search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசி தமிழ் சங்கமம்"

    • வாரணாசியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற 16 வரை நடைபெற உள்ளது.
    • தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர்.

    கடலூர்:

    காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுரு வாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி, வாரணாசியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற 16 வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, காசி - தமிழகம் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெற உள்ளன. இரு பிராந்திய மக்களிடையே உறவை ஆழப்படுத்துவது இதன் பரந்த நோக்கமாகும்.

    இந்த நிகழ்வில் பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக, தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ெரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர். இந்த ெரயில் நேற்று நள்ளிரவு பண்ருட்டி வழியாக சென்றது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் ெரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்ப ட்டிருந்தனர்.

    • உலகின் முதன்மை மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கிறார் பிரதமர்.
    • பிரதமர் தமது தொகுதியில் காசி தமிழ் சங்கமம் நடத்தி இருப்பது கூடுதல் சிறப்பு.

    சென்னையை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:

    காசிக்கும், தமிழகத்திற்கும் ஆயிரமாயிரம் ஆண்டு கால பிணைப்பு உள்ளது. காசி - ராமேஸ்வரம், காசி - சிவகாசி, காசி – சிவகங்கை என அனைத்திற்கும் இடையே பந்தம் உள்ளது. காசி – ராமேஸ்வரம் யாத்திரை இன்னும் வழக்கத்தில் உள்ளது. 

    காசி – தமிழ்நாடு இடையேயான கலாச்சார, பண்பாட்டு தொடர்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த சங்கமத்தில் தமிழ்நாட்டின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், வீர விளையாட்டுக்கள், தமிழகத்தின் பாரம்பரிய பொருட்கள், தமிழ் இலக்கியங்கள் ஆகியவை ஒரு மாத காலத்திற்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட

    திருக்குறள் புத்தகத்தை, காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்வில் பிரதமர் வெளியிட்டார். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் இந்த காசி தமிழ் சங்கம நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரெயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது.
    • பா.ஜனதா கட்சி மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பழமையான கலாசார தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் விழா ஒரு மாத காலத்திற்கு கொண்டாடப்படுகிறது.

    சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இவ்விழாவை மத்திய அரசின் கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகங்கள் மற்றும் உத்திரபிரதேச அரசு முன்னெடுத்துள்ளது.

    காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரெயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரெயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வகையில், சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர்.

    சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு வந்த காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலத்தில் இருந்து 51 பேரும் புறப்பட்டனர். அவர்களை பா.ஜனதா கட்சி மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்திருந்தனர்.

    • நதிகள் இணைப்புத் திட்டத்தை பாரதியார் அப்போதே பாடியிருக்கிறார்.
    • காசியில் தமிழ் சங்கமத்தை நடத்தும் பிரதமரை கண்டு வியப்படைகிறேன்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது: 

    காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர் பேச்சுக்களை காசியில் கேட்க கருவி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முன்னேற்றம் அடையாத நேரத்தில் பாரதியார் இதை பாடியுள்ளார்.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்று நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அப்போதே பாரதியார் பாடியிருக்கிறார்.


    இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் கங்கையில் மூழ்கி எழும் போது சரஸ்வதி தேவி அவருக்கு வீணையை பரிசளித்த நிகழ்வு காசியில் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருமை மிக்க காசி நகரில் தமிழ் சங்கமத்தை நடத்தும் எண்ணம் பிரதமருக்கு எப்படி வந்தது என்பதை கண்டு வியப்படைகிறேன்.

    தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி, காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற்றது. தமது குழுவினருடன் ஜனனே ஜனனே, ஓம் சிவோஹம் உள்ளிட்ட பாடல்களை அவர் பாடினார்.  பிரதமர் மோடி அந்த பாடல்களை ரசித்து கேட்டு மகிழ்ந்தார்.

    • தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் உயிர்ப்பிக்க இதில் கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2, 592 பேர் பயணம் செய்கிறார்கள். முதலாவது ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது.

    இதற்கிடையே, காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) முறைப்படி தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்க விழா நடக்கிறது.

    இந்நிலையில், காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க தான் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன் என தமிழில் பதிவிட்டுள்ளார்.

    • ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது.
    • தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வாரணாசி:

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 16-ந் தேதிவரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் உயர்ப்பிக்க இதில் கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2 ஆயிரத்து 592 பேர் பயணம் செய்கிறார்கள். முதலாவது ரெயில் நேற்று புறப்பட்டது.

    இந்தநிலையில், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) முறைப்படி தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்கவிழா நடக்கிறது.

    • நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக முதல் குழுவை ஆளுநர் இன்று வழி அனுப்பி வைக்கிறார்.
    • தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்குகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றன. 


    இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை குறித்து கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாநில மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முதல் குழு இன்று ரெயில் மூலம் வாரணாசி புறப்பட்டுச் செல்கிறது.

    216 பேர் அடங்கியுள்ள இந்த குழுவில் 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கொடி அசைத்து அவர்களை வழி அனுப்பி வைக்கிறார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கிறார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×