search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்திருத்தம்"

    சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். #JitendraSingh #CBI
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், அப்போதைய சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் வெடித்தது. இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

    எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக சி.பி.ஐ. அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசும் பரிசீலிப்பதாக தகவல் வெளியானது.

    ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர், சி.பி.ஐ.யில் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.  #JitendraSingh #CBI 
    வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. #NAFTADeal #CanadaUSDeal
    ஒட்டாவா:

    அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர்,  தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதையடுத்து மூன்று நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது. அதன்பின்னர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் (ஞாயிறு) கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறினால் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் கெடு விதித்தார். அதன்பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்போம் என்றும் கூறினார்.

    இந்த கேடு முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை அவசரமாக கூடி இதுபற்றி ஆலோசித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கனடாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன்மூலம் வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சீர்திருத்தம் செய்வது தொடர்பான கனடா மற்றும் அமெரிக்கா குழுவினரிடையே இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா ஊடகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாப்டா ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மற்றொரு கனடா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    கனடாவின் பாதுகாக்கப்பட்ட பால் சந்தையை அமெரிக்க அதிக அளவில் அணுகுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. #NAFTADeal #CanadaUSDeal
    நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுகொள்ளமாட்டோம் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #NEET
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது :-

    தமிழகத்தில் 2021ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. 5ஆண்டுக்குத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அவர்களுக்கு செய்யவேண்டியது இன்னும் நிறைய உள்ளது. அதனால்தான் 2019 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு கொள்கை ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

    2024 முதல் பாராளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒருங்கிணைந்த தேர்தல் என்று முடிவெடுத்தால், முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவித்து, அதற்கு அனைவரும் உடன்பட்டால் நாங்களும் உடன்படுவோம். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இடைத்தேர்தலே இருக்கக்கூடாது என்பதுதான்.


    நீட் தேர்வில் எந்த சீர்திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம். நீட் தேவையில்லை என்பதுதான் எங்களது கொள்கை முடிவு. அதில் நாங்கள் வெற்றி பெறுவோமா? தோல்வி அடைவோமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் மாணவர்களை திசை திருப்ப விரும்பவில்லை.

    அனைத்து வி‌ஷயங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறுவது தவறு. ஜி.எஸ்.டி. விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தும், பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பும் செய்துள்ளோம். இது போல் பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். தமிழ் உணர்வு, தமிழர் உரிமை, மாநில சுயாட்சி ஆகியவற்றை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #NEET #ThambiDurai
    ×