என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
வெள்ளறடை குருசுமலை திருப்பயண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- திருவிழா நாளை தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது.
- 26-ந்தேதி சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது.
குமரி மாவட்டம் எல்லைபகுதியான பத்துகாணியில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை மறை மாவட்டத்தால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான நாளை மதியம் 2 மணி முதல் நெய்யாற்றின்கரை மறை மாவட்ட இளைஞர் இயக்க தலைவர் அனுப் தலைமையில் கொடி பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து கொடி பயணமானது புனித பியூஸ் ஆலயத்தில் இருந்து குருசுமலை அடிவாரம் வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பங்குதந்தை ஜஸ்டின் பிரான்சிஸ் தலைமையில் திருப்பயண நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து மலை உச்சியில் திருப்பலி நடக்கிறது. இதையடுத்து நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.
மாலை 6 மணிக்கு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு நெய்யாற்றின்கரை மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்குகிறார். குருசுமலை இயக்குனர் வின்சென்ட் கே.பிட்டர், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், காட்டாகடை எம்.எல்.ஏ.சதீஷ், திருவனந்தபுரம் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பாலோடு ரவி, திருவனந்தபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பவுல் பி.ஆர்.ஆல்பர்ட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
விழா நாட்களில் தினமும் மாலையில் மலை அடிவாரத்தில் இன்னிசை விருந்து, கலை நிகழ்ச்சிகள், மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி நடக்கிறது. 26-ந்தேதி மாலை சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி தமிழக எல்லை பகுதிகளான ஆறுகாணி, பத்துகாணி போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்