search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bondage"

    • கொத்தடிமை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
    • அலுவலர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கான ஒருநாள் பயிற்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகை யில், மாவட்டத்தில் கொத்த டிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976-ன் படி போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறதா? என்பதை மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    அதற்கேற்ப அலுவ லர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ராஜா, ஜப பிரின்ஸ், எசக்கியேல், மலர்விழி ஆகியோர் பணியாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கினர்.

    • கொத்தடிமை தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது.
    • குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

    மதுரை

    குழந்தை தொழிலாளரை பணி அமர்த்துவது, வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது, தொழிலாளரை கொத்தடிமையாக நடத்துவது ஆகியவை சட்டப்படி குற்றம். தமிழகத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க ஏற்கனவே 1800 4252 650 தொலைபேசிஎண் பயன்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய கட்டணமில்லா தொலைபேசிஎண்: 155214 உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமை-குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
    • புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டை கொத்த டிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.

    தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களின்படி, கட்டணமில்லா தொலை பேசி உதவி எண் (1800 4252 650) ஏற்கனவே அறிமுக ப்படுத்தப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழி லாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொது மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 என்ற எண் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரி விக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×