search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 கடைகள் மீது வழக்கு
    X

    குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 கடைகள் மீது வழக்கு

    • அதிகாரிகள் திடீர் ஆய்வு
    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டு தலா 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது 1986 -ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் மேலும் நீதிமன்றத்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபதாரம் அல்லது ஆறு மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும்.

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரையின்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொ டரப்பட்டன.

    வளரிளம் தொழி லாளர்க ளையும் மீட்கப்பட்டன. இதில் மூன்று உரிமையா ளர்களின் மீதும் நீதிம ன்றத்தால் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க ப்பட்டு ள்ளதாக திருவண்ணா மலை தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×