search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றப்பிரிவு"

    • நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர்
    • வாழ்முனி புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை பகுதியில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இரவு ரோந்து பணி முடிந்து தனது ஜீப்பில் பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.இன்ஸ் பெக்டர் டிரைவர் ராஜாஜீப்பை ஓட்டி வந்தார். அப்போது பண்ருட்டி - பாலூர் ரோட்டில் திருவதிகை வீரட்டானே ஸ்வரர் சன்னதி தெருவுக்கு போகும் வழியில் நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர். ஜீப்பை நிறுத்தி விசாரித்த போது காரில் இருந்த டிரைவர் இறங்கி ஓட ஆரம்பித்தார்.ஏண்டா ஓடுகிறாய் என்று கேட்ட போது நான் குடித்து விட்டு இருக்கிறேன்.அதனால் பயந்து ஓடுகிறேன் என்று கூறியுள்ளார். கார் யாருடையது ஏன் இங்கு நிற்கிறாய் என்று விசாரித்தனர். அப்போது முன்னு க்குப் பின் முரணாக கூறியு ள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். சோதனையில் அதில் நாட்டு வெடி மூட்டை, மூட்டையாக இருந்ததை கண்டு பிடித்தனர்.உடனடியாக இந்த காரை பண்ருட்டி போலீசில் நிலையத்திற்கு எடுத்துவந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் போது எனது மாமா கார் என்று கூறியுள்ளான். மாமாவுக்கு போன் போட சொல்லி கூறியுள்ளனர். போனில் சார்ஜ் இல்லை என்று பதில் அளித்துள்ளான் போனை வாங்கி சார்ஜரில் போட்டு உள்ளனர். போனில் சார்ஜ் ஏறவில்லை.சார்ஜரை மாற்றி போட்டு ள்ளனர் அப்போதும் ஏறவில்லை.பிறகு தான் தெரிந்தது அந்த போனில் பேட்டரி இல்லை என்பது. பேட்டரி தான் இல்லை என்று போனை திறந்து பார்த்தனர். அதில் சிம்கார்டும் இல்லை.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசார ணையை தீவிரப்படுத்தினர். அப்போது கடந்த11-ந் தேதிபுதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் ஒர்க் ஷாப்பில் இருந்து திருட்டுபோ ன கார் என்று தெரிய வந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் புதுச்சேரி அங்காள குப்பம் அங்காளம்மன் கோவில் தெருஜெய்சீலன் மகன் வாழ்முனி (24) என தெரியவந்தது. கடலூர்போலீஸ் சூப்பிரண்டு,பண்ருட்டி டி.எஸ்.பி.ஆகியோர் உத்தரவின பேரில் வாழ்முனி வேறு ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா?என்பது குறித்து விசாரிக்க பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் புதுவை மாநிலத்திற்கு விரைந்தனர்.

    அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்முனிபு துவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அந்த திருட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தபோது தவளக்குப்பத்தில்மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு காரை திருடியதும் தெ ரியவந்தது. இந்த காரில் நாட்டு வெடிகளை திருவதிகையில் உள்ள ஒரு வியாபாரியிடம் கொடுப்பத ற்காக வந்தபோது வழியில் ரெட்டி சாவடியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த பவுன் தங்க நகை 50 ஆயிரம் பணம் கொள்ளை அடித்தது விசாரணை யில் அம்பலமா னது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வாழ்முனியை ஒப்படைத்தனர். அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசார ணையில் மேலும் பல திட்ட தகவல்கள் அம்பலமாகும் என தெரிகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வல்லம் தெற்கு தெருவை சேர்ந்த வர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி ராணி (வயது 65). இவர், திருவந்திபுரம் கோவிலுக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் டவுன் பஸ்சில் ஏறி இறங்கி பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    • இவர்களுக்கு தீபாவளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர்.
    • கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இ

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 51). இவரது மகன் அந்தோணி செல்வராஜ் (32). இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்களிடம் தீபாவளி சீட்டு கட்டினர். இவர்களுக்கு தீபா வளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர். இதனை நம்பி அதே ஊரைச் சேர்ந்த பீட்டர் பவுல் (61), அவரது அண்ணன் ஆரோன் (65) ஆகியோர் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இதற்கான பொருட்களையோ, பணத்தையோ மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் தரவில்லை.

    இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பீட்டர் பவுல், ஆரோன் ஆகியோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, தீபாவளி சீட்டு பிடித்தவர்கள் ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய எலவனா சூர்கோட்டை போலீ சாருக்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தோணி செல்வராஜை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள மரிய தாசை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இரண்டு பேருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    • பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறித்துக் கொண்ட சிவாவை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயரத்தினம் (வயது 50).

    இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் நாடியம்மாள்புரத்தில் உள்ளது.

    இந்த சொத்தில் பங்கு கேட்டு அவரது உறவினர்கள் அவ்வப்போது தகராறு செய்து வந்தனர்.

    இந்த விவரத்தை தனது குடும்ப நண்பரான பாப்பாநாடு கிராமத்தை சேர்ந்த சிவாவிடம் தெரிவித்தார்.

    அதற்கு அவர் இந்த சொத்தை எனது பெயருக்கு ஒரு பொது அதிகார ஆவணம் எழுதி வைத்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இதனை உண்மை என்று நம்பிய ஜெயரத்தினம் தனது பேரில் இருந்த சொத்தை சிவாவிற்கு பவர் எழுதி வைத்தார்.

    ஆனால் அதன் பிறகு ஜெயரத்தினத்திற்கு தெரியாமல் அந்த இடத்தை சிவா தனது உறவினரிடம் அடமானம் வைத்தார்.

    பின்னர் அந்த இடம் இரண்டு பேருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அறிந்த ஜெயரத்தினம் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துக்களை அபகரித்துக் கொண்ட சிவா உள்பட 3 பேரை கைது செய்து எனது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்திருந்தனர்.

    மற்ற 2 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயபிரகாசை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

    • சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது.
    • சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இயங்கி வந்த வைஸ்ணவி பில்ட்ர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்தசாரதி, தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கவர்ச்சி கரமான திட்டங்களை வெளியிட்டது. அதன்படி முதலீட்டு தொகைக்கு 100 நாட்கள் முடிந்த பின் பணம் இரட்டிப்பாக கிடைக்கும், இல்லையென்றால் வீட்டுமனையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதை உண்மை என நம்பிய சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39) பார்த்தசாரதியின் நிறுவனத்தில் ரூ.8.80 லட்சம் முதலீடு செய்தார். முதிர்வு தொகையை பெற கடந்த 2018-ல் நிறுவனத்திற்கு சென்றபோது, அலுவலகம் பூட்டி கிடந்தது. மேலும் பலரிடம் இந்நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் இயங்கி வந்த அமுத சுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனமும் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்டது. பாஸ்கரன் என்பவர் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் சேமிப்பு திட்டத்தில் ரூ.3,27,200 முதலீடு செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமுத சுரபி, வைஸ்ணவி பில்டர்ஸ் அண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள், அசல் ஆவணங்களுடன் சேலம் அழகாபுரம் பஞ்சவர்ணம் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
    • இந்த நிலையில் ஆவண பட்டியலில் உள்ள முதலீட்டாளர் முகவரிகள் தவறுதலாக உள்ளது தெரிய வந்துள்ளது.

    மதுரை

    மதுரையைச் சேர்ந்த ஆலீஸ் ஜான்சிராணி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'ரெக்ஸ் லைப் கேர் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரிலேக்கா அக்ரோ பார்ம்ஸ் எஸ்டேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது, டான்பிட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    குற்றவாளிகளின் அசையும்-அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இழப்பீட்டுத் தொகை திருப்பித் தரப்பட உள்ளன. இந்த நிலையில் ஆவண பட்டியலில் உள்ள முதலீட்டாளர் முகவரிகள் தவறுதலாக உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், தபால் தந்தி நகர், சங்கர பாண்டியன் காலனியில் உள்ள மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
    • “ரிச் இந்தியா அக்ரோடெக் லிமிடெட்’’ நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை சோலை அழகுபுரம் 3-வது தெரு வ.உ.சி.தெரு, என்ற முகவரியில் குடியிருக்கும் மரியசூசை மகன் பிரகாஷ், பாலமேடு சுந்தராஜன், சங்கரன்கோவில் மாரி ச்சாமி, உடுமலைபேட்டை அய்யாசாமி, சண்முகத்தாய் ஆகியோர் பங்குதாரர்களாக கூட்டுசேர்ந்து மதுரை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் "ரிச் இந்தியா அக்ரோடெக் லிமிடெட்'' என்ற நிறுவனத்தின் முகவர்களாக இருந்தனர்.

    அவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை ஆரம்பித்து அதில் வருடாந்திர தவணை திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களை நம்ப வைத்தனர். இந்த நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த பின்னர் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு தேனி, அனஞ்சி விலக்கு, என்.ஜி.ஒ.காலனியை சேர்ந்த மோகன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்துள்ளார்.

    இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் விசாரணை முடிந்து, விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    எனவே "ரிச் இந்தியா அக்ரோடெக் லிமிடெட்'' நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, எண். 39 விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×