search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் காருடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளையன் மேலும் பல இடங்களில் கைவரிசை: போலீஸ் விசாரணையில் அம்பலம்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட காரை படத்தில் காணலாம்

    பண்ருட்டியில் காருடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளையன் மேலும் பல இடங்களில் கைவரிசை: போலீஸ் விசாரணையில் அம்பலம்

    • நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர்
    • வாழ்முனி புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை பகுதியில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இரவு ரோந்து பணி முடிந்து தனது ஜீப்பில் பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.இன்ஸ் பெக்டர் டிரைவர் ராஜாஜீப்பை ஓட்டி வந்தார். அப்போது பண்ருட்டி - பாலூர் ரோட்டில் திருவதிகை வீரட்டானே ஸ்வரர் சன்னதி தெருவுக்கு போகும் வழியில் நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர். ஜீப்பை நிறுத்தி விசாரித்த போது காரில் இருந்த டிரைவர் இறங்கி ஓட ஆரம்பித்தார்.ஏண்டா ஓடுகிறாய் என்று கேட்ட போது நான் குடித்து விட்டு இருக்கிறேன்.அதனால் பயந்து ஓடுகிறேன் என்று கூறியுள்ளார். கார் யாருடையது ஏன் இங்கு நிற்கிறாய் என்று விசாரித்தனர். அப்போது முன்னு க்குப் பின் முரணாக கூறியு ள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். சோதனையில் அதில் நாட்டு வெடி மூட்டை, மூட்டையாக இருந்ததை கண்டு பிடித்தனர்.உடனடியாக இந்த காரை பண்ருட்டி போலீசில் நிலையத்திற்கு எடுத்துவந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் போது எனது மாமா கார் என்று கூறியுள்ளான். மாமாவுக்கு போன் போட சொல்லி கூறியுள்ளனர். போனில் சார்ஜ் இல்லை என்று பதில் அளித்துள்ளான் போனை வாங்கி சார்ஜரில் போட்டு உள்ளனர். போனில் சார்ஜ் ஏறவில்லை.சார்ஜரை மாற்றி போட்டு ள்ளனர் அப்போதும் ஏறவில்லை.பிறகு தான் தெரிந்தது அந்த போனில் பேட்டரி இல்லை என்பது. பேட்டரி தான் இல்லை என்று போனை திறந்து பார்த்தனர். அதில் சிம்கார்டும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசார ணையை தீவிரப்படுத்தினர். அப்போது கடந்த11-ந் தேதிபுதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் ஒர்க் ஷாப்பில் இருந்து திருட்டுபோ ன கார் என்று தெரிய வந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் புதுச்சேரி அங்காள குப்பம் அங்காளம்மன் கோவில் தெருஜெய்சீலன் மகன் வாழ்முனி (24) என தெரியவந்தது. கடலூர்போலீஸ் சூப்பிரண்டு,பண்ருட்டி டி.எஸ்.பி.ஆகியோர் உத்தரவின பேரில் வாழ்முனி வேறு ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா?என்பது குறித்து விசாரிக்க பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் புதுவை மாநிலத்திற்கு விரைந்தனர்.

    அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்முனிபு துவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அந்த திருட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தபோது தவளக்குப்பத்தில்மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு காரை திருடியதும் தெ ரியவந்தது. இந்த காரில் நாட்டு வெடிகளை திருவதிகையில் உள்ள ஒரு வியாபாரியிடம் கொடுப்பத ற்காக வந்தபோது வழியில் ரெட்டி சாவடியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த பவுன் தங்க நகை 50 ஆயிரம் பணம் கொள்ளை அடித்தது விசாரணை யில் அம்பலமா னது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வாழ்முனியை ஒப்படைத்தனர். அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசார ணையில் மேலும் பல திட்ட தகவல்கள் அம்பலமாகும் என தெரிகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×