search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை தொழிலாளர்கள்"

    • விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி இருதயராணி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் படை உறுப்பினர்களுக்கான காலாண்டுக் கூட்டம் நடந்தது.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கை மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு விவரம் குறித்து விருதுநகர் மாவட்ட குழந்தைத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர்/தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    தொழிலாளர் துறையால் 1.10.2021 முதல் 31.10.2022 வரை கடைகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய ஒரு நிறுவனம் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 39 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 5 கடைகள் நிறுவனங்கள் மீது ரூ.85 ஆயிரம் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.

    18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 32 நிறுவனங்கள் மீது ரூ.2 லட்சத்து60 ஆயிரம் விருதுநகர் மாவட்ட கலெக்டரால் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறையால் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பாய்வில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முரணாக 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 8 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீதும் தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.

    மேற்படி காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 2 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்திய 4 தொழிற்சாலைகளின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டது.

    சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா, விருதுநகர் மற்றும் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர்கள் சித்ரா, ஸ்ரீதரன், இசக்கிராஜா மற்றும் தொழிலாளர் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    1986-ம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் கோவை மாவட்டத் தில் கடைகள், உணவு நிறுவனங்களில் கடந்த ஜூலை மாதம் 3.50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஜூலை மாதத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களை பணியமர்த்திய 9 நிறுவனம் மீது கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை முடிந்து ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த 11-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் ரெயில்வேசைல்டு லைன் மூலம் பெறப்பட்ட புகார் தொடர்பாக சுக்கிரவார்பேட்டையில் ஆய்வு செய்த போது 2 நகை பட்டறைகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த வளரிளம் பருவத்தினர் 7 பேர், 10 வயதுக்குட்பட்ட ஒருவர் என 8 பேர் மீட்கப்பட்டனர்.

    12-ந்தேதி சிவானந்தா காலனியில் 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தை மீட்கப்பட்டு நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர் பணியாற்றுவது தெரியவந்தால் https://pencil.gov.in என்ற இணையதள முகவரியி லும், 0422 2241136 என்ற தொலை பேசி எண்ணிலும், கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை 18004252650 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

    • அதிகாரிகள் திடீர் ஆய்வு
    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டு தலா 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது 1986 -ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் மேலும் நீதிமன்றத்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபதாரம் அல்லது ஆறு மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும்.

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரையின்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொ டரப்பட்டன.

    வளரிளம் தொழி லாளர்க ளையும் மீட்கப்பட்டன. இதில் மூன்று உரிமையா ளர்களின் மீதும் நீதிம ன்றத்தால் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க ப்பட்டு ள்ளதாக திருவண்ணா மலை தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்து ள்ளார்.

    ×