search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய் திட்டியதால் மகன் தற்கொலை
    X

    தாய் திட்டியதால் மகன் தற்கொலை

    • சிவகங்கை அருகே தாய் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செம்பூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கார்த்திக் (வயது 32). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

    சம்பவத்தன்று கார்த்திக் குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனை அவரது தாயார் கண்டித்தார். இதனால் மனவேதனையில் இருந்த கார்த்திக் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிகிச்சிசைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×