search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை பகுதியில் கிராமசபை கூட்டம்
    X

    பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    செந்துறை பகுதியில் கிராமசபை கூட்டம்

    • சுதந்திரதினத்தை முன்னிட்டு செந்துறை பகுதியில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.
    • மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    நத்தம்:

    சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் செந்துறை ஊராட்சி தலைவர் சவரிமுத்து, பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் தேன்மொழிமுருகன், கோசுகுறிச்சி ஊராட்சி தலைவர் ஷாஜூதாபேகம், குட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள்மணி, சிறுகுடி ஊராட்சி தலைவர் கோகிலவாணிவீரராகவன்,சமுத்திராபட்டி ஊராட்சி தலைவர் சேதுஅமராவதி, ஊராளிபட்டி ஊராட்சி தலைவர் தேன்சேகர் தேனம்மாள், பூதகுடி ஊராட்சி தலைவர் பரமசிவம், ந.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள் மகாலிங்கம், ஆவிச்சிபட்டி ஊராட்சி தலைவர் துர்க்கா சங்கீதா ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்றது.

    இதில் அந்தந்த ஊராட்சி மன்றதுணைதலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள், பற்றாளர்கள், உதவியாள ர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.ஊராட்சி செயலர்கள் செந்துறை கருப்பையா, பிள்ளையார் நத்தம் பாக்கியலட்சுமி, குடகிப்பட்டி செல்வராஜ்,பூதகுடி ராஜேஸ்வரி, சிறுகுடி வீரபாண்டி, ஆவிச்சிபட்டி நாதன், சமுத்திராபட்டி சின்னச்சாமி, ஊராளிபட்டி ராஜேஸ்கண்ணா, குட்டு ப்பட்டி சிந்து, சிரங்காட்டு ப்பட்டி அசோக்குமார், கோட்டை யூர்செந்தில், கோசுகுறிச்சி சந்திரன், சேத்தூர் கதிர்வேல் ஆகியோர் தீர்மான ங்களை வாசித்தனர். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம்,

    கிராம ஊராட்சி யின் தணிக்கை அறிக்கை, குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி மேம்படுத்துவது, உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார திட்டம், கிராம வறுமை ஒழிப்பு மகளிர் குழுவினர் பங்கேற்ற னர். மேலும் மகளிர் குழுக்க ள், கிராம மக்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×