search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சை சிறை பிடித்த பொது மக்கள்
    X

    அரசு பஸ்சை பயணிகள் சிறைபிடித்தனர்.

    விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சை சிறை பிடித்த பொது மக்கள்

    • விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
    • பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்து படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூரிலிருந்து விழுப்புரத்திற்கு ஒரு அரசு டவுன் பஸ் தடம் எண் 10 சென்று கொண்டிருந்தது காலை நேரம் என்பதால் டவுன் பஸ்சில் பள்ளி மாணவ மாணவியர்கள், பயணிகள் சென்றனர். பஸ் பேரணி ,பேரணி கூட்ரோடு, சித்தணி, ஆகிய நிறுத்தத்தில்பஸ் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. பஸ் முழுவதும் அதிகப்படியான பயணிகள் இருந்து வந்தனர் இந்நிலையில் விசாலையில் பஸ் நின்றது அங்கு நின்ற பயணிகள் மாணவர்கள் பாதி அளவு மட்டுமே பஸ்சில் ஏற முடிந்தது. மீதி பேர் ஏற முடியாத நிலையில் இருந்ததால் அரசு டவுன் பஸ் டிரைவர் பின்னால் வரும் வண்டியில் ஏறி வாருங்கள் என கூறிவிட்டு பஸ்சை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் முன்பு நின்று சி றபைிடித்து முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். டிரைவர்பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பி வழிந்து படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள். ஆகவே பின்னால் வருகின்ற டவுன் பஸ்சில் ஏறி வருமாறு அறிவுறுத்தியதின் பேரில் பின்னர் அவர்களாகவே சமாதானம் அடைந்து கலை ந்து சென்றனர்.அதன்பிறகு டிரைவர் பஸ் எடுத்துக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்றார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×