search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அகத்தியர் உருவாக்கிய ஆதித்ய ஹிருதயம்
    X

    அகத்தியர் உருவாக்கிய ஆதித்ய ஹிருதயம்

    • திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
    • கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.

    இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.

    தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.

    பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.

    தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.

    இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.

    Next Story
    ×