search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu devotees"

    கைலாஷ் மானசரோவருக்கு சுற்றுலா சென்ற திருப்பூர் பக்தர்கள் பத்திரமாக உள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    சீனா-நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    இங்கு சுற்றுலா செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலைலயில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரையாக சென்றார்கள்.

    தற்போது நேபாள நாட்டின் மலை பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தமிழக பக்தர்கள் 24 பேர் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர்களில் திருப்பூரை சேர்ந்த 12 பக்தர்களும் ஆவார்கள்.

    திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஞானாலயா வள்ளலார் கோட்டதின் சார்பில் கைலாய மலைக்கு யாத்திரை சென்றனர். தற்போது நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் தலைவர் குமாரவேல் கூறியதாவது-

    திருப்பூர் குமார் நகர் உள்பட பல பகுதிகளில் இருந்து 12 பேர் மற்றும் சேலம், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 18 பேர் கடந்த 23-ந் தேதி ஞானாலயா வள்ளலார் கோட்டத்தின் சார்பில் திருஞானானந்தா சாமிகள் தலைமையில் கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா புறப்பட்டனர்.

    அவர்கள் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் திருப்பூர் வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் நோபாள நாட்டில் சிமிகோட் பகுதியில் கடும் மேகமூட்டம், பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளனர்.

    அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ மூலம் என்னிடம் பேசினார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி இருக்கிறார்கள்.

    அங்குள்ள நிலைமைமையும் வீடியோ காட்சியாக படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளனர். பனிப்பொழிவு குறைந்ததும் அவர்கள் திருப்பூர் திரும்புவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×