search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிகால் வலி"

    • 'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்’ என்பது வாத நோய்களில் ஒன்று.
    • முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு இடையே மூட்டுகளில் வீக்கம்.

    'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்' என்பது வாத நோய்களில் ஒன்றாகும். சித்தமருத்துவத்தில் 85 வகை வாத நோய்களை சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நோயில் முதுகில் உள்ள முதுகெலும்புகள் இடைவெளியின்றி ஒன்றாக இணைகின்றன. இதனால் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சிலநேரங்களில் விலா எலும்புகளும் பாதிக்கப்படலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும்.

     அறிகுறிகள்:

    நோயின் முக்கிய அறிகுறி முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு (சாக்ரோலியாக் மூட்டுகள்) இடையே உள்ள மூட்டுகளில் வீக்கம் காணப்படும். இந்த வீக்கம் முதுகெலும்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். இதனால் முதுகு அல்லது பிட்டத்தில் கடுமையான வலி காணப்படும். காலை நேரங்களில் வலி அதிகமாவது அல்லது வலியினால் இரவில் தூக்கம் வராமல் வேதனைப்படுவது போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்

    குதிகாலின் பின்புறம் தசைநார்கள் இணைக்கும் இடங்களில் வலி, நடப்தில் சிரமம் போன்ற பாதிப்புகளும் இருக்கலாம். இந்தநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் HLA-B27 மரபணு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மரபணு இல்லாதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

    சித்த மருத்துவம்:

    இந்த நோய்க்கு சிறந்த சித்த மருந்துகள் உள்னை. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம்.

    1. சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கிட குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளுடன் அமுக்கரா' சூரணம் 1 கிராம் சேர்த்து காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2 கந்தி மெழுகு 500 மி.கி.கலை. இரவு இருவேளை சாப்பிட வேண்டும். வலியுள்ள இடங்களில் விடமுட்டி தைவம் உளுந்து தைலம், கற்பூராதி தைலம் சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    3. உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சில மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து விட்டு மீண்டும் உட்கார வேண்டும். முதுகெலும்பு வளையாமல் நேர்பட உட்காருவது நல்லது.

    • மாடிப்படி ஏற முடியாது அத்தனை சிரமம்.
    • உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம்.

    தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்கு குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் `சுள்'ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூட காலை எட்டு வைத்து நடக்க முடியாது. மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்.

    ஆனால், இந்த சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச்செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்த பிரச்சினைக்கு `பிளான்டார் பேசியைட்டிஸ்' என்று பெயர்.

    குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க `பர்சா' எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு `கால்கேனியல்ஸ்பர்' என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.

    சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். 30 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது.

    பெற்றோருக்கு வந்தால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு. நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி `வார்ம்அப்' பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

    கரடுமுரடான செருப்புகளை அணிபவர்களுக்கும் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்பு அதிகம். இன்றைய பெண்களில் பலரும் `ஹைஹீல்ஸ்' செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்த காலணிகள் பாதத்துக்குச்சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

    இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

    • தசைநார்கள் 'கொலாஜள்' எனும் புரதத்தால் ஆனது.
    • உடலின் இயக்கத்துக்கு தசைநார்கள் முக்கியமானவை.

    உடலில் உள்ள தசைகளையும், எலும்புகளையும் இணைக்கக்கூடிய நார்த்தன்மை உள்ள இணைப்பு திசுக்களையே 'தசைநார்கள்' என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் 'லிகமென்ட்' என்று அழைக்கிறார்கள். தசைநார்கள் 'கொலாஜள்' எனும் புரதத்தால் ஆன இழைகளாகும்.

    இவை அதிக வலிமையும், அதிர்வை தாங்கும் தன்மையும் கொண்டவை. உடலின் இயக்கத்துக்கு தசைநார்கள் முக்கியமானவை. சில வேலைகளை செய்யும்போது சரியான தோற்ற நிலையை பின்பற்றாமல் இருந்தால் தசைநார்களில் பாதிப்பு ஏற்படும். இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் அதிக வலி உண்டாகும். அதை சில எளிய பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும்.

    ஹீல் ஸ்லைடு, யோகா விரிப்பில் கிடைமட்டமாக படுக்கவும். கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் குதிகால் இவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். உள்ளங்கைகள் இரண்டையும் இடுப்பிற்கு பக்கவாட்டில் இருக்குமாறு தரையில் பதிக்கவும். இப்போது, முழங்கால்களை மடக்கி 5 வினாடிகளுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும்.

    பின்பு வலது காலை மட்டும் சற்று நீட்டி குதியால் தரையில் படும்படி வைத்து பாதத்தை மேல்தோங்கி இருக்குமாறு வைக்க வேண்டும். இந்த நிலையில் 5 வினாடிகள் இருக்க வேண்டும். பின்னர் வலது காலை நீட்டி, குதிகாலை நேராக வைத்திருக்கவும். இந்த நிலையில் 5 வினாடிகள் இருந்து, பின்பு உடலை தளர்வாக்கவும். இவ்வாறு 10 வினாடிகள் இடைவெளியில் இந்த பயிற்சியை தொடர்ந்து 10 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    குதிகால், தொடை எலும்புகள் வலுவாகும். முழங்காலைச் சுற்றி உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் சீராக செயல்படும். முதுகு வலி குறையும்.

    • நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம்.
    • பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும்.

    அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி பெண்களுக்கு எப்போதும் வேலைகளுக்கு குறைவு இருக்காது. எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு போதிய ஓய்வு தேவை என்பதை வீட்டில் உள்ளவர்கள் முதலில் உணர வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களை சரிவர கவனிக்க வேண்டும். இதற்காகவே பெண்கள் முதலில் உடற்கூறு விஷயத்தில் வலிமை உடையவராக இருத்தல் அவசியம்.

    ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக நம் உடலை பராமரிப்பதை மறந்துவிடுகிறோம். எனவே நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். உடலை சீராக வைத்துக்கொள்ள பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    நீங்கள் உறங்கும் படுக்கை விரிப்பு அல்லது மெத்தை மிகவும் கடினமாகவோ, மிகவும் லேசானதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தடுக்கலாம்.

    தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை, மூட்டு மற்றும் உடல் சீராகும்.

    பெண்கள் முடிந்தவரை நீண்டநேரம் நின்றுகொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால் உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதை தவிர்க்கலாம். எத்தனை வேலைகள் செய்தாலும் அதற்கிடையே உங்கள் உடலுக்கான உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    ஆண், பெண் இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல் தசைகள், மூட்டு லகுவாகும். தசை இழுப்பு பயிற்சிகள் செய்வது மிகவும் அவசியம். தினமும் காலையில் எழுந்தவுடன் 10 நிமிடங்கள் செய்வது அவசியம்.

    பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும். முதுகு, தசை பயிற்சி செய்வதால் முதுகுவலியை கட்டுப்படுத்தலாம்.

    சரியான காலணிகள் அணிவதன் மூலமும் முதுகு, மூட்டு மற்றும் குதிகால் வலிகளை தவிர்க்கலாம். வாரம் ஒருதடவையாவது உங்கள் தசை மற்றும் எலும்புகளை லகுவாக வைத்துக்கொள்ள மசாஜ் செய்வது அவசியம்.

    உடற்பயிற்சி தினமும் செய்வதால் உங்கள் தசை வலுப்பெறும். இதனால் எலும்புகள் வலுப்பெறும். உடல் வலிமை அதிகரிக்கும். எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைபடி செய்வது உத்தமம்.

    உங்கள் மூட்டு, முதுகு, தோள்பட்டை, கழுத்து போன்றவை வலுவாக இருத்தல் அவசியம். இதற்கான உடற்பயிற்சி மிக அவசியம்.

    நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் தசைகள் இறுகி முதுகு வலி, கால்வலி போன்றவை ஏற்படலாம்.

    கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அதற்கான தனி நாற்காலியை பயன்படுத்தவும். இதனால் முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    நீங்கள் உண்ணும் உணவில் புரதச்சத்து மிகவும் அவசியம். இதனால் தசைகள் வலுவாகும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வைட்டமின் டி குறைபாட்டால் கால்ஷியம் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கால்ஷியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

    முடிந்த வரை உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். எண்டார்ஃபின் எனும் ஹார்மோன் சுரந்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சான்றோர் வாக்கு.

    ×