search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவ ஆலயம்"

    • தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • 120 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது

    கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்தவரை, ஆண்டவர் ஏசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் ஏசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார். இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே 3 இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் 2-வது ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், 3-வது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் 130 ஆண்டுகளுக்கு முன் மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர் 9 நாட்கள் விரதம் இருந்து ஆண்டவரான ஏசுவை மனம் உருகி வழிபட்டால் நோய் தீரும் என கூறினர். இதையடுத்து அன்னாள் அவ்வாறு விரதமிருந்து வழிபட தொடங்கினார். இதையடுத்து 5-வது நாள் அன்று அவரது உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்து மறுநாள் மருத்துவரிடம் சென்று காண்பித்த போது இதய நோய் குறைந்து வருவதாக கூறியுள்ளார்.

    தொடர்ந்து நாளடைவில் அவரது இருதய நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக அந்த மருத்துவர் கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தார். அப்போதுதான் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பங்கு தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்டிணன்ட் செல் என்பவர் அங்கு ஒரு தேவலாயம் ஒன்றை அமைப்பதற்காக தேவையான பொருள் ஏற்பாடு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவலறிந்த அன்னாள், அங்கு ஆலயம் அமைப்பதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அந்த ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது என்றும், ஆண்டவரை எப்படி உருவாக்குவது என்றும் ஆலோசித்தனர்.

    இந்நிலையில் மார்க்ரேட் மேரி என்பவர் 1673-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள், அவர் கனவில் ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார் என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் ஏசுகிறிஸ்து. கனவில் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார். பின், அவரது கூற்றுப்படியே ஏசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான திரு இருதய ஆண்டவர் உருவம் இங்கு உருவாக்கப்பட்டது.

    மேலும் புனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டிணன்ட் செல் இடைக்காட்டூர் வந்து ஆலயம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கினார். இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக் கலையின் அடிப்படையில் சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளது. 120ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது. தற்போது இந்த ஆலயத்திற்கு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த திருத்தலத்திற்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
    • கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள் ஜெபம் அல்லது 9 வாரம் நவநாள் என்ற அடிப்படையில் குழந்தை இயேசுவை பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு செய்தவன் மூலம் ஏராளமானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

    அன்பு, அமைதி, பொறுமை, தியாகம் இவற்றையெல்லாம் கிறிஸ்தவம் மிகவும் வலியுறுத்தி வருகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை இயேசுவின் மீதுள்ள பக்தி பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மனதில் இருந்து வருகிறது. இயேசுவின் புனிதமான குழந்தை பருவத்தை கிறிஸ்தவர்கள் இன்றளவும் வணங்கி வருவதுபோல் புனித குழந்தை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசி, புனித அந்தோணியார் மற்றும் புனித அவிலா தெரசா போன்ற பல புனிதர்கள் தெய்வீக குழந்தை இயேசுவின் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தார்கள்.

    பூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவில் கடந்த 1969-ம் ஆண்டில் குழந்தை இயேசு மீதான பக்தி மக்களிடையே மிக அதிகமாக பரவ தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சொன்னேனஹள்ளி, வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின் டவுன், ஆனேபாளையா, ஈஜிபுரா போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தனர்.

    குழந்தை இயேசு மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால்பெண் ஒருவர் விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு பேராலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் ஒரு பாதிரியாரிடம் கூறி முறையிட்டார். அப்போது விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட இடம் கிடைக்க குழந்தை இயேசுவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த பாதிரியார் குழந்தை இயேசுவை நோக்கி நவநாள் ஜெபத்தை ஆரம்பித்தார். அதன்பேரில் அங்கு தேவாலயம் கட்ட இடம் கிடைத்தது.

    1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட தொடங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜெபக்கூடத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வந்து குழந்தை இயேசுவிடம் தங்கள் பிரச்சினைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூறாவளி காற்று, புயல் இப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி அந்த ஜெபக்கூடம் குழந்தை இயேசுவின் அருளால் எந்தவித சேதமும் இன்றி இருந்தது. இதுவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் தொடர்ந்து நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது.

    குழந்தை இயேசுவின் அற்புதத்தைக் கண்டு ஏராளமான மக்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று முதல் நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று இந்த தேவாலயத்தில் நவநாள் ஜெபம் நடக்கிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந் தேதி இந்த திருத்தலத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதுவும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்வேறு காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுள்ள தேவாலயம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி முழுமையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் குழந்தை இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்திற்கு இன்று ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.

    மேலும், குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் இருக்க வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் குழந்தைகளுடன் இந்த திருத்தலத்திற்கு வந்து குழந்தை இயேசுவை பிரார்த்திக்கிறார்கள்.

    • இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.
    • 1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது.

    கத்தோலிக்க திருச்சபையின் சிறப்புமிகுந்த மறைமாவட்டங்களில் குமரி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கோட்டார் மறைமாவட்டமும் ஒன்றாகும். கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல், கேட்டவரம் தருபவர் என்று கிறிஸ்தவர்களால் போற்றி புகழப்படும் புனித சவேரியார் நற்செய்தி அறிவித்து, மக்களுக்கு தொண்டாற்றிய பங்குகளில் கோட்டார் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது. புனித சவேரியாருக்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயம் என்ற பெருமையை கோட்டார் புனித சவேரியார் பேராலயம் வகிக்கிறது. இந்த பேராலயம் தான் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாகவும் விளங்குகிறது.

    தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு

    இந்த கோட்டார் மறைமாவட்டத்தின் பங்குகளில் ஒன்றாக நாகர்கோவில் மாநகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மேலப்பெருவிளை பங்கு உள்ளது. இந்த பங்கு, கோட்டார் மறைமாவட்டம் உருவாவதற்கு, (அதாவது 1930-க்கு) முன்பே இருந்த பழமையும், பாரம்பரியமும் கொண்ட பங்குகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது திருவிதாங்கூர்- கொச்சி சமஸ்தானமாக இருந்தபோது கோவா மறைமாவட்டத்தில் இருந்து கி.பி.1886-ம் ஆண்டில் கொல்லம் மறை மாவட்டம் உருவானது. அப்போது இன்றைய குமரி மாவட்டத்தில் இருந்த 14 பங்குகளில் மேலப்பெருவிைள பங்கும் ஒன்று என்ற பெருமையைக் கொண்டது. இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டு, மறைசாட்சியாக இந்திய மண்ணில் ரத்தம் சிந்திய முதல் இல்லற புனிதர் என்ற பெருமையைப் பெற்ற புனித தேவசகாயத்துடன் தொடர்புடைய பங்கு இந்த மேலப்பெருவிளை பங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முதலில் அரை சென்ட் மனையில் சிலுவை பாணியில் பனை ஓலையினால் ஒரு குருசடியை இப்பகுதி மக்கள் உருவாக்கி இயேசுவை வழிபட்டு வந்தனர். 5 முன்னோடி குடும்பங்கள் இணைந்து இந்த குருசடியில் வழிபாடுகள் நடத்தி வந்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதை உணர்ந்த இப்பகுதியின் முன்னோர்கள் குருசடி இருந்த இடத்தில் கி.பி.1832-ம் ஆண்டில் புனித செபமாலை அன்னைக்கு மண்சுவராலும், ஓட்டுப்புரையாலும் ஆலயம் ஒன்றை உருவாக்க நினைத்தனர். அதற்கு வடசேரி, அறுகுவிளை, புதுக்குடியிருப்பு, சாந்தான் செட்டிவிளை ஊர்க்காரர்களும், மேலப்பெருவிளை ஊர்க்காரர்களும் இணைந்து ஆலயம் எழுப்பினர்

    வேண்டுதல் நிறைவேற்றும் அன்னை

    1941-ம் ஆண்டு ஆலயத்தின் கோபுரம் கற்களால் கட்டி எழுப்பப்பட்டது. 1942-ம் ஆண்டு தொடங்கி 1944-ம் ஆண்டுகளில் கோவில் உட்புறப் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டது. இன்றும் இந்த ஆலயம் கல் கட்டிடமாகவும், ஓடுகளால் ஆன மேற்கூைரயுடனும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது. கி.பி.1858-ம் ஆண்டில் இந்தியாவில் பரவிய காலரா, வைசூரி போன்ற கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்கள் மடிந்தனர். இந்தியாவின் தென்கோடியான குமரி மண்ணையும் இந்நோயின் தாக்கம் விட்டு வைக்கவில்லை. அந்த சமயத்தில் மேலப்பெருவிளை மக்கள் இந்த நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சலேத் அன்னையை நோக்கி இடைவிடாது வேண்டினர். புனித லூக்காவின் நற்செய்தி வாசகத்திற்கேற்ப மாதா, மக்களுக்கு அருள்பாலித்து, ஒரு கெபியை கட்ட பணித்தார். அதன்படி மக்கள் கற்களை தலைமேல் சுமந்து வந்து கெபியைக் கட்டினர்.

    அதில் 1867-ம் ஆண்டு புனித சலேத் அன்னை சொரூபத்தை அன்றைய கொல்லம் ஆயர் எப்ரேம் ஸ்தாபித்தார். ஊர் மக்களைத் தாக்கி வந்த கொள்ளை நோய்களும் அன்னையின் அருளால் முற்றிலும் அகன்றது. அன்று முதல் இன்று வரை அன்னையிடம் மனம் உருகி வேண்டுபவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

    புதுமைகள் நிகழ்கிறது

    சலேத் மாதாவின் எழில்மிகு தோற்றத்துடன் கூடிய இந்த கெபியானது 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 -ந் தேதி அன்றிருந்த பங்கு பணியாளர்களின் இடையறாத உழைப்பாலும் பங்கு மக்களின் வீடுகள் தோறும் சென்று நன்கொடைகள் பிரித்தும் புதிதாகக் கட்டப்பட்டது. அன்றைய ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கெபியை அர்ச்சித்து வைத்தார். சலேத் அன்னை 1864-ம் ஆண்டு சலேத் மலையில் காட்சி கொடுத்ததை கொண்டாடும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 19 -ந் தேதி ஆடம்பர விழாவாக தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் முயற்சியால் கொண்டாடப்பட்டது. அத்தோடு புதுமைகள் பல நிகழும் அன்னையின் கெபியில், மாதந்தோறும் 19-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து கஞ்சிதர்மமும் நடைபெற்று வருகிறது. தற்போதைய பங்குத்தந்தை குருசு கார்மல் ஊர் மக்களுடன் இணைந்து, நன்கொடை சேகரித்து கெபியில் மேற்கூரை அமைத்து தந்துள்ளார்.

    மேலப்பெருவிளை 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் தனிப்பங்காக உதயமானது. 1990-ம் ஆண்டு இந்த பங்கு பணியாளருக்கு இல்லம் அமைக்கப்பட்டது. அதுமுதல் பங்குத்தந்தை அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். 1962-ம் ஆண்டு இந்த ஊரில் ஒரு ரேடியோ நிலையம் கட்டப்பட்டது. அதனை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக அங்கம் வகித்த லூர்தம்மாள் சைமன் திறந்து வைத்துள்ளார். 1963-ம் ஆண்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 1966-ல் படிப்பகமும், 1968-ல் கோட்டார் சமூகசேவை மையத்தால் ஏற்படுத்தப்பட்ட கிராம மருந்தகமும் உருவானது. 1965-ம் ஆண்டில் ஊர் மக்களின் நீராதாரத் தேவையை பூர்த்தி செய்ய கோவில் நிலத்தில் கிணறு வெட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. 2003-ம் ஆண்டு புனித ஜெபமாலை அன்னை சமுதாய நலக்கூடம் பங்கு மக்களின் உதவியோடு அடிக்கல் நாட்டப்பட்டு 2004-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

    புனித தேவசகாயம்

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி இந்த பங்கில் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற குருசு கார்மல், புனித சலேத் அன்னை கெபியில் புதுமை பொருட்கள் விற்பனை நிலையத்தையும், நிர்வாகிகள் அலுவலகத்தையும் கட்ட முயற்சி எடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடித்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் முதல் புனித தேவசகாயத்துக்கென்று வெள்ளிக்கிழமை நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கென்று திருச்சூரிலிருந்து புனித தேவசகாயம் சொரூபம் ஒன்றை தனது சொந்த முயற்சியில் வாங்கி அதை சலேத் அன்னை கெபியில் வைத்து ஸ்தாபித்து பவனியாக ஆலயத்திற்கு கொண்டுவந்த பெருமையும் பங்குத்தந்தை குரூஸ் கார்மலையே சாரும்.

    மகிமை பெருகுகிறது

    மேலும் இந்த ஆலயம் தொடர்பாக மேலப்பெருவிளை பங்குத்தந்தை குருசு கார்மல் கூறியதாவது:-

    கோட்டார் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பங்குகளில் மேலப்பெருவிளை பங்கும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள ஜெபமாலை மாதா ஆலயத்தில் ஜெபமாலை அன்னையும், சலேத் அன்னையும் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இதனை ஆலயத்துக்கு நன்றி செலுத்த வரும் பக்தர்களின் மூலமாக காண முடிகிறது. அதனால் அன்னையின் மகிமை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

    இந்த ஆலயத்தில் வார நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு மறைக்கல்வி குழந்தைகளுக்கான திருப்பலியும் நடைபெறுகின்றன. ஞாயிறுதோறும் காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை மறைக்கல்வியும், தொடர்ந்து 10.30 மணி முதல் அனைத்து சிறார் இயக்கங்களும் செயல்படுகின்றன. மாதத்தில் ஒருநாள் மறைக்கல்வி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

    உறுதிமொழி

    இதுதவிர கடந்த ஆண்டு முதல் மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறுவர்களுக்கான ஆங்கில திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மறைக்கல்வி மாணவர்களுக்கென்று ஞாயிறு காலை 7.30 மணிக்கு திருப்பலி நிறைவேற்றி அதில் மறைக்கல்வி மாணவர்களே, இசைமீட்டி பாடலும் பாட முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் அக்ேடாபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2-வது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.

    இங்கு ஏற்கனவே மறைக்கல்வி, பாலர் சபை, சிறுவழி இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம், மரியாயின் சேனை, வின்சென்ட் தே பவுல் சபை மற்றும் கிராம பெண்கள் சங்கம் ஆகியன செயல்பட்டு வந்தன. நான் இங்கு பொறுப்பேற்ற பிறகு நற்செய்தி பணிக்குழு, குடும்பநலப் பணிக்குழு, கைகள் தன்னம்பிக்கை இயக்கம், பிரான்சிஸ்கள் மூன்றாம் சபை, திருஇருதயநாதர் சபை, வழிபாட்டுக் குழு, கத்தோலிக்க சேவா சங்கம், பெண்கள் பணிக்குழு, கார்மல் சபை என பல சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பங்கு மக்களும் துடிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

    இறையருளில் பிறந்து, பங்குதந்தையர் பணியில் வளர்ந்து, இணை தந்தையர்கள் உழைப்பில் உயர்ந்து முழுமை பெற்ற இந்த ஊர் சலேத்அன்னையின் அடிச்சுவட்டில் ஊரின் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டுகிற சமூகமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்றிரவு ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
    • கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மக்கள் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தில் புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. ஆர்.சி. சர்ச் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மிகப்பெரிய சபைகளில் ஒன்றான இந்த ஆலயத்தில் தினந்தோறும் இரவு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்றிரவு இந்த ஆலயத்தில் இருந்த கெபியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனை அறிந்த அந்த ஆலய மக்கள் இன்று காலை ஆலயம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் கெபியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அங்குள்ள மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லமுடியாமல் போனது. அவை அனைத்தும் சாலைகளில் அணிவகுத்து நின்றன.

    தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏரல் தாசில்தார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    • ஒலிபெருக்கியை போடுவதற்காக கோவில் ஊழியர் அங்கு வந்துஉள்ளார். அவர் ஆலயத்தை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஆலயத்தின் உள்பக்க அறை கதவு திறந்து கிடந்தது.
    • கன்னியாகுமரி போலீசார் அச்சன்குளம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளத்தில் கதீட்ரல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு பிரார்த்தனை முடிந்தபிறகுஆலயத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒலிபெருக்கியை போடுவதற்காக கோவில் ஊழியர் அங்கு வந்துஉள்ளார். அவர் ஆலயத்தை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஆலயத்தின் உள்பக்க அறை கதவு திறந்து கிடந்தது. அங்குஇருந்த பொருட்களையும் காணவில்லை. இது பற்றி அவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து ஆலய சபை செயலாளர் அருளானந்தம் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுததார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அச்சன்குளம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது அதில்இருந்துரூ10ஆயிரம் பணம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த ஆலயத்துக்குள் இருந்த ஆம்ப்ளிபயர், ஒலிபெருக்கி பெட்டி, 9மைக்மற்றும்பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனுடைய மதிப்பு ரூபாய் 2லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளையை வட மாநில கொள்ளையர்கள் அரங்கேற்றி இருக்கிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அந்த மர்ம ஆசாமிகளைபோலீசார் தேடிவருகிறார்கள்.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று பிரார்த்தனை முடிந்து இரவு ஆலயத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இந்த ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் ஆலய நிர்வாகிகள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அச்சன்குளம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    மேலும் அந்த ஆலயத் துக்குள் இருந்த ஆம்ப்ளிபயர், ஒலிபெருக்கி பெட்டி, மைக், போன்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அந்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • பெருவிழா கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் கெபியை வந்தடைந்தது.
    • இப்பெருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.

    திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபியில் 94-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இப்பெருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. விழா தொடக்க நாளான நேற்று மாலையில் பெருவிழா கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் கெபியை வந்தடைந்தது. பின்னர் நேற்று மாலை 6.45 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் பெருவிழா கொடியேற்றினார். மணவை வட்டார அதிபர் ஜான்செல்வம் மறையுரையாற்றினார்.

    கொடியேற்று நிகழ்ச்சியில், பங்குதந்தைகள் ஜெயக்குமார், விக்டர் லோபோ, ஆச்சரியம், செல்வன், ஜோசப் ரத்தினராஜ், பீட்டர் பால், சில்வெஸ்டர், வில்லியம், டிமல், அமல்ராஜ், ஆலந்தலை ஊர்நல கமிட்டி தலைவர் ரமேஷ், ரொசாரி மாதா சபை தலைவர் ரூபின்ஸ்டன், நிதிக்குழு செயலாளர் லிபோரியஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • அர்ச்சிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
    • பழமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி புனிதர் தேவசகாயம் ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. அதோடு இங்கு புனித லூர்து அன்னை கெபியும் இருந்தது.

    பழமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

    இரவு அன்பின் விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்கு தந்தை ரெட்வின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

    • நாளை மதியம் 2.30 மணிக்கு ஆயர்களுக்கு வரவேற்பு நடக்கிறது.
    • 6 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

    கொல்லங்கோடு அருகே உள்ள பாலவிளையில் (காட்டுக்கடை) மலங்கரை கத்தோலிக்க திருச்சபை சார்பில் புனித சவேரியார் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மதியம் 2.30 மணிக்கு ஆயர்களுக்கு வரவேற்பு, 3 மணிக்கு ஆலய அர்ச்சிப்பு, மாலை 5.30 மணிக்கு பொதுக்கூட்டம், 6 மணிக்கு அன்பின் விருந்து போன்றவை நடக்கிறது.

    விழாவில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக திருவனந்தபுரம் உயர் மறை மாநில துணை ஆயர் மாத்யூஸ் மார் போளிகார்ப்பஸ், ஆயர் ஆன்டனி மார் சில்வானோஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அலெக்ஸ் குமார், ஒருங்கிணைப்பாளர் இவான்ஸ், செயலாளர் ஜெபல் சிங், பொருளாளர் அசோகராஜ், பங்கு பேரவை, பொதுக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • வனத்துறையினர் மீட்டுகாட்டில் விட்டனர்
    • விஷ பாம்பை காட்டுப்பகுதியில பத்திரமாக கொண்டு விட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் நேற்று கொம்பேறி மூக்கன் என்ற கொடிய விஷ பாம்பு புகுந்தது. உடனே இது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் உத்தரவுபடி பிரிவு வனவர் தலைமையில் வனக்காப்பாளர் அசோக் வனக்காவலர் ஜோயல் வேட்டை தடுப்புகாவலர் பிரவின் ஆகியோர் இணைந்து விஷ பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    பின்னர் காட்டுப்பகுதியில பத்திரமாக கொண்டு விட்டனர்.

    • முதன்மை குரு அருளப்பன் தலைமையில், வேண்டுதல் திருப்பலி நடந்தது.
    • இன்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    ஓமலூர் அருகே ஆர்.சி. செட்டிப்பட்டியில் உள்ள புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் திருத்தூய அர்ச்சிப்பு, பங்கு திருவிழா, புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் ஆகிய முப்பெரும் விழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சேலம் மறைமாவட்ட பேராயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருவிழா திருப்பலி, திருத்தூய அர்ச்சிப்பு, புதுநன்மை உறுதி பூசுதல் ஆகிய முப்பெரும் விழா ஆலயத்தில் நடைபெற்றது. மாலையில் சேலம் மாவட்ட முதன்மை குரு அருளப்பன் தலைமையில், வேண்டுதல் திருப்பலி நடந்தது.

    பின்னர் செவ்வாய்பேட்டை பங்குதந்தை அழகுசெல்வன் தலைமையில் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர். தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு ஆர்.சி. செட்டிப்பட்டி பங்கு தந்தை எட்வர்ட் ராஜன் தலைமையில் நடைபெறும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×