search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருதய ஆண்டவர்"

    • ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    • நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு புகழ்பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் இங்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்றைய தினங்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் இங்கு வந்து திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

    தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இந்த ஆலயம்தான். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் 10 நாட்கள் வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா நடைபெறும் தினங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைப்பார்கள்.

    129-ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் இருதய ஆண்டவர் தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இன்று 10-ம் நாள் நிகழ்ச்சியாக நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை இருதய ஆண்டவர் திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல்தாசன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

    • 7-ந் தேதி தேர்பவனி நடக்கிறது.
    • 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் உலக புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவிழா தொடக்கமாக பங்கு இறைமக்கள் திரு இருதய ஆண்டவர் உருவம் தாங்கிய கொடியை ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வந்து ஆலயத்தின் அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்ட அருட்பணியாளர்களிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து மதுரை ஞானஒளிபுரம் பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    சிவகங்கை வியானி நிலைய இயக்குனர் அருள்தந்தை அமலன், எட்வர்ட், கேரளாவை சேர்ந்த அருட்பணியாளர் ஜெரோம், சவேரியார்பட்டினம் பங்குந்தந்தை புஷ்பராஜ் கொடியேற்ற, திரு இருதய ஆண்டவர் ஆலய அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்டோர் கொடியேற்ற திருப்பலி நிறைவேற்றினர்.

    இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் பல்வேறு பங்கு இறை மக்கள் சார்பில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 7-ந் தேதி இரவு திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை சிவகங்கை மறை மாவட்ட (பொறுப்பு) ஆயர் ஸ்டீபன் அந்தோணி திருவிழா திருப்பலியும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியும் நிறைவேற்றுகின்றனர்.

    8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அருட்பணியாளர் அ.இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறை மக்கள், மரியின் ஊழியர் சபை சகோதரிகள் செய்துள்ளனர்.

    • இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
    • 16-ந்தேதி திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது.

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் பெருவிழா கொடியேற்றி திருப்பலி நடத்தினார். தொடர்ந்து நற்கருணை நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருஇருதய ஆண்டவர் திருப்பவனி நடக்கிறது. 17-ந்தேதி கூட்டு திருப்பலி, புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி கலந்து கொள்கிறார். 18-ந்தேதி காலை 10 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

    • இன்று குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஆலயத்தை சுற்றி அம்பு நேர்ச்சையும் நடைபெறுகிறது.

    வால்பாறை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் தேர் பவனி விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு வாழைத்தோட்டம் புனித செபஸ்தியார் சிற்றாலயத்தில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி, ஜெப வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து பங்கு மக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் அம்பு நேர்ச்சை பவனி நடந்தது.

    இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஆலயத்தில் பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் தலைமையில் முடீஸ் புனித அந்தோணியார் ஆலய பங்கு குரு மரிய அந்தோணிசாமி, சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஆனந்த குமார் ஆகியோர் முன்னிலையில் கூட்டு பாடல் திருப்பலி நடத்தப்பட்டது.

    பின்னர் 6.30 மணிக்கு தூய இருதய ஆண்டவர், புனித செபஸ்தியார், வேளாங்கண்ணி மாதா சொரூபங்கள் தாங்கிய தேர்பவனியானது வால்பாறை பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலியும், 15 குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் ஆலயத்தை சுற்றி அம்பு நேர்ச்சையும் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு நன்றியின் நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • 120 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது

    கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்தவரை, ஆண்டவர் ஏசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் ஏசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார். இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே 3 இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் 2-வது ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், 3-வது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.

    பிரான்ஸ் நாட்டில் 130 ஆண்டுகளுக்கு முன் மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர் 9 நாட்கள் விரதம் இருந்து ஆண்டவரான ஏசுவை மனம் உருகி வழிபட்டால் நோய் தீரும் என கூறினர். இதையடுத்து அன்னாள் அவ்வாறு விரதமிருந்து வழிபட தொடங்கினார். இதையடுத்து 5-வது நாள் அன்று அவரது உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்து மறுநாள் மருத்துவரிடம் சென்று காண்பித்த போது இதய நோய் குறைந்து வருவதாக கூறியுள்ளார்.

    தொடர்ந்து நாளடைவில் அவரது இருதய நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக அந்த மருத்துவர் கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தார். அப்போதுதான் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பங்கு தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்டிணன்ட் செல் என்பவர் அங்கு ஒரு தேவலாயம் ஒன்றை அமைப்பதற்காக தேவையான பொருள் ஏற்பாடு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவலறிந்த அன்னாள், அங்கு ஆலயம் அமைப்பதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அந்த ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது என்றும், ஆண்டவரை எப்படி உருவாக்குவது என்றும் ஆலோசித்தனர்.

    இந்நிலையில் மார்க்ரேட் மேரி என்பவர் 1673-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள், அவர் கனவில் ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார் என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் ஏசுகிறிஸ்து. கனவில் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார். பின், அவரது கூற்றுப்படியே ஏசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான திரு இருதய ஆண்டவர் உருவம் இங்கு உருவாக்கப்பட்டது.

    மேலும் புனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டிணன்ட் செல் இடைக்காட்டூர் வந்து ஆலயம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கினார். இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக் கலையின் அடிப்படையில் சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளது. 120ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வானளாவிய உயரத்துடன் ஆலயம் காணப்படுகிறது. தற்போது இந்த ஆலயத்திற்கு வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் தமிழக அரசு இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது.
    • கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் இங்கு சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் இங்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்றைய தினங்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் இங்கு வந்து இந்த திருப்பலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

    தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இந்த ஆலயம் தான். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் 10 நாட்கள் வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா நடைபெறும் தினங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைப்பார்கள்.

    இந்தாண்டிற்கான இந்த திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் திருஇருதய ஆண்டவர் தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நேற்று 10-ம் நாள் நிகழ்ச்சியாக நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவர் திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல்தாசன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

    • வருகிற 1-ந்தேதி தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • 2-ந் தேதி நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மானாமதுரை அருகே இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வருகிற 1-ந்தேதி தேர் பவனி நடக்கிறது.

    மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடது பக்கத்தில் இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இந்த ஆலயம் தான். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்தாண்டிற்கான இந்த திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவகங்கை முன்னாள் மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலியும், 10-ம் நாள் நிகழ்ச்சியாக மறுநாள் 2-ந் தேதி நற்கருணை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவர் ஆலய அருட்பணியாளர் இம்மானுவேல்தாசன் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை உள்ளிட்ட பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    புனித இருதய ஆண்டவர் ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த களத்திடல்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த திருஇருதயஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப்பெரு விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய திருத்தேர் பவனி நடை பெற்றது. இதனை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இருதயஆண்டவர், மிக்கேல் அதிதூதர், தேவமாதா ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலியை செய்துவைத்து சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார்.

    ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
    ×