search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் இணைப்பு"

    • தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.
    • பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் நிலவரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், புது வரி விதிப்புக்குப் பின் பெறப்பட்ட வசூல் நிலவரம்,சொத்து வரி விதிப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டடங்கள் ஆகியன குறித்து விவரம் பெறப்பட்டது.

    தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டணம் நீண்ட நாள் உள்ள இணைப்புகளில் வசூல் தாமதமாகும் நிலையில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஏறத்தாழ 4 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளது. வரும் வாரத்தில் இதில் தீவிரம் காட்டி குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

     உடுமலை :

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வரும், 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    கிராமப்புற வீடுகளில் முழுமையாக செயல்படும் குடிநீர் குழாய் இணைப்பை 62 சதவீத வீடுகள் பெற்றுள்ளன என மத்திய நீர்வளத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 799 வீடுகள் உள்ளன.கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 77 கிராம ஊராட்சிகளில் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.நடப்பாண்டு ஜல் ஜீவன் திட்டம் மட்டுமின்றி 14 மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், குடிநீர் வடிகால் வாரிய திட்டம் மற்றும் மாநில அரசின் பிற திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது.

    இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிற ஒருங்கிணைந்த மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 729 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சில புதிய திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.மீதமுள்ள 77 ஆயிரத்து 70 வீடுகளுக்கு வரும் ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2024ல் முடிக்கப்பட வேண்டிய இலக்கு 2023ல் முடிக்கப்பட்டு விடும் வகையில் செயலாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தனி நபர் குடிநீர் அளவு 100 லிட்டராக உயர்ந்தது
    • பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை.

    கோவை

    கோவை மாவட்டத்தில் 228 ஊராட்திகளில், 1190 குக்கிராமங்கள் இருக்கிறது. இதில் 3,74,013 வீடுகள் உள்ளது. பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில் குடி நீர் வழங்கப்படவில்லை. சிலர் போர்வெல் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக குடிநீர் ஆதாரங்கள் பெற்று பயன்படுத்துகின்றனர்.

    சிலர், குட்டை, ஓடைகளில் வரும் நீரை பயன்படுத்துவதாக தெரிகிறது. சிலர் கிணற்று நீரை குடிநீரா பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் நீர் ஆதாரம் இல்லாமல் பொதுமக்கள் நீண்டதூரம் குடிநீருக்காக சென்று வர வேண்டியிருக்கிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தொடங்கியது. கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த திட்டத்தில் 1,87,515 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டில் 41,869 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டது. இந்த ஆண்டில் 40,889 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தர வேண்டி உள்ளது.

    15-வது நிதி திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பாக 21,332 வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டியிருக்கிறது. விரைவில் 19,557 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வான நிலையில் இருக்கிறது. இந்த நீரை போர்வெல் மூலமாக எடுத்து மேல் நிலை தொட்டி அல்லது நிலமட்டத் தொட்டிகளில் சேகரித்து அதை குடியிருப்புகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் பிரதான குடிநீர் இணைப்புகளில் இருந்து பகிர்மான குழாய்கள் மூலமாக குடி நீரை பகிர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சில கிராமங்களில் வீடுகள் தொலைவில் ஆங்காங்கே அமைந்து–ள்ளது. சில வீடுகள் தோட்டம் மற்றும் ஒதுக்குப்புற பகுதிகளில் இருக்கிறது. மேடு, பள்ளம் மற்றும் வழிப்பாதை இல்லாமல் கூட சில கிராமங்கள் இருக்கிறது. இங்கே ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு வழங்குவதில் சிக்கல் இருக்கிறது.

    இந்த பகுதியில் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக குடிநீர் எடுத்து குழாய் மூலமாக குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதான நீர் மூலமாக குடிநீர் பகிர்மான குழாய் மூலமாக வெகு தூரம் கொண்டு செல்லவும் ஏற்பாடு நடக்கிறது. ஓரிரு ஆண்டுகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் முழு அளவில் குடிநீர் வழங்க முடியும்.

    இதற்கான குழாய் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. முழு அளவில் குடிநீர் இணைப்பு வழங்கினால் குக்கிராமங்களில் பொதுமக்கள் வசிப்பது அதிகமாகும். அடிப்படை வசதிகளுக்காக நகர்ப்ப–குதிக்கு பொதுமக்கள் இடம் பெயர்ந்து செல்வது வெகுவாக குறையும்.

    குடிநீர் முழு அளவில் வழங்குவதன் மூலமாக கிராமங்களில் வளர்ச்சி பணிகள் அதிகமாகி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் தனி நபர் குடிநீர் அளவு தினமும் 100 லிட்டர் என உயர்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

    • திருப்புல்லாணி ஊராட்சியில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமப்பகுதிகளில் மத்திய அரசின் ஜல்-ஜீவன் திட்டம் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது.

    அதன் பின் கிடப்பில் உள்ளதால் குழாய்களில் குடிநீர் வராமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்புல்லாணி 4 ரத வீதிகளில் ஜல்-ஜீவன் திட்டத்தில் பயன்பாட்டிற்காக வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வழங்கும் திட்டத்திற்கென 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, தரை தளம் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டது.கடந்தாண்டு அமைக்கப்பட்ட குழாய்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. எனவே திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து திருப்புல்லாணி ஊராட்சி தலைவர் கஜேந்திர மாலா கூறுகையில், ஜல்-ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தேரோடும் 4 ரத வீதிகளிலும் மழை நீர் சேகரிப்புக்கான புதிய வாறுகால்வாய் பணிகள் முடிவடைந்துள்ளது. விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் பொறுத்த உள்ளோம். அதன்பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

    • ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
    • பணிகளை 15-வது நிதிக்குழு மானியத்தொகையில் (2022-2023) இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 38 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 38 ஊராட்சி பகுதிகளில் கடந்த மே மாதம் 31-ந் தேதி வரை வீட்டு வரி விதிக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்தம் 64 ஆயிரத்து 183 வீடுகள் உள்ளன. இதில் 56 ஆயிரத்து 398 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. மீதி 7 ஆயிரத்து 785 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை 15-வது நிதிக்குழு மானியத்தொகையில் (2022-2023) இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 அடுக்கு (மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி) 15-வது நிதிக்குழு மானியத்தில் மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.13 லட்சத்து 64 ஆயிரத்தில் 321 இணைப்புகளும், ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.76 லட்சத்து 8 ஆயிரத்தில் 1,471 இணைப்புகளும், கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 666-ல் 5,993 இணைப்புகளும் என மொத்தம் 7,785 வீட்டுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது.

    இந்த வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்திற்கு 15-வது நிதிக்குழு மானியமாக ரூ.6 கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 666 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி உத்தரவு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வந்ததும் பணிகளை தொடங்கி 2022-2023-ம் நிதி ஆண்டிற்குள் (2023 மார்ச் மாதத்திற்குள்) முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த திட்டத்தில் பணிகளை செய்வது குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்தை உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) எம்.கந்தசாமி தலைமை தாங்கி நடத்தினார். அப்போது அவர் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய காரணங்கள் இன்றி அலைய வைக்கிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் வஞ்சிபாளையம்ஸ்ரீவாரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்.இவரது மனைவி சாந்தி. இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தனது 2 பெண் குழந்தைகளுடன் வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் மேற்கண்ட முகவரியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கடந்த 8 மாதமாக குடியிருந்து வருகிறேன். வீட்டிற்கு  குடிநீர் இணைப்பு கேட்டு புதுப்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய காரணங்கள் இன்றி அலைய வைக்கிறார்கள். குடிநீர் கிடைக்காமல் இரண்டு குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். எனவே இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
    ×