search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kailash Mansarovar Yatra"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் யாத்திரையில் 34 கி.மீ தூரத்தினை 13 மணி நேர மலையேற்றத்தில் கடந்துள்ளார். #RahulGandhi #KailashMansarovarYatra
    புதுடெல்லி:

    கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த சில தினங்களுக்கு முன் மானசரோவர் பகுதியில் தங்கி அங்குள்ள மானசரோவர் ஏரியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.  

    அதில், ‘மானசரோவர் ஏறி மிகவும் மென்மையானது சாந்தம் மற்றும் அமைதியாக உள்ளது. அது எல்லாவற்றையும் கொடுக்கிறது. இந்த ஏரியில் இருந்து எவரும் நீர் அருந்தலாம். அதில் வெறுப்பு காட்டுவது கிடையாது. அதனால்தான் நாம் இந்த நீர்நிலையை வணங்குகிறோம்.’ என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் கைலாஷ் யாத்திரையின் போது 34 கி.மீ தூரத்தினை 13 மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்துள்ளதாகவும் இதன் மூலம், பல ஆயிரம் கலோரிகள் குறைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #KailashMansarovarYatra
    கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரையின் துவக்கத்தில் ராகுல்காந்தி அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்ததையடுத்து அவர் சாப்பிட்ட ஓட்டல் விளக்கம் அளித்தது. #RahulGandhi #MansarovarYatra
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ந் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றார். அன்று இரவு அங்குள்ள வூட்டு ஓட்டலில் ராகுல்காந்தி தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட்டார்.

    அப்போது அவர் அசைவ உணவு வகைகளையும், சிக்கன் சூப்பும் சாப்பிட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

    அந்த ஓட்டல் ஊழியரிடம் பேட்டி எடுத்து செய்தியை வெளியிட்டு இருந்தது.

    இதுபற்றி டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி கூறும் போது, “ராகுல்காந்தி புனித யாத்திரை செல்லும் போது அசைவ உணவை சாப்பிட்டதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தி விட்டார். அவர் அசைவம் சாப்பிட்டதில் தவறு இல்லை. புனித யாத்திரை சென்றபோது அசைவம் சாப்பிட்டது கண்டிக்கத்தக்கது” என்றார்.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து வூட்டு ஓட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ராகுல்காந்தி சைவ உணவுகளையே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே இமாச்சல பிரதேச மாநிலம் ஜாவாலி தொகுதி காங்கிரஸ் முன்னாள் நீரஞ்பார்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணரின் கதையை விளக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. #RahulGandhi #MansarovarYatra 
    கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. #KailashMansarovarYatra
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி ரகுபர் தாஸ் தலைமை தாங்கினார். அப்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முதல் மந்திரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுற்றுலா துறையிடம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும்.

    அந்த படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றார். #KailashMansarovarYatra
    மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் பரிதவிக்கும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் 96 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். #MansarovarYatra
    காத்மாண்டு:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்தது. சிமிகோட் மற்றும் ஹில்சா பகுதிகளில் இருந்து 143 இந்திய பக்தர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தீனதயாளன் என்பவர் உள்பட 19 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்காக 7 சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கர்னாலி மாகாணத்தில் அமைந்துள்ள சர்கெட் எனும் பகுதியில் சிக்கித்தவித்த 96 இந்திய பக்தர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #MansarovarYatra 
    நேபாளம் நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைலாஷ் புனித யாத்திரை சென்ற இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது. #MansarovarYatra
    காத்மாண்டு:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 625 பக்தர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிமிகோட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை  செய்து கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்துள்ளது.

    இதுவரை 2 விமானங்கள் மூலம் 104 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கித்தவிக்கும் யாத்ரீகர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MansarovarYatra 
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #MEA #Rahulgandhi
    புதுடெல்லி:  

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்வதற்காக சிறப்பு அனுமதி கோரி மத்திய  வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், ராகுலின் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.


      
    இந்நிலையில், ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பம் எதுவும் பெறவில்லை என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வது தொடர்பான விண்ணப்பம் எதையும் நாங்கள் பெறவில்லை என தெரிவித்துள்ளார். #KailashMansarovarYatra #RaveeshKumar #Rahulgandhi
    ×