search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி  பஸ் நிலையத்தில் மூதாட்டி அணிந்திருந்த நகை மாயம்:போலீஸ் விசாரணை
    X

    பண்ருட்டி பஸ் நிலையத்தில் மூதாட்டி அணிந்திருந்த நகை மாயம்:போலீஸ் விசாரணை

    • கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வல்லம் தெற்கு தெருவை சேர்ந்த வர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி ராணி (வயது 65). இவர், திருவந்திபுரம் கோவிலுக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் டவுன் பஸ்சில் ஏறி இறங்கி பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    Next Story
    ×