search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம்"

    • நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி சேரன்மகாதேவியில் 8.4 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்ததது.
    • அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போய்விட்டது.

    இந்நிலையில் நேற்று இந்த மாவட்டங்களில் திடீரென மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மதியத்திற்கு பிறகு லேசான சாரல் பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, கன்னடியன், அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பகுதிகளில் ஏராளமான ஏக்கர் நிலங்களில் நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழையை நம்பி அவர்கள் பயிரிட்ட நிலையில், மழை குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் தற்போது பெய்த சாரல் மழையால் அவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி சேரன்மகாதேவியில் 8.4 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்ததது. அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 10.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே அணை பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக காக்காச்சியில் 48 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதுதவிர நாலுமுக்கில் 41 மில்லிமீட்டரும், ஊத்து, மாஞ்சோலையில் தலா 32 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் பெய்த திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகரில் பேட்டை முதல் தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, எஸ்.என். ஹைரோடு வரையிலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதுதவிர திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டி வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையினால் மெயினருவிக்கு தண்ணீர் அதிகரித்தது.

    இன்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவியில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடி பகுதியில் 30 மில்லிமீட்டரும், தென்காசியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதுதவிர ராமநதி, குண்டாறு, சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது. ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. வைப்பரில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், எட்டையபுரம், விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. தூத்துக்குடி மாநகர பகுதியில் 8.2 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    • குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுமியை மீட்ட வாலிபருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பது மகன் விஜயகுமார் (வயது24).

    இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜயகுமார் தனது காரில் சவாரி ஏற்றிக்கொண்டு பழைய குற்றாலத்திற்கு சென்றார்.

    அங்கு காரை நிறுத்திவிட்டு விஜயகுமார் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹரிணி என்ற 4 வயது சிறுமி திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 50 அடி பள்ளத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தார்.

    அதைப் பார்த்த விஜயகுமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், கருங்கல் பாறை வழியாக 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார்.

    குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.

    தன்னுடைய உயிரை பொருட்படுத்தாத 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மேலும் விஜயகுமாருக்கு பொது மக்களின் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

    தனது உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய அசாத்திய இளைஞர் விஜயகுமாரின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது.
    • குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    • திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இவ்விழாவானது 10 நாட்கள் நடைபெறுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் தொடக்க நாளில் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவானது 10 நாட்கள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்குற்றாலநாதசுவாமியை தரிசனம் செய்தனர்.

    • அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக சுற்றுலா பயணிகளும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 4 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறை என்பதாலும் அங்கிருந்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக கேரள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து இன்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கேரளா மட்டுமின்றி தமிழக சுற்றுலா பயணிகளும் விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    இன்று காலையில் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.
    • சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஐந்தருவி,மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மெயினருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் அங்கு மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    • குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும்.
    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள். தற்போது சீசன் காலம் முடிந்து விட்டது. சாரல் மழை பெய்யவில்லை.

    ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. சுற்றுலா பயணிகள் இன்று அருவிகளில் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • ஹில்டன் பள்ளி செயலாள் கிரேஸ் கஸ்தூரி பெல் தொடக்க உரையாற்றினார்.
    • பள்ளி முதல்வர் ராபர்ட்பென் ஆண்டறிக்கை வாசித்தார்.

    தென்காசி:

    பழைய குற்றலாம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33- வது பெற்றோர்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஹில்டன் பள்ளி செயலாள் கிரேஸ் கஸ்தூரி பெல் தொடக்க உரையாற்றினார். பள்ளி மாணவ தலைவி ஜெயஸ்ரீ வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகவுரையை பள்ளியின் இயக்குநர் டாக்டர் பிராம்டன் ரெத்தின பெல் வழங்கியதை தொடர்ந்து பள்ளி முதல்வர் ராபர்ட்பென் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவில் பள்ளி தாளாளர் ஆர்.ஜெ.வி.பெல், நன்றி கூறினார்.

    • குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது.
    • ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அணை பகுதியில் லேசான மழை பெய்கிறது. நெல்லையில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டுவிட்டு லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று காலை சிறிது நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் காலை வரையிலும் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் கொட்டியது. மேலும் ஐந்தருவியில் அனைத்து கிளைகளும் ஒன்றாக தோன்றியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலையிலும் 2 அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டி வந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குளிக்க முடியாமல் அவர்கள் அருவிக்கரைகளில் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

    அதே நேரத்தில் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலையில் இருந்தே அருவி பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    ஆலங்குளம், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. சிவகிரியில் அதிகபட்சமாக 27 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதேபோல் தென்காசியில் 19 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 12 மில்லிமீட்டரும் மழை கொட்டியது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினார் தனது முழு கொள்ளளவான 132 அடியை எட்டி நிற்கிறது. குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. ராமநதியில் 79 அடியும், கடனா அணையில் 77 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    • குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 9 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 41 அடி வரை உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 9 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 41 அடி வரை உயர்ந்துள்ளது.

    கடந்த 3-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 75 அடியாக இருந்த நிலையில் இன்று 104.60 அடியை எட்டி உள்ளது. இதேபோல் 3-ந்தேதி சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிய நிலையில் இன்று அதில் 121.95 அடி நீர் இருப்பு உள்ளது.

    இந்த அணைகளுக்கு வினாடிக்கு 2730 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1004 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 35 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 24 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று காலை வரை கருப்பாநதி பகுதியில் 27 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதேபோல் கடனாவில் 20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடனா, ராமநதி அணைகள் முழு கொள்ளளவை எட்டினாலும் அணை பாதுகாப்பு கருதி 2 அடி குறைவாகவே தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து 125 அடியாகவும், கருப்பாநதி அணையில் 64.96 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய 2 அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் அந்த அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    மெயினருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. அருவியின் மேல் பகுதியில் கனமழையால் மரத்தடிகள், கட்டைகள், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடித்து வரப்படுகின்றன. அவற்றை அருவிக்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    • விழாவில் தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார்.
    • எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

    தென்காசி:

    குற்றாலத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிகாய்) நெல்லை 4வது கோட்ட மாநாடு நடந்தது.

    தென்காசிகிளை தலைவர் ராமர் சங்க கொடியேற்றினார். மாநாடுவரவேற்பு குழு மாரியப்பன் வரவேற்றார். சங்கரன்கோவில் கிளை செயலாளர் கணேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். லிகாய் மாநில தலைவர் பூவலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். எல்.ஐ.சி.முதுநிலை கோட்ட மேலாளர் குமார், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலைக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், லிகாய் கோட்ட தலைவர் நடராஜன் லிகாய் மாநில செயலாளர் ராஜேஷ், மாநில பொருளாளர் தாமோதரன், முன்னாள் கோட்ட தலைவர் அல்அமீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    நெல்லை கோட்ட பொதுசெயலாளர் குழந்தைவேலு வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கை வாசித்தார். நெல்லை கோட்ட பொருளாளர் கென்னடி வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுசெயலாளர் கலாம் நிறைவுரை ஆற்றினார். லிகாய் தென்காசி செயலாளர் கனகராஜ் நன்றிகூறினார்.

    கூட்டத்தில் எல்.ஐ.சி. பிரிமியத்திற்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். முகவர்களுக்கான குழு காப்பீடு வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும். கேரளா போல் எல்.ஐ.சி. முகவர்களுக்க நலவாரியம் அமைத்திட வேண்டும். எல்.ஐ.சி. பத்திரத்தில் இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் அச்சிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.
    • முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 5-ந் தேதி முதல் சாரல் திருவிழா தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

    சாரல் திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலைவாணர் அரங்கத்தில் நேற்று உணவு கலை நிபுணர் பழனி முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மறந்து போன உணவுகளை மலர வைப்போம் என்ற தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார்.

    இப்போட்டியில் சுமார் 14 குடும்ப பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களது வீட்டிலேயே பாரம்பரிய உணவுகளான வேர்க்கடலை லட்டு, பொரி அரிசி குழம்பு, வெந்தயக் கலி, ஆடி கும்மாயம், நெல் சோறு, தினை சாக்கோ பால்ஸ், பலாப்பழ மைசூர்பாக், கருப்பு கவுனி சாம்பார் சாதம், குறித்த பல்வேறு பாரம்பரிய உணவுகளை சமைத்தனர்.

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஓட்டல் ட்ரிசில் சார்பாக முதல் பரிசு மீனாம்பிகைக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கினார்.

    மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 12 குடும்ப தாய்மார்களுக்கும் ஆறுதல் பரிசாக ரூ.500 க்கான கூப்பனையும் வழங்கினார்கள். தென்காசி வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, பழனி முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அதனையடுத்து பளுதூக்கு தல் போட்டி, ஆணழகன் போட்டி மற்றும் யோகா போட்டி மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டது.

    அதற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் ராஜா எம்.எல்.ஏ. மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.

    வலு தூக்குதல் போட்டியில் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு முதல் பரிசு, 2-ம் பரிசு, 3-ம் பரிசு என்று 9 பரிசுகள் வழங்கப்பட்டது.

    பின்பு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் கலைவாணர் அரங்கம் முழுவதும் பார்வை யாளர்கள் நிறைந்து காணப்பட்டனர். 

    ×