search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Labor"

    • விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் சிவகங்கைதொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள்,மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 43 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் ராஜ்குமார் தெரிவித்தார்.

    • 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.
    • குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.

    திருப்பூர்:

    குழந்தைகள் மற்றும் வளரினம் பருவத்தினர் பணியமர்த்தப்படுவதை தடுக்கும் நோக்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, குழந்தை தொழிலாளர் முறை விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் அமைப்பு, மரியாலயா தொண்டு நிறுவனம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பங்கேற்று, உறுதிமொழி ஏற்றனர்.

    மாவட்டத்தில்குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவது தொடர்பான, விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, துண்டு பிரசுரம் வினியோகம், விழிப்புணர்வு பதாகை வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.குழந்தை மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் சட்டப்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எவ்வகையிலும் பணியில் அமர்த்தக்கூடாது. மேலும், 14 முதல், 18 வயது வரையுள்ள வளரினம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    குற்ற செயலின் அடிப்படையில், இருவேறு தண்டனையும் வழங்கப்படலாம்.மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவ னங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், அபாயகரமான தொழிலில், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரையும் பணிகளில் அமர்த்த வேண்டாம் எனதொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.

    ×