search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பம்"

    • சர்வதேச சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் மாணவி சாதனை படைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் வோல்டு யூனியன் சிலம்ப பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.

    இதில் சப்ஜூனியர் ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்ைக ஆகிய 5 நாடுகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    மாணவியுடன் சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேலும் உடனிருந்தார். ராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி, முருகேசன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, குரு ஏழுமலை, தேசிய தலைவர், அகத்திய ஞானம் நிறுவன பொதுச் செயலாளர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பரமக்குடி நகர் மன்ற கவுன்சிலர் அப்துல் மாலிக், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    போட்டியை அப்துல்கலாம் பள்ளி குழுவினர் மற்றும் பாரதி விளையாட்டு சங்க தலைவர் அசான் சண்முகவேல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாடி மாணவி உலக சாதனை படைத்தார்.
    • சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் செயல்பட்டு வரும் சிலம்ப பயிற்சி நிறுவனம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டிைய நடத்தியது. உலக சாதனை படைக்க நோபல் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார். இந்த நிலையில் இன்று டி.கல்லுப்பட்டி-கள்ளிக்குடி சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 110 மாணவ-மாணவிகள் பங்கேற்று கண்கள், கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் தொடர் சிலம்பம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.

    சிலம்ப கலையின் உள் சுத்து வெளிச்சுத்து, கிறுக்கி, பகிழ் உடான், நாலடி, தலை வெட்டு முன் கம்புபின்னல் பிரித்தல், பின்கம்பு பின்னல் பிரித்தல், உள்சுத்துகை மாற்றுதல், வெளிச்சுத்து கை மாற்றுதல், நான்கடி கைமாற்றுதல், தொடு முறை சுற்றுதல் என பல்வேறு கலைகளை 30 நிமிடத்தில் செய்து காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். உலக சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் வினோத் குமார், புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன் ஆகியோர் சான்றிதழும், கேடயமும் வழங்கினர்.

    • 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
    • தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், தென்காசி மாவட்ட சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் உள்ள எஸ்.டி.கே. ரைஸ் மில் வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன், செயலாளர் சுதர்சன், துணைத் தலைவர் ஜெயராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் பிரஜித்குமார், முத்தையா, சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய முயற்சியில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, மருதப்பபுரம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    • 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
    • என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக நீலமேகம் மற்றும் அவரது மனைவி கவிதா அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகின்றனர்.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாநில மாவட்ட கருத்தாளராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்து எண்ணும் எழுத்தும் பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் தம்பதியினரை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

    இந்நிலையில், இப்பள்ளி யில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோடியக்காடு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் ஆசிரியர்கள் குணசுந்தரி, சாந்தி, கவிதா, மணிமாலா, புஷ்பா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீனாம்பாள், தாமரைச்செ ல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களால் என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும், 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி பரிசு வழங்கினார்.

    முடிவில் ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

    • 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார்.
    • ஆதிதிராவிட விடுதி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிட விடுதி பள்ளி கல்லூரி மாணவி களுக்கு உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானும் தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளருமான சி.வீரமணி வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து சிலம்பம் களரி பயிற்சி அளித்து வந்தார். இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மாணவிகளுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணி ப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிலம்ப பயிற்சியாளர் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு தலைமையில் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊக்குவிக்கும் விதமாக சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் கால்களை முட்டி போட்டுக் கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    மேலும் 7 வயது மாணவன் பரித்ராஜ் மற்றும் 12-வயது மாணவி இனியா ஆகியோர் 15அடி உயரத்தில் 6200ஆணிகள் பதித்த ஆணி பலகையின் மீது நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி "மாதிரி ஒலிம்பிக் தீபம்" ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜெட்லி புக் ஆப் நிறுவனம் மாணவர்க ளின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அதன் நிறுவனர் ஜெட்லி மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ், மெடல் வழங்கினார்,

    மேலும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது,

    நிகழ்ச்சியை சிவம் சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரும் சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியக தலைமை ஆசானுமான வே.மாதையன் தலைமையில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முன்நின்று நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி பாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளரும்,மல்லூர் ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரு மான தமிழ்ச்செல்வன் செய்தி ருந்தார்.

    • ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது.
    • வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிடிவுகளாக ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், சிலம்ப சண்டை என்று 3 விதமாக நடைபெற்றது. மேலும், வயதின் அடிப்படையிலும், விளையாட்டின் அடிப்படையிலும் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழையும் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். விளையாட்டுக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

    • மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள் அசத்தினர்.
    • உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தியது.

    திருமங்கலம்

    உலக சோடகான் கராத்தே அமைப்பும், திருமங்கலம் லீ சாம்பியன் ஆர்ட்சும் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியாக கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளை நடத்தியது. திருமங்கலம் தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சி உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் கராத்தேயில் கிக்ஸ் (உதைத்தல்) நிகழ்ச்சியும், 2 கண்களை துணியால் கட்டியவாறு சிலம்பத்தில் இரட்டை கம்பு சுழற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

    ஆணழகன் சங்கத்தின் செயலாளர் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென்மாநிலத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். கராத்தே கிக்சில் 101 மாணவர்களும், சிலம்பம் சுற்றுவதில் 166 மாணவர்களும் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிவராமன், இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மணி, மதுரை மாவட்ட சிலம்ப கழகத்தின் பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் சிலம்பம் இந்தியா சங்கம் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான ஒரு நாள் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

    சிலம்பம் இந்திய சங்கத்தின் தந்தை சந்திரமோகன், சிலம்பம் இந்திய சங்கத்தின் தலைவர் பொன்ராமர், செயல் தலைவர் கண்ணதாசன், பொதுச்செயலாளர் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்திய சிலம்ப சங்கத்தில் அங்கீகாரம் பெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிலம்ப பயிற்றுநர்கள் ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட போட்டிகள் முதல் அகில இந்திய போட்டிகள் நடத்துவதற்கான விதிமுறைகள், பயிற்றுனர், நடுவர்களுக்கான, உடை விதிமுறைகள், மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், தொடு முறை பயிற்சிகளை எவ்வாறு நடத்தி தர வேண்டும் என்பது பற்றி ஆசிரியர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து, செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு, 100 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வும் நடை பெற்றது.

    தேர்வின் அடிப்ப டையில் பயிற்றுநர்களுக்கு கிரேடு சான்றிதழ் இந்திய சிலம்ப சங்க பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை சிலம்பம் தஞ்சாவூர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். முகாமின் செயல்முறைகள் மற்றும் வழிபாட்டு நிபந்தனைகள் தஞ்சையை சேர்ந்த ரெங்கநாயகி மற்றும் சங்கீதா ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தினர்.

    இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

    • தொடர்ந்து, 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்ப சாதனை.
    • 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை.

    பட்டுக்கோட்டை:

    அணைக்காடு சிலம்பக்கூடம் மற்றும் மனோரா ரோட்டரி சங்கம் இணைந்து 74 வது குடியரசு தினம் மற்றும் சிறார் மீள் உணர் தற்காப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தி 24 மணி நேர உலக சாதனை. நிகழ்ச்சி ஜனவரி 26 முதல் 27ம் தேதி வரை ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பால்கஸ்மி மற்றும் செயலனார்-தஞ்சை மாவட்ட சைக்கில் அசோரியேசன் செயலாளர் நெப்போலியன் வரவேற்புரையாற்றினார்.

    லாரல் கல்வி நிறுவனங்–களின் தாளாளர் பாலசுப்ர மணியன், ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    தஞ்சை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சதாசிவம், இந்திய சிலம்ப சம்மேளனம் துணைச் செயலாளர் ஜலேந்திரன், மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் சிவச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் நடுவர்களாக நோபல் உலக சாதனை நிர்வாகத்தின் சிஇஓ டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், நிர்வாக அலுவலர் வினோத், அதன் மாநில தீர்ப்பாளர் பரணிதரன் மற்றும் ஹேமந்த் குமார் உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர்.

    இந்த உலக சாதனையின் போது மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினை டாக்டர் ரவி பொறுப்பேற்று செய்திருந்தார். மேலும் விழாவில் மனோரா ரோட்டரி சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, அதன் பொருளாளர் சங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் தொடர்ந்து 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி சாதனை புரிந்தவர்கள் 4 நபர்களும், அதே பிரிவில் இரண்டு நபர்கள் 12 மணி நேர சாதனையும் புரிந்தனர்.

    அடுத்து 12 மணி நேரம் தொடர்ந்து ஒற்றை சிலம்பம் சுழற்றி 12 நபர்கள் சாதனை புரிந்தனர். இறுதியாக 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை புரிந்தனர்.

    நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முடிவில் தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளரும் சிலம்பகலை பயிற்சியாளருமான ஷீலாதாஸ் நன்றி கூறினார்.

    ×