search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்தவ ஆலயம்"

    • எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
    • குமரி மாவட்டத்தில் உள்ளது சிறப்பு மிக்க இந்த திருத்தலம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க திருத்தலங்களில் சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலம் நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் சுசீந்திரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வழுக்கம்பாறை சந்திப்பில் இருந்து அஞ்சுகிராமம் சாலையில் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    நீர்வளமும், நிலவளமும், இயற்கை எழிலும் நிறைந்த சகாயபுரத்தின் மையமாக இடைவிடா சகாய அன்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில் எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.

    சகாயபுரம் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாவும், விவசாய தினக்கூலிகளாகவும் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பலர் பாறையை பிளந்து கல் உடைத்து எடுப்பது, சிற்பங்கள் செதுக்க கீற்றுக்கல் எடுத்து கொடுப்பது, கல் தூண்கள் செதுக்கி கொடுப்பது, ஆட்டுக்கல், அம்மி கொத்தி கொடுப்பது, சிற்பங்களை செதுக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

    பிரச்சினைகளில் இருந்து விடுதலை

    இங்குள்ள சகாய அன்னையின் திருஉருவ படம் உயிர்துடிப்பும், அருள் ஆற்றலும், கனிந்த பார்வையும், நெஞ்சத்தை ஈர்க்கும் தன்மையும் உடையது. இதை உற்று நோக்குவோர், உள்ளம் உருகி அன்னைக்கு அடிமையாகி ஆழ்ந்து போகிறார்கள். அவரது அருளை பல்வேறு வடிவங்களில் பெற்று செல்கிறார்கள்.

    குறிப்பாக இறைவன்மீது பற்றுதல், இயேசுவை பின்பற்றும் ஆர்வம், தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, திருமணம், மகப்பேறு வரம், பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் விடுதலை போன்றவற்றை பெறுகிறார்கள்.

    மெய்மறந்து மன்றாடுகிறார்கள்

    ஆலயத்தின் உள்அமைப்பும், ஆலய வளாகத்தில் காக்கப்படும் அமைதி சூழலும் பக்தர்கள் கடவுளையும் அன்னையையும் நெருக்கமாக சந்திக்கவும், ஆறுதல் அடையவும் தூண்டுகிறது. இதனால் பலர் தனிமையாகவும், குடும்பத்தோடும் எல்லா நாட்களும் இந்த ஆலயத்திற்கு வந்து ஆலயத்தில் அமர்ந்து மெய்மறந்து மன்றாடி செல்கிறார்கள். இங்கு புதுமைகள் நடக்கின்றன என்றோ, பலர் அருங்காட்சிகள் காண்கிறார்கள் என்றோ பொறுப்பானவர்கள் பேசுவதோ, அறிவிப்பதோ இல்லை. சகாய அன்னை வழியாக இறைவனிடம் உருக்கமாக, நம்பிக்கையுடன் மன்றாடி வாழ்வின் பல்வேறு நலன்களை பெற்றவர்களே தங்களது அனுபவங்களை தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.

    இதனால் தொடக்க காலத்தில் இருந்தே பெருமளவில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நவநாட்களில் பங்கு பெற்றுள்ளனர்.

    வாகனங்கள் அர்ச்சிப்பு

    இங்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதையும், விண்ணப்பங்கள், நன்றியறிதல்கள் மிகுந்து வருவதையும் புதன்கிழமை நவநாளில் வருவோர் கண்டுகொள்கிறார்கள்.

    புதிதாக வாங்கப்பெற்ற மற்றும் தகுதிச்சான்றிதழ் பெற்ற பலவகைப்பட்ட வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்துகூட அர்ச்சிக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் இங்கு கொண்டு வரப்படுகின்றன. சகாய அன்னை ஊர்திகளுக்கும், அவற்றில் பயணம் செய்வோருக்கும், உழைப்போருக்கும் பாதுகாப்பு நல்குகிறார் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இதுவும் இந்த திருத்தலத்தின் தனி சிறப்பாகும்.

    ஒப்புரவு ஆலயம்

    இந்த திருத்தலத்திற்கு வரும் மக்கள் உடலிலும், மனத்திலும், ஆன்மாவிலும் பாரங்களை சுமந்து வந்து திருத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு அமைதியான மனதோடு திரும்ப செல்கிறார்கள். இதற்கு உதவும் வகையில் அண்மையில் ஒப்புரவு ஆலயம் ஒன்று ஆலயத்தின் வெளியே முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க இருதனி அறைகள் உள்ளன.

    இங்கு நிதானமாக அமர்ந்து தகுந்த தயாரிப்புடனும் மனத்துயருடனும் வழக்கமான தனிப்பாவ மன்னிப்பு பெறவும், உரையாடல் வழி ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகளை உளவியல் அறிஞருடன் அமர்ந்து கலந்துரையாடி வழிகாட்டுதல், மனத்திடன் பெறும் ஆற்றுப்படுத்தலுக்கு வாய்ப்பு உள்ளது.

    தற்போது புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அருட்பணியாளர்கள், உளவியல் அறிஞர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இந்த திருத்தலத்துக்கு வருவோர் மனிதரை மனிதர் அன்பு செய்ய தூண்டும், மனித நேயப்பண்புகளை வளர்த்தெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த திருத்தலம் கோட்டார் மறைமாவட்டத்தின் அங்கமாக இருப்பதுடன், ஒரு தனி பங்காகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் பங்குதந்தையாக அருட்பணியாளர் ஜோசப்ரொமால்ட் செயல்பட்டு வருகிறார்.

    • கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு
    • உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும்

    நாகர்கோவில் :

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒறுத்தல் முயற்சி மற்றும் உபவாசம் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தனர்.

    புனித வாரம் தொடங்கி யதையொட்டி கடந்த 2-ந்தேதி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனியும், 6-ந்தேதி புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று புனித வெள்ளி திருச்சி லுவை வழிபாடுகளும் நடந்தது. இன்று நள்ளிரவு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் பாஸ்கா திருவிழிப்பு சிறப்பு வழிபா டுகள் மற்றும் திருப்பலி நடக்கிறது.

    இதன் தொடக்க நிகழ்ச்சியாக ஆலயத்தில் பாஸ்கா மெழுகுவர்த்தியில் ஒளியேற்றும் வழிபாடு நடைபெறும்.

    பாஸ்கா மெழுகு வர்த்தியில் அலங்கரிக்கப் பட்ட சிலுவையில் பங்குத் தந்தையர்கள் "அகரமும் நகரமும் காலங்களும் அவருடையன, யுகங்களும் அவருடையன" என எழுத்தாணியால் வரை வார்கள். அதன்பின் மெழுகு வர்த்தியில் இயேசு வின் 5 காயங்கள் பதிவு செய்யப்படும். பின்னர் பாஸ்கா திரியில் ஒளி யேற்றப்படும். தொடர்ந்து மக்கள் ஆலயத்திற்குள் பவனியாக வருவார்கள். ஆலய வாசல் வந்தவுடன் பங்குத்தந்தை கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடுவார்.

    அப்போது மக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் அனைத்து மெழுகு திரிகளையும் பற்ற வைப்பார்கள். உடனே ஆலயத்தின் அனைத்து விளக்குகளும் ஒளி யேற்றப்படும்.தொடர்ந்து வார்த்தை, வழிபாடு தொடங்கும். பழைய ஏற்பாடு நூலில் இருந்து மூன்று வாசகமும், புதிய ஏற்பாட்டு நூலில் இருந்து இரண்டு வாசகமும் வாசிக்கப்படும். ஐந்து வாசகங்களுக்கும் பதிலுரை பாடல்களும் பாடப்படும். தொடர்ந்து உன்னதங் களிலே என்ற வானவர்கீதம் பாடப்படும். அப்போது இயேசு உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து திருமுழுக்கு வழிபாடு, புனிதர்களின் மன்றாட்டு மாலை, தண்ணீருக்கு ஆசி வழங்கு தல் ஆகியவை நடைபெறும்.

    அப்போது பங்கு தந்தை பாஸ்கா திரியை மூன்று முறை தண்ணீரில் வைத்து ஆசீர்வதிப்பார். தொடர்ந்து திருமுழுக்கு வாக்குறுதி களை புதுப்பித்தல், நம்பிக்கையாளர் மன்றாட்டு, இறைமக்கள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு, பாஸ்கா முகவுரை ஆகியவை நடைபெறும். இறுதியில் உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும். திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

    கோட்டார் சவேரியார் பேராலயம், நாகர்கோவில் அசிசி ஆலயம், புன்னை நகர் புனித லூர்து அன்னை ஆலயம், குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம், தக்கலை எலியாசியார் ஆலயம், கண்டன்விளை புனித குழந்தை ஏசுவின் தெரசாள் ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடற்கரை கிராமங்களில் இருந்து வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் பலரும் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இதனால் கடற்கைரை கிராமங்கள் களை கட்டி உள்ளன.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது.
    • திருப்பலி நிறைவேற்ற 1969-ல் பீடம் மாற்றி அமைக்கப்பட்டது.

    500 ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுவிளை தன் பெயருக்கேற்ப புன்னையும், மாவும் நிறைந்த காடாக காட்சியளித்தது. அப்போது அங்கு ஒரு சில கிறிஸ்தவ குடும்பங்களே வாழ்ந்து வந்தனர்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து முட்டத்திற்கு மகாராஜா பல்லக்கில் செல்லும் முக்கிய வழியாக காட்டுவிளை திகழ்ந்து வந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொட்டவிளை நாடான் என்பவர் வைத்து வணங்கிய கல்குருசு பற்பல புதுமைகளை செய்து கொள்ளை நோய்கள் மற்றும் எந்தவித கேடுகளும் இல்லாமல் மக்களை முன்னேற்ற பாதையில் வளர வைத்தது. காலம் செல்ல, செல்ல புதுமைகள் நிறைந்த அந்த குருசை சுற்றி மக்கள் சிறிய குருசடி ஒன்றை கட்டினர். அதில் தினமும் செபித்து வந்தனர்.

    சிற்றாலயம்

    1860-ம் ஆண்டு மாடத்தட்டுவிளை பங்கின் ஓர் அங்கமாக காட்டுவிளை செயல்பட்டு வந்தது. பல்வேறு மாற்றங்கள் பின்னணியில் சிற்றாலயம் ஒன்று கட்ட பங்குத்தந்தையின் வழிகாட்டுதலின்படி மக்கள் தீர்மானித்தனர். காட்டுவிளை, கொல்லம் ஆயர் பென்சிகரால் 1871-ல் காரங்காடு பங்கோடு இணைக்கப்பட்டது. 11-8-1931-ல் அருட்பணியாளர் இஞ்ஞாசியாரால் சிற்றாலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1933-ம் ஆண்டு அருட்பணியாளர் வர்க்கீஸ் அடிகளார் காலத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு புனித மங்கள மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புதிய ஆலயத்தில் அருட்பணியாளர் இம்மானுவேல் முதல் திருப்பலி நிறைவேற்றினார். இங்கு இறைமக்களின் விடிவெள்ளியாக புனித மங்கள அன்னை திகழ்ந்து வருகிறார். கொள்ளை நோயின் பிடியிலிருந்தும், பயத்தில் இருந்தும் மக்களை காப்பாற்ற கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் வீடு-வீடாக சென்று பஜனை பாடினார்கள். மேலும் நிறைவு நாளில் சப்பரப்பவனி நடைபெறுவது வழக்கம். தற்போதும் ஆண்டு தோறும் பஜனை மற்றும் சப்பரப்பவனி நடைபெற்று வருகிறது.

    மேலும் ஆயர் டி.ஆர்.ஆஞ்ஞசாமி 28-4-1940-ல் காரங்காடு பங்கில் இருந்து சரலை தனிப்பங்காக பிரித்து காட்டுவிளையையும் சரல் பங்கோடு இணைத்தார். அப்போது சரல் பங்குப்பணியாளராக அருட்பணியாளர் ஜேக்கப் லோப்பஸ் நியமிக்கப்பட்டார். மாதத்தில் ஒரு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    1950-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஊர் பொதுக்கூட்டத்தில் சிற்றாலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. மே மாதம் ஆலய பாதுகாவலர் திருநாளின் போது புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போதைய ஊர் தலைவர் மற்றும் பங்கு மக்களின் அயராத ஊழைப்பாலும், ஒத்துழைப்பாலும், புதிய ஆலயம் அருமையாக கற்களால் எழுப்பப்பட்டது. அருட்பணியாளர் தனிஸ்லாஸ் காலத்தில் 1953-ம் ஆண்டு மே மாதம் பாதுகாவலர் விழா திருக்கொடியேற்ற நாளில் ஆயர் ஆஞ்ஞசாமி புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. 16-5-1669-ம் ஆண்டு அருட்பணியாளர் ஏ.ஜே.அகஸ்டீன் அடிகளாரின் பணி காலத்தில் அருட்பணியாளர் தங்குவதற்கான மேடையும், கோவில் கொடி மரமும் அமைக்கப்பட்டு, புனிதப்படுத்தப்பட்டது.

    மக்களை பார்த்து திருப்பலி நிறைவேற்ற 1969-ல் பீடம் மாற்றி அமைக்கப்பட்டது. மாதம் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதோடு நற்கருணை பேழை (திருப்பிரசன்னம்) ஆலயத்தில் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து புதன்கிழமை மாலை திருப்பலியும் நடைபெற்றது.

    18-12-1987-ல் அருட்பணியாளர் ஏ.செல்வராஜ் பணிக்காலத்தில் பிரான்ஸ் தொண்டு நிறுவன உதவியுடன் குடிநீருக்கான பெரிய கிணறும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்பட்டு, மக்களுக்கும், ஆலய தென்னை மர தோப்புக்கும் பயன்படுத்தப்பட்டது.

    பங்கு அருட்பணிப்பேரவை

    கோட்டார் மறை மாவட்ட விதிமுறைப்படி அருட்பணியாளர் பெஞ்சமின் லடிஸ்லாஸ் பணி காலத்தில் 8-9-1996-ல் முதல் பங்கு அருட்பணி பேரவை அமைக்கப்பட்டது. தற்போது எட்டாவது பங்கு மேய்ப்புப்பணி பேரவை செயல்படுகிறது.16-5-2004-ல் தூய மங்கள அன்னை ஆலய 50-வது ஆண்டு பொன்விழா அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் காலத்தில் ஆயர் லியோன் தர்மராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    பொலிவுடன் எழுப்பப்பட்ட புதிய ஆலயம்

    அருட்பணியாளர் ஸ்டான்லி சகாயம் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கான தேவை உணரப்பட்டு 8-1-2016 முதல் இதற்கான நிதி சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு காணிக்கை ஆலய கட்டுமான பணிக்கான சிறப்பு காணிக்கையாக பிரிக்கப்பட்டு நிதி சேர்க்கப்பட்டது. அருட்தந்தை ஸ்டான்லி சகாயம் திட்டமிடுதலாலும், வழிகாட்டுதலாலும், பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும், ஆலய கட்டுமான நிதி திரட்டுவதில் மக்கள் உற்சாகமாக செயல்பட்டார்கள். அதைத்தொடர்ந்து பங்கில் பொறுப்பேற்ற அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ் புதிய ஆலயம் கட்டுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்டுமான நிதி சேர்ப்பதில் உழைத்தார். கட்டிட குழுவும் உருவாக்கப்பட்டது.

    9-12-2019-ல் ஆயர் நசரேன் சூசை அவர்களால் புதிய ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்னையின் பிறப்பு விழாவான 8-9-2020-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ் தளராத தியாக வழிநடத்துதலாலும் பல நிலையிலும் பல்வேறு மக்கள் மற்றும் பங்கு மக்களின் பணிகளாலும் தாராள கொடைகளாலும் பிற பல பங்குகளின் உதவி கரங்களாலும் நல் உள்ளம் படைத்த நன்கொடையாளர்களாலும், அனைவரின் இணைந்த செயல்பாடுகளாலும் ஆலயப்பணி நிறைவுக்கு வந்துள்ளது. புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு இன்று (சனிக்கிழமை) ஆயர் நசரேன் சூசையால் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட உள்ளது.

    -அருட்பணியாளர் பி.மைக்கேல்ராஜ்.

    • திருவிழா நாளை தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது.
    • 26-ந்தேதி சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது.

    குமரி மாவட்டம் எல்லைபகுதியான பத்துகாணியில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறை மாவட்டத்தால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நாளான நாளை மதியம் 2 மணி முதல் நெய்யாற்றின்கரை மறை மாவட்ட இளைஞர் இயக்க தலைவர் அனுப் தலைமையில் கொடி பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து கொடி பயணமானது புனித பியூஸ் ஆலயத்தில் இருந்து குருசுமலை அடிவாரம் வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பங்குதந்தை ஜஸ்டின் பிரான்சிஸ் தலைமையில் திருப்பயண நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து மலை உச்சியில் திருப்பலி நடக்கிறது. இதையடுத்து நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்குகிறார். குருசுமலை இயக்குனர் வின்சென்ட் கே.பிட்டர், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், காட்டாகடை எம்.எல்.ஏ.சதீஷ், திருவனந்தபுரம் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பாலோடு ரவி, திருவனந்தபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பவுல் பி.ஆர்.ஆல்பர்ட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் மலை அடிவாரத்தில் இன்னிசை விருந்து, கலை நிகழ்ச்சிகள், மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி நடக்கிறது. 26-ந்தேதி மாலை சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி தமிழக எல்லை பகுதிகளான ஆறுகாணி, பத்துகாணி போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.
    • விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் என்பது தெரிந்தது.

    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்குள்ள பாதிரியாரின் அறையில் இருந்த மாதா சிலை கண்ணாடி பெட்டியை உடைத்து தங்க சிலுவை, நகை திருடு போனது. இது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது தேவாலயத்துக்கு வந்த வாலிபர் ஒருவர் காணிக்கை செலுத்திவிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் (23) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    • நாளை திருவிருந்து ஆராதனை நடக்கிறது.
    • 28-ந்தேதி 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது.

    உடன்குடி கிறிஸ்தியா நகரம் தூய மார்க் ஆலயத்தின் 175-வது பிரதிஷ்டை மற்றும் அசனபண்டிகை விழா நேற்று மாலையில் ஜெயபவனியுடன் தொடங்கியது. பரிபாலனர் ஞானராஜ் கோவில் பிள்ளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சேகர உபவாசக கூடுகை, இரவு 7 மணிக்கு வட இந்திய மிஷனரி கலாசார நிகழ்ச்சிகள், நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருவிருந்து ஆராதனை, காலை 11.30 மணிக்கு வாலிப பெண்கள் பண்டிகை, இரவு 7 மணிக்கு சபையார் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு நடக்கிறது.

    வருகிற 23-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களும் தினமும் இரவு 7 மணிக்கு நற்செய்தி பெருவிழா, 26-ந் தேதி காலை 8 மணிக்கு குடியரசு தின கொடியேற்று விழா, 11 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மிஷினரி விற்பனை விழா, மாலை 6 மணிக்கு ஆயத்த ஆராதனை, 28-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு 175-ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது.

    தொடர்ந்து தங்க நாணயங்கள், சிறப்பு மலர்கள் வெளியீடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அசன விருந்து நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு வான வேடிக்கை, 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, நண்பகல் 12 மணிக்கு வேத பாட தேர்வு, மாலை 4 மணிக்கு ஞானஸ்தான, ஆராதனை, இரவு 7 மணிக்கு தியாக சுடர் என்ற வரலாற்று நாடகம் நடைபெறும்.

    ஏற்பாடுகளை சேகரகுருவானவர் பாஸ்கர் அல்பட்ராஜன் கவுரவ குருவானர் ஷீபா பாஸ்கர், உதவி குருவானவர் ஜெபத்துரை, சபை ஊழியர் ஆனந்த மணி, பரிபாலனர் ஞான்ராஜ் கோவில் பிள்ளை, தலைவர் பால்ராஜ் செயலாளர் பிரின்ஸ் பொருளாளர் ஜெபஸ்டின் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் ஆண்ட்ரூஸ் மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் விசாரணை
    • கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே அக்கரை கடைத்தெருவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 2 உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து இருந்தனர். அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இது குறித்து தலைவர் கபிரியல் ரவி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். அப்போது கோவிலில் 2 கைரேகைகள் சிக்கியது.

    அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்த்து வரு கிறார்கள். மேலும் கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆலயங்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வரு கிறார்கள். எனவே அதே கொள்ளையர்கள் இங்கும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    • சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது.
    • கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்று தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து தினமும் பிரார்த்தனைகள் நடந்தது. இன்று காலையில் ஆலயத்தின் மின் விளக்கை அணைப்பதற்காக தலைவர் எப்ரின் ரவி சென்றார். அப்போது ஆலயத்தின் முன்பிருந்த அந்தோணியார் கெபி அருகில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் ஆலயத்தின் கதவும் உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஆலயத்தின் உள்ளே இருந்த மரப்பெட்டி உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து எப்ரின் ரவி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை என்றும் இதனால் உண்டியலில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்ததாகவும் தலைவர் எப்ரேன் ரவி கூறினார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • திரளாக கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
    • புனித முடியப்பர் சப்பரபவனி நடைபெற்றது.

    காயல்பட்டினம் கொம்புதுறை புனித முடியப்பர் ஆலய திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுறை நற்கருணை ஆசிரும் நடைபெற்றது.

    ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் காலையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியும், மாலையில் திருவிழா மாலை ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித முடியப்பர் சப்பரபவனி நடைபெற்றது.

    பத்தாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணி அளவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கலந்து ெகாண்டு ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றினார்.

    இதில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் முதல் முறையாக நற்கருணை ஆசிர் பெற்றனர். முன்னதாக ஆயரை ஊர் மக்கள் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து சென்றனர்.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆறுமுகநேரி மக்களுக்காக ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார்.

    அதேபோல் புனித முடியப்பர் ஆலய வழி தோன்றல்களுக்காகவும், தொடர்ந்து ஏரல், பழைய காயல், புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டணம் போன்ற ஊர்களின் சார்பில் அந்தந்த ஊரின் பங்கு தந்தையர் தனித்தனியே திருப்பலி நிறைவேற்றினா். திருப்பலியில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளார், கொம்புத்துறை ஊர் நல கமிட்டி தலைவர் போர் தாஸ், மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். திருவிழாவையொட்டி ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    • கிறிஸ்தவ சபைகளில் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும்.
    • கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.

    ஆங்கில புத்தாண்டை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் சமீப காலமாக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

    2022-ம் ஆண்டு இன்று முடிந்து புதிய ஆண்டு 2023 பிறப்பதை வரவேற்கும் வகையிலும் இந்த ஆண்டு முழுவதும் பாதுகாத்து பராமரித்து வந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டு ஆராதனை நடைபெறுகிறது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை தொடங்கி விடும். குறிப்பாக கத்தோலிக்க திருச்சபைகளில் இரவு தொடங்கும் ஆராதனை நள்ளிரவு வரை நீடிக்கும்.

    தென் இந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ), மெத்த டிஸ்ட், ஆற்காடு லூத்தரன், பெந்தேகொஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட பிற திருச்சபைகளில் இரவு 11 மணிக்கு சிறப்பு வழிபாடு தொடங்குகிறது.

    பழைய வருட ஆராதனையாக நன்றி ஏறெடுப்பு இதில் முக்கிய அம்சமாக இடம் பெறும். சரியாக இரவு 12 மணி ஆராதனையுடன் புதிய ஆண்டிற்கான ஆராதனை தொடங்கும். புதிய ஆண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணக்கு ஆலயங்களில் பட்டாசு வெடித்தும், மின் விளக்கை சில நிமிடங்களில் அனைத்தும் வரவேற்பார்கள்.

    ஹேப்பி நியூ இயர் என கோஷங்கள் கூறி ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். அன்பின் வெளிப்பாடாக கட்டி அரவணைத்தும் வாழ்த்துக்களை கூறுவர்.

    சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர், அண்ணா நகர், பெரம்பூர் லூர்துமேரி, பரங்கி மலை, மாதவரம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க திருச்சபை ஆலங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இதே போல் செயின்ட் கதிட்ரல் ஆலயம், சூணி பறல், ஆருட்ரா, ராயப் பேட்டை வெஸ்லி, சிந்தாரிப் பேட்டை சியோன், பிராட்வே வண்ணாரப் பேட்டை, தாம்பரம், சேலை யூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் பிற ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடக்கி றது.

    புத்தாண்டையொட்டி அனைத்து ஆலயங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. நட்சத்திரங்கள், ஆலயத்தை சுற்றி தொங்க விடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக புத்தாண்டு ஆராதனையில் பங்கேற்க தயாராகி வருகின்றனர்.

    வழக்கத்தை விட எல்லா ஆலயங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாமியானா பந்தல் மற்றும் சிறப்பு கூடாரங்கள் அமைத்து உள்ளனர்.

    புத்தாண்டு சிறப்பு வழிபாடு முடிந்தவுடன் அனைவருக்கும் தேனீருடன் கேக் வழங்கப்படும். புத்தாண்டையொட்டி முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.
    • புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார்.

    வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த பழைய ஆலயம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

    அதைதொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அந்தோணியார் ஆலய அர்ச்சிப்பு விழா, புனித அந்தோணியாரின் திருப்பண்டம் ஸ்தாபித்தல் விழா, முதல் திருப்பலி நிறைவேற்றி 80-ம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    அதன்படி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த மண்ணில் 36 ஆண்டுகள் வாழ்ந்து தம் அன்பு, நற்குணத்தால் மக்கள் உள்ளங்களை புனித அந்தோணியார் கவர்ந்தார். அந்த புனிதரான அந்தோணியாரின் உடலின் சிறு பகுதியானது ரோம பேரரசின் உதவியுடன் இந்த ஆலயத்துக்கு கொண்டவரபட்டு உள்ளது. அதனை ஆலயத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றி புனித அந்தோணியாரின் திருப்படத்தை ஆலயத்தில் ஸ்தாபித்தல் செய்கிறார். சிறப்பு விருந்தனாக முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், முளகுமூடு வட்டார முன்னாள் முதல்வர் கிலாரி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அதைதொடர்ந்து திருப்பலி, அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் முன்னாள் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்பட ஏராளமான கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சுரேஷ்பாபு பங்குபேரவை உதவி தலைவர் மரியஆன்றணி, செயலாளர் புஷ்பலதா, துணைச்செயலாளர் லீமா ரோஸ். மரிய ஜெபஸ்தியான் மற்றும் பங்குமக்கள், பங்கு பேரையினர் பக்த சபைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • ஆற்றூரில் புனித ஆந்திரேயா ஆலயம் உள்ளது.
    • நேற்று இரவு புனிதர்களின் தேர்பவனி நடந்தது.

    ஆற்றூரில் புனித ஆந்திரேயா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 30-ந்தேதி பங்கு குடும்ப விழா தொடங்கி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான நேற்று இரவு புனிதர்களின் தேர்பவனி நடந்தது.

    நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 9.30 மணிக்கு நடைபெறும் பெருவிழா திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் அருளுரை வழங்குகிறார்.

    ஆலய பங்குத்தந்தை பெ.வெலிங்டன் கூறியதாவது:-

    ஆற்றூரில் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து மண் சுவராலான ஓலைக் கொட்டகை அமைத்து, புனித அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு வழிபட்டு வந்தனர்.

    அதன்பிறகு, அதாவது 75 ஆண்டுகளுக்கு முன் கல்லினால் சுவர் எழுப்பி, ஓட்டுக்கூரையால் ஆலயம் அமைத்து வழிபட்டனர். புத்தன்கடை பங்கின் கிளைப்பங்காக ஆற்றூர் செயல்பட்டு வந்தது. தொடக்கத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், சில காலத்திற்குப் பிறகு மாதத்திற்கு ஒருமுறையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    புனிதரின் பரிந்துரையில் இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்து வந்ததால், மக்களின் வருகை அதிகரித்தது. அப்போதைய புத்தன்கடை பங்குத்தந்தை மரியதாசனால் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அருட்பணியாளர் சார்லஸ் பொரோமியோவால் ஆலய கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.5.1979 அன்று ஆயர் ஆரோக்கியசாமியால் அர்ச்சிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    புத்தன்கடை பங்கில் பொறுப்பேற்றிருந்த அருட்பணியாளர்கள் சூசை, இயேசு ரெத்தினம் ஆகியோர் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தனர்.

    அதன்பிறகு 24.5.1991 அன்று ஆயர் லியோன் அ.தர்மராஜ் கோட்டார் மறை மாவட்டத்தின் 100-வது தனி பங்காக ஆற்றூர் உயர்த்தப் பட்டது.

    மாத்தூர், ஏற்றகோடு, தச்சூர், மாத்தார் ஆகிய பங்குகளை ஆற்றூரின் கிளைப்பங்குகளாக கொண்டு, அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, ஆற்றூரின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

    அருட்பணியாளர் லாரன்ஸ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 26.5.2012 அன்று ஆயர் பீட்டர் ரெமிஜியுசால் அர்ச்சிக்கப் பட்டது.

    பங்குத்தந்தை ஜே.செல்வராஜ் பணிக்காலத்தில் புனித அந்தோணியார் குருசடி புதுப்பிக்கப் பட்டது.

    18.6.2022 அன்று நான் இவ்வாலய பங்குத்தந்தையாகப்பொறுப்பேற்றேன். தொடர்ந்து ஆலயம், குருசடி ஆகியவற்றைப்புதுப்பித்து இறை நம்பிக்கையில் மக்களை வழி நடத்தி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×