search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை தொழிலாளர்கள்"

    • 6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.
    • கோழிப்பண்ணை நிர்வாகத்தினரை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், குண்டடம், பெல்லம்பட்டியில் கோழிப்பண்ணை ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக திருப்பூர் சைல்டு லைனுக்கு புகார் வந்தது.இதனையடுத்து சைல்டு லைன் மற்றும் குண்டடம் போலீசார், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்வதும், குடும்பத்தை சேர்ந்த 13 முதல், 17 வயது உடைய 6 பேர் பள்ளிக்கு செல்லாமல் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    6 பேரையும் சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தினர்.வேலைக்கு அனுப்ப கூடாது என்றும், பள்ளிக்கு அனுப்ப அறிவுறுத்தி பெற்றோரிடம் எழுதி வாங்கியும் குழந்தைகளை அனுப்பி வைத்தனர். மேலும் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் மீது தொழிலாளர் நல அதிகாரிகள் மற்றும் குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்
    • 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

     திருப்பூர் : 

    தொழிலாளர் ஆணையர்(சென்னை) அதுல்ஆனந்த் அறிவுரைப்படி, மாவட்ட ெதாழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் திருப்பூர் மாவட்ட தடுப்பு படையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றும் நோக்கில் மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் ஒரு கடையில் ஒரு குழந்தை தொழிலாளியும், இறைச்சி மற்றும் மருந்து கடைகளில் தலா ஒரு வளரிளம் பருவத்தினர் என மொத்தம் 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமா்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை திருப்பூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர்.
    • 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் பெரிய கடைவீதி செட்டி வீதியில் உள்ள நகைக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் ஓட்டல் மற்றும் நகைக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஓட்டலில் பணி செய்த 3 சிறுவர்கள், நகைக்கடையில் பணியாற்றிய 4 சிறுவர்களை மீட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் லட்சுமி நாராயணன், ஓட்டல் மேலாளர் முகமத் ஹரீஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
    • குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

    சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ேஹாம், மருத்துவ பரிசோதனை கூடங்கள் என 103 நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

    பொட்டல பொருட்கள் விதிப்படி நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், காலணிகள், சிகரெட், லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என 66 நிறுவன ங்களில் ஆய்வு செய்ததில் 2 நிறுவன ங்களில் முரண்பாடு அறியப்பட்டது.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பாக 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் குறைந்த பட்ச ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்காத 1 நிறுவனம் மீது நடவடிக்கைக்கு ஈரோடு தொழிலாளர் இணை ஆணையருக்கு படிவம் தாக்கல் செய்துள்ளனர்.

    குழந்தை தொழிலாளர்கள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என்பது குறித்து 415 நிறுவனங்களில் நடந்த கூட்டாய்வில் குறைபாடு கண்டறியப்படவில்லை. அந்நிறுவனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆய்வு குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிக பட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணி அமர்த்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது கைது செய்யப்பட்டு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • போலீசார் உறுதிமொழி ஏற்றனர்
    • அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் போலீசார் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா,குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் "குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி" ஏற்கப்பட்டது.

    • கவுதம் புத்தா நகர் காவல் ஆணையர் லக்ஷ்மி சிங் அறிவுறுத்தலின்படி இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

    குழந்தைகள், சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதும், அவர்களை பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்துவதும் குற்றச்செயலாகும். ஆனாலும், ஆங்காங்கே குழந்தைகள் வேலைகளில் அமர்த்தப்படுவதும், சாலைகளிலும், சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்படுவதும் நாடு முழுவதும், குறிப்பாக நகரங்களிலும், பெருநகரங்களிலும் நடந்தவண்ணம் உள்ளது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன.

    அவ்வகையில், நேற்று ஒருநாள் மேற்கொண்ட நடவடிக்கையில், தலைநகர் டெல்லிக்கு அருகே நொய்டாவில், பிச்சை எடுப்பதிலும், கூலி வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்ட 25 குழந்தைகள், காவல் துறையால் மீட்கப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்ட அறிக்கை:

    செவ்வாயன்று, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கவுதம் புத்தா நகர் காவல் ஆணையர் லக்ஷ்மி சிங் அறிவுறுத்தலின்படி இந்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மனிதர்கள் கடத்தல் தடுப்பு பிரிவு, சைல்ட் லைன் நொய்டா, மாவட்ட நன்னடத்தை கண்காணிப்பு அலுவலகம், மற்றும் தொழிலாளர்கள் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஜூன் 1 முதல் ஜுன் 30 வரை, குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் குழந்தை பிச்சைக்காரர்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நொய்டாவின் பல மார்க்கெட்டுகளிலும், சாலை சந்திப்புகளிலும் இருந்து 25 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

    சிறார் பணியமர்த்தல் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2016ன் படி, 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துதலும் மற்றும் 14-லிருந்து 18 வயது வரையுள்ளவர்களை ஆபத்தான வேலைகளிலும், செயல்களிலும் ஈடுபடுத்தலும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.

    • ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்து உள்ளன. தி.மு.க. அரசின் இந்தச் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தி.மு.க. அரசின் இந்தச் சட்ட விரோதமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    நாட்டின் நலனையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஆவின் நிறுவனம் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடமாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி எம்.வி.எஸ். நகரில் தனியாருக்கு சொந்தமான பிரபல பன்னாட்டு நிறுவனமான பெப்சி நிறுவனத்தின், குளிர்பான சேமிப்பு கிடங்கு உள்ளது.இதில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தி இருப்பதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து மாவட்ட தொழிலாளர் நல துறை உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள 12 குழந்தை தொழிலாளர்கள் அங்கு பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.பின்னர் அவர்களை திருப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குழந்தை தொழிலா ளர்களை பணிக்கு அமர்த்திய அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம், முறையாக கட்டப்படாததால் கட்டடத்தின் சுவர்கள் சாய்ந்து வடமாநில தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

    • குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பி.எஸ்.என்.எல். மூலம் 155214 உருவாக்கப்பட்டு செயல்படுத்த ப்பட்டுள்ளது.
    • கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு பி.எஸ்.என்.எல். மூலம் 155214 உருவாக்கப்பட்டு செயல்படுத்த ப்பட்டுள்ளது.

    கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்த ப்பட்டுள்ள 155214 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
    • வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் லூயிஸ்வில்லே உணவக உரிமையாளரும் ஒருவர்.

    இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூறியிருப்பதாவது:-

    லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 16 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களை அனுமதிக்கப்பட்டதை நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளது. அவர்களில் இரண்டு பேர் 10 வயது சிறுவர்கள். அவர்கள் சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரை வேலை செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள், ஆர்டர் செய்யப்படும் உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பது, கடையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்துள்ளனர்.

    இவ்வாறு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    தொழிலாளர் நலத்துறை கூறியுள்ள இரண்டு 10 வயது சிறுவர்களும், உணவகத்தின் மேலாளரை பார்க்க வந்த அவரது பிள்ளைகள் என்றும், அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் உணவக உரிமையாளர் சீன் பாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமை-குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
    • புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டை கொத்த டிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.

    தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களின்படி, கட்டணமில்லா தொலை பேசி உதவி எண் (1800 4252 650) ஏற்கனவே அறிமுக ப்படுத்தப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழி லாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொது மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 என்ற எண் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரி விக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 18 வயது நிறைவடைந்தபின் குழந்தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
    • 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.

     திருப்பூர்:

    குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித தொழிலிலும் அமர்த்துவது குற்றமாகும். 14 வயது முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்ந்தும் நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    அதன்படி திருப்பூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகளில் 2 குழந்தை தொழிலாளர்களின் வழக்குகள் முடிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என விதிக்கப்பட்ட அபராத தொகை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் மறுவாழ்வு கணக்கில் செலுத்தப்பட்டது.

    குழந்தை தொழிலாளியாக மீட்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்காக அரசின் பங்குத்தொகையாக ரூ.15 ஆயிரம், பெற்று குழந்தைகள் மறுவாழ்வு கணக்கில் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரையில் 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டித்தொகை கிடைக்கும் வகையில் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு, குழந்தையின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 18 வயது நிறைவடைந்தபின் குழந்–தையின் நலத்திற்கு அந்த தொகை முழுவதும் வங்கிக்கணக்–கில் செலுத்தப்படும்.

    அவ்வாறு 18 வயது பூர்த்தியடையாத சிறுவன் மீட்கப்பட்டு அந்த சிறுவனுக்கு ரூ.35 ஆயிரம் நிரந்தர வைப்பு வைக்கப்பட்டு அதற்கான ஆணையை கலெக்டர் வினீத் சிறுவனிடம் வழங்கினார். இதுபோல் மீட்கப்பட்ட மற்றொரு 18 வயது பூர்த்தியடைந்த சிறுவனுக்கு ரூ.47 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தும் ஆணையை கலெக்டர் வழங்கினார்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் அமர்த்தக்கூடாது.

    இந்த தகவலை திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    ×