பயனால் முன்ஜென்மத்தில் நண்டுகளின் காலை முரித்துத் தின்ற பாவத்தால், கூடிய விரைவில் தமக்குத் தொழுநோய் வரப்போகிறது என்பதை உணர்ந்தார்.
காலவ முனிவரின் சோகம் படிந்த முகத்தைப் பார்த்த மற்ற முனிவர்கள், சோகத்துக்குக் காரணம் என்ன என்று விசாரித்தனர். காலவ முனிவர் தமது வருங்கால நிலையை எடுத்துரைத்தார்.
அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள். நவக்கிரகங்களை நோக்கித் தவம் செய்து வினைப் பயனிலிருந்து விடுதலை பெற முயற்சி செய்யும் என்று ஆறுதல் கூறினார்கள்.
அதன்படி காலவ முனிவர் நவக்கிரகங்களைத் தியானித்து கடுந்தவம் புரிந்தார். காலவ முனிவரின் முன் நவநாயகர்கள் ஒருசேர வந்து காட்சி கொடுத்தார்கள்.
முனிவரே உமது தவத்திற்கு மகிழ்ந்தோம் உமக்கு என்ன வரம் வேண்டும் என்றார்கள்.

காலவ முனிவர் நவநாயகர்களை நோக்கி, நவமண்டலாதிபர்களே வினைப்பயனையூட்டும் தேவர்களே அடியேனைத் தொழுநோய் பற்றும் சூழ்நிலை உள்ளது.
அந்த தொழுநோய் என்னை அணுகாதபடி வரம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.
இந்த செய்தி பிரம்ம தேவருக்குத் தெரியவந்தது. நவக்கிரகங்களைத் தம்மிடம் வருமாறு செய்தார். அவர்களை நோக்கி, நவக்கிரகங்களே நீங்கள் தேவர்களாக இருந்தாலும், எம் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவீர்கள். தனித்து இயங்கும் சுதந்திரம் உங்களுக்கு இல்லை.
சிவபெருமானின் ஆணைப்படியும், கால தேவனின் துணை கொண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரவரது வினைப்பயனை ஊட்டுவதற்காகவே உங்களை யாம் படைத்தோம். அவ்வாறே நடக்கும் படியும் உங்களுக்கு உத்தரவிட்டோம்.
ஆனால் நீங்கள் எமது உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் மீறி நடக்கத் தொடங்கினீர்கள். நீங்கள் சுதந்திரமானவர்களாகி காலவ முனிவருக்குத் தொழுநோய் அணுகாமல் இருக்க வரம் கொடுத்துள்ளீர்கள்.
ஆகவே நீங்கள் ஒன்பதுபேரும் பூலோகத்தில் பிறந்து, காலவ முனிவர் தொழுநோயால் கஷ்டப்படவேண்டிய கால அளவு வரை நீங்கள் அந்த தொழுநோயால் துயர் அடைவீராக என்று சாபமிட்டார்.
சாபமொழி கேட்ட நவக்கிரகங்கள், அறியாமல் செய்த பிழையைப் பொறுத்து, தங்களின் சாபத்துக்கு விமோசனம் ஒன்று கூற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதுகேட்டு மனம் இரங்கிய பிரம்மன், காவிரி ஆற்றின் வடகரையை அணுகுங்கள். அங்கே அர்க்கவனம் என்ற வெள்ளெருக்கங்காடு ஒன்று உள்ளது. அங்கே தங்கி இருந்து தவம்புரியுங்கள்.

கார்த்திகை மாதத்து முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிப் பன்னிரெண்டு ஞாயிற்றுக்கிழமை முடிய எழுபத்தெட்டு நாட்கள் தவம் புரியவேண்டும்.
திங்கட்கிழமைதோறும் உதயத்துக்கு முன்னதாகக் காவிரியில் நீராடி பிராண வரதரையும், மங்கள நாயகியையும் வழிபட வேண்டும்.
உதயாதி எழு நாழிகைக்குள் அர்க்க இலை (வெள்ளெருக்கு இலை)யில் ஒரு பிடி அளவு தயிர், அன்னம் வைத்து அதை சாப்பிட வேண்டும். மற்ற நாட்களில் உணவின்றி நோன்பு இருக்க வேண்டும். இந்த அரிய நோன்பைச் சிறிதளவும் தவறாமல் செய்து வந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொன்னார்.
பிரம்மன் கூறிய வண்ணம் நவநாயகர்கள் பூலோகத்தை அடைந்து அர்க்கவனத்தைத் தேடி வந்து கொண்டிருந்தனர். தமக்கு முன்னே அவ்வழியில் அகத்தியர் செல்வதைக்கண்டு விரைந்து நடந்து அவரிடம் அணுகி வணங்கினார்கள். தமக்கு நேர்ந்த சாப வரலாற்றை கூறி அர்க்கவனத்தைத் தேடுகிறோம், அது உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்றனர்.

அகத்தியர், அவர்களைப் பார்த்து நாமும் அர்க்கவனத்திற்குத் சென்று பிராண வரதரை வழிபடச் செல்கிறோம். அவ்வனத்திற்கு உங்களையும் அழைத்துப் போகிறோம் வாருங்கள் என்று கூறி அழைத்துப்போனார்.
அவருடன் அந்த இடத்திற்கு சென்ற நவக்கிரக தெய்வங்கள் தங்கள் தவத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க கோள் தீர்த்த விநாயகரை பிரதிஷ்டை செய்து மங்கலநாயகி உடனாய பிராணநாதேஸ்வரரை வழிபட்டனர்.

அப்போது இறைவனும், இறைவியும் தோன்றி நவக்கிரகங்களின் சாபத்தை விலக்கி நவக்கிரக தெய்வங்களை நாடி வரும் பக்தர்களுக்கு சுதந்திரமாக அருள்பாலிக்க அருள்புரிந்தனர் என்பது புராணவரலாறு. அவர்கள் தவம் இருந்த இடமே சூரியனார்கோவில் ஆகும். இக்கோவிலை நவக்கிரக கோவில் என்றும் அழைக்கிறார்கள்.
- சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.
- கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் திருக்கயிலாய காட்சி திருவிழா மற்றும் ஆடி தீர்த்தவாரி விழாவினை திருக்கைலாய ஸ்ரீகந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.
ரிஷப வாகன புறப்பாட்டில் தஞ்சாவூர் கரந்தை, பழைய திருவையாறு ரோடு வேதவல்லி அம்மை உடன்மர் நாக நாகேஸ்வரர் கோவில், அன்னகாமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கரந்தை செல்லியம்மன் கோயில், வடக்கு வாசல் வடபத்ரகாளி, கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.
இந்நிகழ்ச்சியில் சிதநந்தீஸ்வரர் சுவாமிகள் திருக்கோயில் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், துணைத் தலைவர் டாக்டர் பழனி குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன் ,அன்ன காமாட்சி அம்மன் நிர்வாக டிரஸ்ட் நாக நாரேஸ்வரர் வழிபாட்டு குழுவினர் தர்மரக்ஷண சமாதி உள்ளிகள், சமூக நல அமைப்பு, தஞ்சை பெருவுடையார் சிவகங்கை கூட்டம் ஆகிய அமைப்பினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ண்டனர்.






