search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபை கூட்டம்"

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மணியபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் பேபிமுத்து முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் செல்வகுமாரி, செயல்அலுவலர் நட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் நடைபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. 

    • வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
    • சுடுகாட்டுக்கு ெசல்லும் சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு ஊராட்சி சேனாதிகாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.

    இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேனாதிகாட்டில் உள்ளசுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சோழவந்தான்- உசிலம்பட்டியில் சுதந்திர தினவிழா, கிராமசபை கூட்டம் நடந்தது.
    • கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவி கொண்டாடப்பட்டது. செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெய ராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதார பணி ஆய்வாளர் முருகா னந்தம், வார்டு கவுன்சிலர் கள் வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணைத்தலைவர் லதா கண்ணன் இனிப்பு வழங்கினார். வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    நைனார் தொழுகை பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பாக சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. எம்.வி.எம். கலைவாணி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மருது பாண்டியன் தேசியகொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி ஆகி யோர் கலந்து கொண்டனர். அதேபோல் கல்வி இயக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆசிரியை தேவிகா தலைமை தாங்கி னார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி கலை நிகழ்ச்சி தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, உழவர் உணவகத்தில் சேது தலைமையில் மன்னாடி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஜெய்மா நர்சரி பள்ளியின் தாளாளர் கீதா, இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் அந்தந்த பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    முன்னாள் வர்த்த சங்க தலைவர் ஸ்ரீராமுலு அறக்கட்டளை சார்பாக 77-வது ுதந்திர தின விழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால் தலைமையில் முன்னாள் சேர்மன் முருகேசன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் பால முருகன் வரவேற்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன் வரு வாய் அலுவலர் சதீஷ், தலைவர் ரம்யா நம்பிராஜன், கிராம நிர்வாக அலுவலர் முபாரக், கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலு வலகத்தில் 77-வது சுதந்திர தின விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் தென் மொழி, நகராட்சி மேலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் சசிகலா, நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அஜித்பாண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மெய்யனம் பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் முருகேசன் வரவு, செலவு கணக்குகள் குறித்து பேசினார். இதில் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திரதினத்தை முன்னிட்டு செந்துறை பகுதியில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.
    • மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் செந்துறை ஊராட்சி தலைவர் சவரிமுத்து, பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் தேன்மொழிமுருகன், கோசுகுறிச்சி ஊராட்சி தலைவர் ஷாஜூதாபேகம், குட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள்மணி, சிறுகுடி ஊராட்சி தலைவர் கோகிலவாணிவீரராகவன்,சமுத்திராபட்டி ஊராட்சி தலைவர் சேதுஅமராவதி, ஊராளிபட்டி ஊராட்சி தலைவர் தேன்சேகர் தேனம்மாள், பூதகுடி ஊராட்சி தலைவர் பரமசிவம், ந.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள் மகாலிங்கம், ஆவிச்சிபட்டி ஊராட்சி தலைவர் துர்க்கா சங்கீதா ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது.

    இதில் அந்தந்த ஊராட்சி மன்றதுணைதலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், பற்றாளர்கள், உதவியாள ர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.ஊராட்சி செயலர்கள் செந்துறை கருப்பையா, பிள்ளையார் நத்தம் பாக்கியலட்சுமி, குடகிப்பட்டி செல்வராஜ்,பூதகுடி ராஜேஸ்வரி, சிறுகுடி வீரபாண்டி, ஆவிச்சிபட்டி நாதன், சமுத்திராபட்டி சின்னச்சாமி, ஊராளிபட்டி ராஜேஸ்கண்ணா, குட்டு ப்பட்டி சிந்து, சிரங்காட்டு ப்பட்டி அசோக்குமார், கோட்டை யூர்செந்தில், கோசுகுறிச்சி சந்திரன், சேத்தூர் கதிர்வேல் ஆகியோர் தீர்மான ங்களை வாசித்தனர். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம்,

    கிராம ஊராட்சி யின் தணிக்கை அறிக்கை, குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி மேம்படுத்துவது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார திட்டம், கிராம வறுமை ஒழிப்பு மகளிர் குழுவினர் பங்கேற்ற னர். மேலும் மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.

    திருப்பூர்:

    சுதந்திர தினத்தை ஒட்டி, நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகளின் 10 அம்சக் கோரிக்கைகள் தொடா்பாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில் 18 மாவட்டங்களில் விவசாயிகளின் அடிப்படையான கோரிக்கை மற்றும் அந்தந்த பகுதி சாா்ந்த கோரிக்கை என 10 கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 5 ந் தேதி முதல் 26 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 22 மாவட்டங்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மனு அனுப்பும் போராட்டமும் ஆகஸ்ட் 7 ந் தேதி நடைபெற்றது.

    இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் 10 அம்சக் கோரிக்கைகளைத் தீா்மானமாக நிறைவேற்ற அந்தந்த பகுதி விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆண்டிப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மீனாள் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத்தில் மேதின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்று தீர்மான அறிக்கை வாசித்தார். யூனியன் பற்றாளர் முத்தையா ''எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்'' உறுதி மொழி வாசித்தார்.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டயானா, கிராம நிர்வாக அலுவலர்கள் கீதா, பாண்டியம்மாள், உமாதேவி, தலைமை ஆசிரியர் கணேசன், கிராமசுகாதார செவிலியர் சித்ரா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி உறுப்பினர் அழகர் நன்றி கூறினார்.

    • மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மாப்பிளையூரணி ஊராட்சி ராம்தாஸ் நகரில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கிராமங்களில் மக்களை அதிகமாக சந்திக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே கிராம சபை கூட்டங்களை நடத்தி மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊராட்சி தலைவர் சரவணக்குமார், ஊராட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை ஊராட்சிக்கு பெறுவதில் முழு கவனமுடன் உழைக்கிறார். என்னை சந்திக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு திட்டங்களை கோரிக்கைகளாக வைப்பார். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

    கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா மற்றும் அதிகாரிகள் ,அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெயகுமார் நன்றி கூறினார். கூட்டுடன்காடு ஊராட்சி தலைவர் மாங்கனி தலைமையில்

    கீழ கூட்டுடன்காட்டு ஆலமரத்தடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் கோமதி வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார். முள்ளக்காடு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக ஊராட்சித் தலைவர் கோபிநாத்நிர்மல் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    கோரம்பள்ளம் ஊராட்சி பெரியநாயகிபுரத்தில் ஊராட்சித் தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் பொன்மாரி செல்வராஜ் , ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .ஊராட்சி செயலர் சீனிராசு வரவேற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

    இதேபோல் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் குமரகிரி ஊராட்சித்தலைவர் ஜாக்சன் துரைமணி, மறவன்மடம் ஊராட்சித்தலைவர் லில்லிமலர், குலையன்கரிசல் ஊராட்சித்தலைவர் முக்கனி, கீழதட்டப்பாறை ஊராட்சித்தலைவர் பத்மா பொன்னுச்சாமி, அய்யனடப்பு ஊராட்சித்தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றபட்டது.

    • கூட்டத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கோவிந்தபேரி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் டி. கே. பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் ருக்மணி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை முருகன் , ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் தென்னங்கன்று நடுதல், வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கடன் உதவி வழங்குதல் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் இசேந்திரன் ,வார்டு உறுப்பினர்கள் இசக்கி பாண்டி, இளவரசி, பொன்னுத்தாய்,நாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கரவேல், கிராம உதவியாளர் சக்தி,வேளாண் அலுவலர் ஜெகன் மற்றும் ஊராட்சி செயலாளர் மூக்காண்டி , ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ரேசன்கடை பணியாளர் மங்களம், மாரித்துரை ,ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி மாணிக்கம்,ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன், முன்னாள் தலைவர் சி. ராசு,முன்னாள் துணைத்தலைவர் கணேசம்மாள், முருகன், செல்லப்பா, சிவா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் , ஊர் பொதுமக்கள் 368 பேர் கலந்து கொண்டனர்.

    • உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்ப நாயக்கன்வலசு கிராம ஊராட்சி சார்பில் கருப்பன் வலசு புதூரில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சுகாதாரம்,கால்நடை துறை, அங்கன்வாடி, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால் கல்வித்துறை சார்பில் யாரும் கலந்து கொள்ளாததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊராட்சியில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலைத் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டம், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார், சாரா வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளன.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
    • கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வருகிற மே 1-ந் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டிற்கான கிராம சபைக்கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் தவறாமல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (2023-2024), பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணிகள் குறித்து விவாதிக் கப்படவுள்ளது.

    இந்த கூட்டங்களில் அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×