search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.சி.வேணுகோபால்"

    • மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது
    • ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்?

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல்களை பிரதமருக்கு அனுப்பப்போவதாகவும், மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்? இந்த நாட்டில் அதிகம் பொய் சொல்பவர் அவர்தான் என்பதை அவரது நேற்றைய பேச்சு உணர்த்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மதவாத உணர்வுகளைத் தூண்டி இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்ட பிறகு பிரதமர் இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்களை கையாள்கிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேரில் சந்தித்து விளக்குவதற்காக பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு வழங்குவோம். எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாவற்றிலும் பொய் சொல்ல பிரதமருக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளதா? எல்லாவற்றிலும் தலையிடும் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் ஏன் மவுனம் காக்கிறது" என்று தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும்.
    • நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துகிறோம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர், கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார்.

    மாலை 4.30 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் கேரளா மாநிலத்தில திருவனந்தபுரத்தில் தமது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கட்சித் தலைவரை ஜனநாயக முறையில் தேர்வு செய்யும் நிகழ்வில் பங்கேற்றிருப்பது என்பது ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் பெருமையளிக்கும் தருணம் என்றார்.

    காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க முடியும் என்றும், நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியில் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபட கூறினார். இதனிடையே, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படியே வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திரிவேதி குறிப்பிட்டார். இதுபோன்ற தேர்தல் வேறு எந்த கட்சியிலும் நடந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    ×