search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  திராவிட மாடல் அரசின் சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள்
    X

    சங்கரன்கோவிலில் திராவிட மாடல் அரசின் சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள்

    • ராஜா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வீரா, வீர மணிகண்டன், கோமதிநாயகம், ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மகளிர் உரிமை திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×