search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "around"

    • நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

    அதிராம்பட்டினம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பன்னீர் செல்வம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    அதிராம்பட்டினம் நகரின் முக்கிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சாலையில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

    மேலும், இருசக்கர வாகனங்களில் செ ல்வோரை பின் தொடர்ந்து சென்று துரத்துகிறது.

    இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களை சில நாய்கள் கடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • பெரியார் பஸ் நிலையத்தில் கேனுடன் சுற்றிய மர்ம வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.

    மதுரை

    தூங்கா நகரமான மதுரைக்கு 24 மணி நேரமும் வெளியூர், உள்ளூர் மக்கள் வந்து செல்வார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் வெளியூர் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அதிகாலை 2.30 மணி அளவில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இரவு நேர பஸ்களில் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பெரியார் பஸ் நிலையத்தில் அதிகாலை 3 மணி அளவில் திருமங்கலம் செல்லும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆரப் பாளையம், மாட்டுத்தாவணி ஆகிய இடங்களுக்கு ஓரளவு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் திருமங்கலத்துக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

    சித்திரை திருவிழாவை யொட்டி இரவு நேரத்தில் மாட்டுத்தாவணியில் இருந்து திருப்பரங்குன்றத் துக்கு பஸ்கள் இயக்கப்பட் டன. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் பயணி கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது பெரியார் பஸ் நிலையத்தில் திருமங்க லம் பஸ் நிலையத்துக்கு காத்திருந்தால் ஒரு மணி நேத்திற்கு ஒரு பஸ்தான் வருகிறது. அதுவும் சில நாட்களில் செயல்படுவ தில்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் பஸ் நிலையம் வந்த பயணிகள் திருமங்கலம் பஸ்சுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.

    அதிகாலை 3 மணிய ளவில் மேல்சட்டை அணி யாத வாலிபர் ஒருவர் ஒரு கேனை தோளில் வைத்தபடி பஸ் நிலையத்தை பலமுறை சுற்றி வந்தார். அந்த கேனில் ஏதோ ஒரு திரவம் இருந்தது. அது பெட்ரோலா? மண் எண்ணையா,? தண்ணீரா? என்று தெரியவில்லை. அந்த வாலிபர் குடிபோதை யில் இருந்ததாக தெரிகிறது. அவரது உடலில் திரவம் சிந்தி இருந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்ட வரா? என்றும் சந்தேகம் எழுந்தது. இந்த வேளையில் பெரியார் பஸ் நிலை யத்தில் போலீஸ் வாகனம் இருந்த போதிலும் போலீசாரை காணவில்லை. அவர்கள் வேறு பகுதிக்கு ரோந்து சென்று விட்டதாக தெரிகிறது.

    இதற்கிடையே கேனுடன் சுற்றிய வாலிபர் தீக்குளிப்ப தற்காக இப்படி செல்கி றாரா? என்று பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அவரால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதனை கவனித்து நட வடிக்கை எடுக்க போலீசார் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். எனவே பெரியார் பஸ் நிலையத்தில் 24 மணி நேர மும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தால் தான் சமூக விரோதிகள் அங்கு வரு வதை தவிர்ப்பார்கள் என்று பயணிகள் தெரிவித்தனர்.

    மேலும் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் திருமங்க லத்தில் பயணிகளை இறக்கி விட்டு ரிங் ரோடு வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் வழியாக மற்ற ஊர்களுக்கு செல்கின்றன.

    திருமங்கலத்தில் நள்ளி ரவு நேரத்தில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து பெரி யார் மற்றும் ஆரப்பாளையம் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கைக்குழந்தை களுடன் பெண்கள் பஸ்சில் நின்றபடி பயணிக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு அதிக மான பஸ்களை இயக்க வேண்டும்.

    இரவு நேரத்தில் திருப்ப ரங்குன்றம், திருமங்கலம் பஸ்கள் கிடைக்காமல் தவிக்கும் பயணிகள் ஆரப்பாளையம் சென்று திருமங்கலம் பஸ்சை பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ள தால் கூடுதலாக கட்டணம் செலுத்தும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.

    • குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊக்குவிக்கும் விதமாக சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் கால்களை முட்டி போட்டுக் கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    மேலும் 7 வயது மாணவன் பரித்ராஜ் மற்றும் 12-வயது மாணவி இனியா ஆகியோர் 15அடி உயரத்தில் 6200ஆணிகள் பதித்த ஆணி பலகையின் மீது நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி "மாதிரி ஒலிம்பிக் தீபம்" ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜெட்லி புக் ஆப் நிறுவனம் மாணவர்க ளின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அதன் நிறுவனர் ஜெட்லி மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ், மெடல் வழங்கினார்,

    மேலும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது,

    நிகழ்ச்சியை சிவம் சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரும் சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியக தலைமை ஆசானுமான வே.மாதையன் தலைமையில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முன்நின்று நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி பாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளரும்,மல்லூர் ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரு மான தமிழ்ச்செல்வன் செய்தி ருந்தார்.

    • சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே இரவில் தனியாக சுற்றி திரிந்த 10-ம் வகுப்பு மாணவியை மீட்ட போலீசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    சேலம்:

    சேலம் பட்டர் பிளை மேம்பாலம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் 15 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் தனியாக சுற்றி திரிந்தார்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அங்கு நின்ற லாரி டிரைவர்கள் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது தாய் இறந்து விட்டதாகவும், தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து மாணவியை மீட்ட ேபாலிசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

    ×