search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டார அளவில் தடகளப் போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை
    X

    வட்டார அளவில் தடகளப் போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை

    • போட்டியில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
    • சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்றார்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டி ஆலமநாயக்கபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்தனர். மாணவர்கள் ஜூனியர் பிரிவில் சந்தன முத்து வைரவன், சீனியர் பிரிவில் பவேஷ், சூப்பர் சீனியர் பிரிவில் பிரகாஷ் ஆகிய 3 பிரிவிலும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.

    இதே போன்று பெண்கள் சூப்பர் சீனியர் பிரிவில் முத்துமலர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். வட்டார அளவில் சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×