search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே கிறிஸ்தவ ஆலயங்களில் திருடிய வாலிபர் கைது
    X

    தாம்பரம் அருகே கிறிஸ்தவ ஆலயங்களில் திருடிய வாலிபர் கைது

    • கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது.
    • விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் என்பது தெரிந்தது.

    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்குள்ள பாதிரியாரின் அறையில் இருந்த மாதா சிலை கண்ணாடி பெட்டியை உடைத்து தங்க சிலுவை, நகை திருடு போனது. இது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது தேவாலயத்துக்கு வந்த வாலிபர் ஒருவர் காணிக்கை செலுத்திவிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் (23) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×