search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிப்பழக்கம்"

    • திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    • வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கொண்ட சமுத்திரம் பகுதியைசேர்ந்தவர் சண்முகம்.அவரது மனைவி அம்சவல்லி (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கு குடி ப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்படும். இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சவல்லி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டுவிழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவல்லியை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஅம்சவல்லி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அம்சவல்லி தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செம்பூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கார்த்திக் (வயது 32). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

    சம்பவத்தன்று கார்த்திக் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனை அவரது தாயார் கண்டித்தார். இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திக் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சிசைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார்.

    நீடாமங்கலம்:

    திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி காவல் சரகம் எஸ் புதூர், மேல அலங்கன் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் விஜய்(28). சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவி சுபஸ்ரீ க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுபஸ்ரீ அவரது கணவரிடம் தினமும் குடித்துவிட்டு வருவதால் இந்த மாத வாடகை எப்படி கட்டுவது என்று கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருவிடைமருதூர் போலீசார் விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் புன்னைவனம். இவரது மகன் அழகர் (30). மில் தொழிலாளியான இவர் திருமணத்துக்கு மறுத்து வந்தார். இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்த போது கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் அழகர் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த அழகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மனமுடைந்து வீட்டில், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தார்.
    • அக்கம் பக்கத்தினர்ம மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் இறந்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கற்கத்தி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 57). இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மனமுடைந்து வீட்டில், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து மதுவில் கலந்து குடித்து மயங்கிக் கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர்ம மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×