search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைபிடிப்பு"

    • மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார்.
    • குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார். சிதம்பரம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தகுதிச் சான்று பெறாமல் சென்ற வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது பல வாகனங்களில் ஓட்டுநர் உரிமம், காப்புச் சான்று ஆகியவையும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. ஒரே நாளில் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லும் 6 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா கூறியதாவது:-

    ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது. எந்த பள்ளி நிர்வாகமும் இந்த வாகனங்களை குறித்து கவலைப்படுவதில்லை. அதே போல பெற்றோர்களும் வாகனத்தின் தரம் குறித்து கவலைப்படுவதில்லை . இந்த விஷயத்தில் பெற்றோர் பள்ளி நிர்வாகம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. தகுதி சான்று வழங்கிய வாகனங்களின் இடது புறத்தில் அந்த வாகனத்தின் அனைத்து விபரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். பெற்றோர்கள் அதனைப் பார்த்து வாகனத்தின் தரம் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தகுதி சான்று இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக இல்லாமல் இருந்தால் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
    • 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. துறைமுக வடிவமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்ட காரணத்தால் துறை முகத்தின் நுழைவு பகுதி யில் மணல்மேடு ஏற்பட்டு அதனால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.

    மேலும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள மீன்பிடி கலன்க ளும் முழுமையாக சேத மடைந்துள்ளன. மேலும் துறைமுகத்தின் தவறான வடிவமைப்பின் காரணமாக அருகாமையிலுள்ள இறை யுமன்துறை மீனவ கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே துறைமுக பணியோடு இணைத்து இறையுமன் துறை மீனவ கிராமத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை.

    இந்த சூழலில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் விளைவாக கடந்த மாதம் தமிழக அரசால் ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது துறைமுக கட்டு மான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் துறைமுக கட்டுமான பணிகளுக்கு தேவையான பாறாங்கற்கள் குமரி மாவட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் அரசால் மூடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் கடந்த மாதம் தமிழக அரசால் குமரி மாவட்டத்தில் இரண்டு கல்குவாரிகளுக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த இரண்டு கல்குவாரிகளிலிருந்து இதுவரை ஒரு லாரி கல்வரை தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணிகளுக்கு வரவில்லை.

    ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள சில குவாரிகளில் இருந்தும் வெளிமாவட்ட குவாரிகளிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான வாக னங்கள் மூலம் கேரள மாநிலம் விழிஞ்ஞம் தனியார் துறைமுகத்திற்கு பாறாங்கற்கள், எம் சாண்ட், பாறை பொடி போன்ற கட்டுமான பொருட்கள் எவ்வித தடையும் இன்றி சென்று கொண்டி ருக்கின்றது. குமரி மாவட் டத்தின் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் கிடைக்கப்பெறாத சூழலில் அண்டை மாநிலத்திற்கு அதுவும் தனியார் துறை முகத்திற்கு குமரி மாவட் டத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் செல்வதை தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு குமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகத்திற்கென்றே அனுமதி பெறப்பட்ட குமரி மாவட்டத்தின் குவாரிகளிலுள்ள கட்டுமான பொருட்களையும் துறை முக கட்டுமானத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    மேலும் உடனடியாக தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணி களை தொடங்கவில்லை எனில் வரும் 17-ந்தேதியில் இருந்து குமரி மாவட்டத்தின் சாலைகள் வழியாக விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் இணைந்து சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.

    • ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
    • விபத்துகள் ஏற்படுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் அருகே பெருந்தொழுவு பகுதியில் ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கிருந்து புதிய கட்டிடங்களுக்கு லாரிகள் மூலம் ரெடி மிக்ஸ் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது அந்த லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், சாலைகள் அடிக்கடி பழுதாவதாகவும், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராமலிங்கபுரம் பகுதியில் வந்த 2 லாரிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெடிமிக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது லாரிகளை மெதுவாக இயக்குவதாகவும், சேதம் அடைந்த சாலைகளை செப்பனிட்டு தருவதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மினிபஸ் வருவதற்கு அப்பகுதியில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • பொது மக்கள் மறியல் செய்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே நெய்யூர் பால்தெரு, கிறிஸ்துமஸ் தெரு வழியாக திங்கள் நகர் தக்கலைக்கு தனியார் மினிபஸ் சென்று வருகிறது.

    அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதால் மினிபஸ் வருவதற்கு அப்பகுதியில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் அளித்தும் பலனின்றி உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அவ்வழியே வந்த மினி பஸ்சை தக்கலை ஒன்றிய கவுன்சிலர் மெல்பா ஜேக்கப் தலைமையில் பொது மக்கள் மறியல் செய்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேலும் இது குறித்து இரணியல் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததின் பேரில் இரணியல் போலீஸ் விசாரணை நடத்தி மினிபஸ் இந்த தடத்தில் வராது என்று உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
    • கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர்.

    நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது.

    அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர்.

    அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல், இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின்னர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர்.

    நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே இந்திய மாலுமிகளும் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது.
    • பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    அவினாசி :

    திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் ஏறிய ஒரு பெண் தெக்கலூருக்கு டிக்கட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தெக்கலூரில் பஸ் நிற்காது என்று கூறியதாகவும் இதனால் அந்த பெண்ணுக்கும் கன்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண் டிக்கெட் எடுப்பதற்காக கொடுத்த பணத்தை தூக்கிவீசியதாக கூறப்படுகிறது.

    எனவே அப்பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி தெக்கலூர்பைபாஸ் ரோட்டில் நின்று அந்த பஸ்சை நிறுத்தி சிறைபிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கன்டக்டர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் பஸ் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுகன்யா நள்ளிரவு நேரத்தில் வேறு வழியில்லாமல் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி டிக்கெட் எடுத்துள்ளார்.
    • திசையன்விளை அருகே உள்ள சண்முகாபுரத்தில் பஸ் வந்தபோது அதனை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா(வயது 35). இவர்களுக்கு 3 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

    கோயம்புத்தூர் மாவட்டம் காரணம்பேட்டையில் முத்துகிருஷ்ணன் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். தற்போது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெற்று வருவதால் அதில் பங்கேற்பதற்காக சுகன்யாவை சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறி உள்ளார்.

    தொடர்ந்து சுகன்யா மற்றும் அவரது உறவினர் ஆகியோருக்கு ஆன்லைனில் தனியார் ஆம்னி பஸ்சில் முத்துகிருஷ்ணன் டிக்கெட் எடுத்துள்ளார். பின்னர் நேற்றிரவு சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆம்னி பஸ் வந்தபோது அங்குள்ள ஓட்டலில் பயணிகள் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த நடத்துனர், சுகன்யாவிடம் அவரது 3 வயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்குமாறு கூறி உள்ளார்.

    உடனே அவர் ஆன்லைனில் எனக்கு டிக்கெட் எடுத்துவிட்டோம். பின்பு எதற்காக குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, கண்டிப்பாக டிக்கெட் எடுத்தாக வேண்டும். இல்லையெனில் பஸ்சில் இருந்து இறங்கிவிடுமாறு அவர் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா நள்ளிரவு நேரத்தில் வேறு வழியில்லாமல் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி டிக்கெட் எடுத்துள்ளார். இந்த விபரத்தை தனது சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் அவர் கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இன்று காலை திசையன்விளை அருகே உள்ள சண்முகாபுரத்தில் பஸ் வந்தபோது அதனை சிறைபிடித்தனர். அவர்கள் பஸ்சின் முன்பு அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை போலீசார் பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராவல் மண் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.
    • இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிராமணம்பட்டி ஊராட்சியில் உள்ள குண்டேந்தல்பட்டி கிராமத்தில் இருந்து வரும் பிராமணங்கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவும் 1500 ஆயகட்டுதாரர்களும் கொண்ட மிகப்பெரிய கண்மாயாகும்.

    பல வருடங்களாக கண்மாய்க்கு குடிமராமத்து பணி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலிங்கு பாதை, வரத்து கால்வாய், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் பொதுப்பணி துறையினரால் மேற்கொ ள்ளப்பட்டு வந்தது.

    தற்சமயம் காரைக்குடி யிலிருந்து மதுரை வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்று வரும் காரணத்தினால் அப்பணிக்காக இக்கண்மா யின் வரத்து கால்வாய் அருகே 2 டிப்பர் லாரி மற்றும் ஒரு மண் அள்ளும் எந்திரத்துடன் கிராவல் மண் எடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த இந்தப்பகுதி கிராம மக்கள் கிராவல் மண் அள்ளுவதை கண்டித்து அங்கு முற்றுகையிட்டனர். தொடர்ந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் சிறைப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோஷ்டி யூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் கலையரசன், கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
    • பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்து படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூரிலிருந்து விழுப்புரத்திற்கு ஒரு அரசு டவுன் பஸ் தடம் எண் 10 சென்று கொண்டிருந்தது காலை நேரம் என்பதால் டவுன் பஸ்சில் பள்ளி மாணவ மாணவியர்கள், பயணிகள் சென்றனர். பஸ் பேரணி ,பேரணி கூட்ரோடு, சித்தணி, ஆகிய நிறுத்தத்தில்பஸ் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. பஸ் முழுவதும் அதிகப்படியான பயணிகள் இருந்து வந்தனர் இந்நிலையில் விசாலையில் பஸ் நின்றது அங்கு நின்ற பயணிகள் மாணவர்கள் பாதி அளவு மட்டுமே பஸ்சில் ஏற முடிந்தது. மீதி பேர் ஏற முடியாத நிலையில் இருந்ததால் அரசு டவுன் பஸ் டிரைவர் பின்னால் வரும் வண்டியில் ஏறி வாருங்கள் என கூறிவிட்டு பஸ்சை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் முன்பு நின்று சி றபைிடித்து முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். டிரைவர்பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்து படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள். ஆகவே பின்னால் வருகின்ற டவுன் பஸ்சில் ஏறி வருமாறு அறிவுறுத்தியதின் பேரில் பின்னர் அவர்களாகவே சமாதானம் அடைந்து கலை ந்து சென்றனர்.அதன்பிறகு டிரைவர் பஸ் எடுத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • கடலூரில் பேனரை அகற்றியதால் பரபரப்பு மாநகராட்சி வாகனத்தை அ.தி.மு.க.வினர் சிறைபிடித்தனர்.
    • கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கட்சியினர், அமைப்புனர்கள் பேனர் வைத்துள்ளனர்.

    கடலூர்:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க.வினர் தேர்ந்தெடுத்தனர். இதனை யொட்டி கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மேலும் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க வினர் ஆங்காங்கே எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த பேனர்கள் வைக்கப்பட்டன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே இன்று காலை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனரை அகற்றி மாநகராட்சி வாகனங்களில் கொண்டு சென்றனர்.

    தகவல் அறிந்த மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், கெமிக்கல் மாதவன், நிர்வாகிகள் ஏழுமலை, முத்து, செந்தில்குமார், நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அண்ணாப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த மாநகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அ.தி.மு.க. வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க.வினர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பேனர்கள் வைக்க கூடாது. அதனை மீறி வைத்ததால் பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பேனர் மட்டும் அகற்ற வேண்டும் என தனிப்பட்ட முறையில் யாரேனும் உத்தரவு பிற்படுத்த உள்ளார்களா? மேலும் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கட்சியினர், அமைப்புனர்கள் பேனர் வைத்துள்ளனர்.

    அதனை அகற்றாமல் அதிமுக பேனர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவது யார் தூண்டுதலின் பேரில் நடக்கிறது. மேலும் எங்கள் கட்சி பேனர் மற்றும் அகற்றாமல் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பேனர்களையும் நாங்களே அகற்றி தங்களிடம் ஒப்படைக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது போலீசார் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    • வெள்ளைக்கால்பட்டி கிராமத்தில் குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளைக்கல்பட்டி கிராமம் சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது.

    இந்த கிராமத்தின் எல்லையில் அரபி கல்லூரி, தனியார் பள்ளி கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளது.

    மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.இந்த நிலையில், பள்ளி, கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிவற்றிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் துர்நாற்றம் வீசும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளைக்கல்பட்டி ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தனர். குப்பைகளை இங்கே கொட்டக்கூடாது,

    குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம ஊராட்சி சார்பாக குப்பை கொட்டாத நிலையில், வேறு யார் குப்பை கொட்டுகிறார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை–களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி குப்பையை பள்ளியின் முன்பாக உள்ள ஒரு மறைவிடத்தில் கொட்டிவிட்டு சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை உடனடியாக சிறை பிடித்தனர். குப்பை கொட்டிய இடத்தில் சென்று பார்க்கும்போது, உணவு விடுதி கழிவுகள், கண்ணாடி கழிவுகள், மருத்துவ கழிவுகள், என அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கருப்பூர் போலீசாருக்கும் சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்–பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஒப்பந்த வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ×