search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்
    X

    குப்பை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்திய மக்கள்.

    குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்

    • வெள்ளைக்கால்பட்டி கிராமத்தில் குப்பை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளைக்கல்பட்டி கிராமம் சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது.

    இந்த கிராமத்தின் எல்லையில் அரபி கல்லூரி, தனியார் பள்ளி கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளது.

    மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.இந்த நிலையில், பள்ளி, கல்லூரி, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிவற்றிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் துர்நாற்றம் வீசும் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளைக்கல்பட்டி ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தனர். குப்பைகளை இங்கே கொட்டக்கூடாது,

    குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம ஊராட்சி சார்பாக குப்பை கொட்டாத நிலையில், வேறு யார் குப்பை கொட்டுகிறார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பை–களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி குப்பையை பள்ளியின் முன்பாக உள்ள ஒரு மறைவிடத்தில் கொட்டிவிட்டு சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை உடனடியாக சிறை பிடித்தனர். குப்பை கொட்டிய இடத்தில் சென்று பார்க்கும்போது, உணவு விடுதி கழிவுகள், கண்ணாடி கழிவுகள், மருத்துவ கழிவுகள், என அனைத்து வகை கழிவுகளும் கொட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கருப்பூர் போலீசாருக்கும் சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்–பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்தனர்.

    ஒப்பந்த வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டுவதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், மாநகராட்சி அதிகாரிகள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×