search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children's work"

    • ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    1986-ம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் கோவை மாவட்டத் தில் கடைகள், உணவு நிறுவனங்களில் கடந்த ஜூலை மாதம் 3.50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஜூலை மாதத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களை பணியமர்த்திய 9 நிறுவனம் மீது கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை முடிந்து ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த 11-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் ரெயில்வேசைல்டு லைன் மூலம் பெறப்பட்ட புகார் தொடர்பாக சுக்கிரவார்பேட்டையில் ஆய்வு செய்த போது 2 நகை பட்டறைகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த வளரிளம் பருவத்தினர் 7 பேர், 10 வயதுக்குட்பட்ட ஒருவர் என 8 பேர் மீட்கப்பட்டனர்.

    12-ந்தேதி சிவானந்தா காலனியில் 4 சக்கர வாகனம் உதிரிபாகம் விற்பனை கடையில் ஒரு வெளிமாநில குழந்தையை பணியமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தை மீட்கப்பட்டு நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளர் பணியாற்றுவது தெரியவந்தால் https://pencil.gov.in என்ற இணையதள முகவரியி லும், 0422 2241136 என்ற தொலை பேசி எண்ணிலும், கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகார்களை 18004252650 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

    • 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.
    • குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.

    திருப்பூர்:

    குழந்தைகள் மற்றும் வளரினம் பருவத்தினர் பணியமர்த்தப்படுவதை தடுக்கும் நோக்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, குழந்தை தொழிலாளர் முறை விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் அமைப்பு, மரியாலயா தொண்டு நிறுவனம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பங்கேற்று, உறுதிமொழி ஏற்றனர்.

    மாவட்டத்தில்குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது தொடர்பான, விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, துண்டு பிரசுரம் வினியோகம், விழிப்புணர்வு பதாகை வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.குழந்தை மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் சட்டப்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வகையிலும் பணியில் அமர்த்தக்கூடாது. மேலும், 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவ னங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், அபாயகரமான தொழிலில், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரையும் பணிகளில் அமர்த்த வேண்டாம் எனதொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

    ×