search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில்"

    • சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் அடையும் வரையில் ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வேலூரில் தி.மு.க. முப்பெரும் விழா முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது போன்று மாவட்ட கழகம் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் சார்பிலும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் சிறப்பாக நடத்த வேண்டும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கர நாராயணசுவாமி கோவில் அறங்காவலர்களாக பெண் உட்பட 5 பேரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
    • 5 பேரில் ஒருவர் அறங்காவலர் குழுத் தலைவராக 30 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் அறங்காவலர்களாக ஒரு பெண் உட்பட 5 பேரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

    சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த வக்கீல் சண்முகையா, காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்த முப்பிடாதி, சங்குபுரம் 3-வது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன், முள்ளிகுளம் மேலத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி, கோமதியாபுரம் 6-வது தெருவை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நியமனம் செய்யப்பட்ட 5 அறங்காவலர்களில் ஒருவர் அறங்காவலர் குழுத் தலைவராக 30 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் பிறகே கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் யார் என்பது தெரியவரும்.

    • புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது.
    • சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பொது வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை தாங்கினார்.

    குழந்தை பராமரிப்பு

    தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் மகாலட்சுமி மற்றும் சூர்யா ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு பாது காப்பான தாய்மை, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் நன்மைகள், குழந்தை பராமரிப்பு, மகப்பேறு நலஉதவி திட்டங்கள் மற்றும் ஒரு குழந்தையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்மையாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க வேண்டும் எனும் முனைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். புதுமணத் தம்பதிகள், பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் இப்பொழுது இருந்தே தாய் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

    ஊட்டச்சத்து குறைபாடு

    குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும் இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு நீங்களும், உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாணவரணி வீரமணி, வக்கீல் சதீஷ், ஜான் ஜெயக்குமார் மேற்பார்வை யாளர்கள் மல்லிகா, செல்வம், ராஜே ஸ்வரி, குழந்தை நல பணி யாளர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா ராமசாமியாபுரம் சமுதாய நலக்கூட மண்டபத்தில் நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு விஸ்வ பிரம்ம ரத ஊர்வலம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர விஸ்வ பிரம்ம மகாஜனம் சங்கம் சார்பில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா ராமசாமியாபுரம் 4-வது தெருவில் உள்ள சமுதாய நலக்கூட மண்டபத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் இசக்கிராஜன், பொருளாளர் செண்பக நாராயணன், துணைத் தலைவர் சுப்புராஜ், துணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகைத் தொழிலாளர் மத்திய சங்க மாநில தலைவர் சங்கரன் வரவேற்று பேசினார்.

    விழாவை முன்னிட்டு விஸ்வ பிரம்ம ரத ஊர்வலம் நடைபெற்றது. ராமசாமியாபுரம் 4-வது தெருவில் உள்ள விஸ்வகர்ம சமுதாய நலக்கூடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய ரதவீதி வழியாக மீண்டும் சமுதாய நலக்கூடத்தை வந்தடைந்தது. இதில் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், வீரபாண்டியன், முத்துவேல், அருள் கணேசன், பரமசிவன், அருணாச்சலம், சிவக்குமார், சிங்கார வடிவேலு, முருகையா, சக்திவேல், வீரபுத்திரன், கைலாசம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா சங்கர் நன்றி கூறினார்.

    • ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வீரா, வீர மணிகண்டன், கோமதிநாயகம், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய தரச்சான்று வழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது.
    • சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக ராஜா வெற்றி பெற்றது முதல் சங்கரன்கோவில் மருத்துவ மனைக்கு தேவையான வசதி களை ஏற்படுத்தி தர வேண்டுமென அமைச்சர்கள், அதிகாரிகளிடம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

    காசநோய் கண்டறியும் கருவி, ரூ. 9 கோடியில் மருத்துவ கட்டிடங்கள், தீவிர சிகிச்சை பிரிவு, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 500 படுக்கை வசதிகள் மற்றும் படுக்கை விரிப்புகள், நீர்த்தேக்கத் தொட்டி, ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை கூடம், ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சலவை எந்திரம் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதி, அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் தேசிய தரச்சான்றுவழங்குவதற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடக்க உள்ளது. இந்த ஆய்வை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்து மருத்துவர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நடைபெற்று வரும் பணிகள், நடத்த முடிந்த பணிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் பெறலாம்.

    தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு, குடலிறக்கம், கடுமையான எலும்பு முறிவு, மார்பக புற்றுநோய் கட்டி அகற்றல், ஹீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் செய்து வருகின்றனர். டான்சில் அறுவை சிகிச்சை என்பது மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 நோயாளி களுக்கு வெற்றிகரமாக தைராய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது முழு குணமடைந்து உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்த சங்கரன்கோவில் மருத்து வமனை மருத்துவர்க ளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வின் போது தென்காசி மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், அரசு சங்கரன்கோ வில் மருத்துவமனை தலைமை குடிமை மருத்துவர் செந்தில் சேகர், தி.மு.க. மாணவரணி வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், வக்கீல் சதீஷ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
    • சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்றார்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டி ஆலமநாயக்கபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்தனர். மாணவர்கள் ஜூனியர் பிரிவில் சந்தன முத்து வைரவன், சீனியர் பிரிவில் பவேஷ், சூப்பர் சீனியர் பிரிவில் பிரகாஷ் ஆகிய 3 பிரிவிலும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.

    இதே போன்று பெண்கள் சூப்பர் சீனியர் பிரிவில் முத்துமலர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். வட்டார அளவில் சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • ஆய்வின்போது கட்டிடங்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
    • பஸ் நிலையப் பணிகள் 9 மாதங்களுக்குள் முடிவடைந்து விடும்.

    சங்கரன்கோவில்:

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், சங்கரன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. பத்மாவதி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார், சதன் திருமலை குமார், ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினர்.

    தொடர்ந்து கட்டிடங்களின் தரம் உள்ளிட்ட வைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் பேசுகையில், சங்கரன்கோவில் பஸ் நிலையப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 9 மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றார்.

    தொடர்ந்து நெல்லை நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், பொறியாளர் எட்வின், ஒப்பந்ததாரர் விக்னேஷ் ஆகியோர்களிடம் தரமான முறையில் எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டிட பணிகளை முறையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் அரசு துறை அதிகாரிகள்பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற்பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.
    • பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் செந்தில் ஆறுமுகம் விளக்கி கூறினார்.

    சங்கரன்கோவில்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்ட அளவில் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு மின்பகிர்மானத்தில் பாது காப்புடன் பணிபுரிவது பற்றிய பயிற்சி வகுப்பு சங்கரன்கோவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பிற்கு சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய ஆலோசனைகள் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் கோட்ட உதவிசெயற் பொறி யாளர்கள், உதவி பொறி யாளர்கள் மற்றும் கள ப்பணி யாளர்கள் கலந்து கொண்டனர். நெல்லை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாடு பிரிவு ஏற்பாட்டின் பேரில், நெல்லை மண்டல பாது காப்பு அதிகாரி செந்தில் ஆறுமுகம் பயிற்சி வகுப்பினை பற்றி காணொலி காட்சி மூலம் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு விளக்கி கூறினார். நிலை இணைப்பு செய்ய வேண்டிய அவசியம், கையுறை பயன்படுத்த வேண்டிய அவசியம், இடுப்பு கயிறு பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் பற்றி விளக்கி கூறினார். பணிகளின் போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அப்பொழுது தான் சிந்தனை சிதறல் இல்லாமல் பணி புரிய முடியும் என்றார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை நகர் புறம் I பிரிவு உதவி மின் பொறியாளர் கருப்பசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நெசவாளர் காலனி பூங்காவில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
    • இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் உள்ள நெசவாளர் காலனி பூங்காவில் விதைப்போம் வளர்ப்போம் குழு சார்பில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதில் பசியில்லா சங்கரன்கோவில் அறக் கட்டளை நிறுவனர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாட்டினை சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மற்றும் குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர். கோவில்பட்டி வட்டம் இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.

    • முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விழாவில் கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • விழாவின் போது பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் அ.தி.மு.க. சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி பொருளாளர் மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், தலைமை நிலைய பேச்சாளர்கள் கணபதி, ராமசுப்பிரமணியன், நகர அவை தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், நகர பேரவை செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது, எழில்நகர் கிளை செயலாளர் பாபு, களப்பாகுளம் கிளை செயலாளர் பசும்பொன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் முருகன், செந்தில்குமார், குட்டி மாரியப்பன், சிவஞான ராஜா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு வ.உ.சி. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • முகாமில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யினர் ஆகியோர் இணைந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

    முகாமிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்கு மார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பத்மா வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் திட்ட விளக்க உரையாற்றினார். நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் வரவேற்றார். இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதி உடைய நபர்களை நேர்காணல் செய்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர். இதில் பள்ளி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், பள்ளி முதல்வர் சுருளிநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தனியார் நிறுவ னங்களின் அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×