search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாஷ் மானசரோவர் யாத்திரை"

    செப்டம்பர் முதல் வாரத்தில் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #KailashMansarovarYatra #Rahulgandhi
    புதுடெல்லி:

    கர்நாடகம் மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே முடிவு செய்திருந்தார். இதற்காக, சிறப்பு அனுமதி கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார்.

    இந்நிலையில், அடுத்த வார இறுதியில் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அந்த கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் முதல் வாரத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார். நேபாளம் வழியாக செல்வது தொடர்பாக வெளியுறவு துறையிடம் அனுமதியும் கேட்டுள்ளார். இதையடுத்து, அடுத்த வாரம் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #KailashMansarovarYatra #Rahulgandhi
    கைலாஷ் மானசரோவருக்கு சுற்றுலா சென்ற திருப்பூர் பக்தர்கள் பத்திரமாக உள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    சீனா-நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    இங்கு சுற்றுலா செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலைலயில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரையாக சென்றார்கள்.

    தற்போது நேபாள நாட்டின் மலை பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தமிழக பக்தர்கள் 24 பேர் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களில் திருப்பூரை சேர்ந்த 12 பக்தர்களும் ஆவார்கள்.

    திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டதின் சார்பில் கைலாய மலைக்கு யாத்திரை சென்றனர். தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் தலைவர் குமாரவேல் கூறியதாவது-

    திருப்பூர் குமார் நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து 12 பேர் மற்றும் சேலம், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 18 பேர் கடந்த 23-ந் தேதி ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் சார்பில் திருஞானானந்தா சாமிகள் தலைமையில் கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர்.

    அவர்கள் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் திருப்பூர் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நோபாள நாட்டில் சிமிகோட் பகுதியில் கடும் மேகமூட்டம், பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளனர்.

    அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் என்னிடம் பேசினார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி இருக்கிறார்கள்.

    அங்குள்ள நிலைமைமையும் வீடியோ காட்சியாக படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளனர். பனிப்பொழிவு குறைந்ததும் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. #KailashMansarovarYatra
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி ரகுபர் தாஸ் தலைமை தாங்கினார். அப்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முதல் மந்திரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுற்றுலா துறையிடம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.

    அந்த படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றார். #KailashMansarovarYatra
    மானசரோவர் யாத்திரைக்கு சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 1430 இந்திய யாத்ரீகர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. #KailashMansarovar #KailashMansarovarpilgrims #Nepalpilgrimsevacuation
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் சிக்கி கொண்டனர்.

    குறிப்பாக, ஹில்ஸா மற்றும் சிமிகோட் மாவட்டத்தில் சிக்கி தவித்த அவர்களை மீட்கும் பணியில் நேபாள நாட்டின் விமானப்படை மற்றும் தனியாருக்கு சொந்தமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.



    கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தது. கடைசியாக 160 பேர் கொண்ட குழுவினர் இன்று மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட 1430 யாத்ரீகர்களும் நேபாளத்தில் உள்ள இந்திய எல்லையோர நகரங்களான நேபாள்கஞ்ச் மற்றும் சுர்கேட் நகரங்களில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.

    அவர்களுக்கு உதவி செய்வதற்காக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என இங்குள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KailashMansarovar   #KailashMansarovarpilgrims #Nepalpilgrimsevacuation
    மானசரோவர் யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய மேலும் 275 இந்தியர்கள் நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    காத்மண்டு:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஹில்சா பகுதியில் சிக்கித் தவித்த இந்திய பக்தர்கள் மேலும் 275 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இது தொடர்பாக நேபாள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 3 நாள்களில் மட்டும் இந்திய பக்தர்கள் 675 பேர் ஹில்சாவில் இருந்து சிமிகோட் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த 3 நாள்களில், மீட்புப் பணியில் 53 சிறிய விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும் 142 முறை ஈடுபடுத்தப்பட்டது. ஹில்சா, சிமிகோட்டுக்கு இடையே தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது என் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    மானசரோவர் யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    காத்மண்டு:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், நேபாளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையிலும், நேபாள்கஞ்ச் - சிமிகோட் - ஹில்சா மலைப்பகுதியில் சிக்கியிருந்த 250 இந்தியர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசின் நடவடிக்கையால் நேபாள அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Mansarovar #PilgrimsRescue
    மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் பரிதவிக்கும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் 96 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். #MansarovarYatra
    காத்மாண்டு:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்தது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கர்னாலி மாகாணத்தில் அமைந்துள்ள சர்கெட் எனும் பகுதியில் சிக்கித்தவித்த 96 இந்திய பக்தர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #MansarovarYatra 
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #MEA #Rahulgandhi
    புதுடெல்லி:  

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்வதற்காக சிறப்பு அனுமதி கோரி மத்திய  வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ராகுலின் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.


      
    இந்நிலையில், ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வது தொடர்பான விண்ணப்பம் எதையும் நாங்கள் பெறவில்லை என தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #RaveeshKumar #Rahulgandhi
    ×