பண்ருட்டியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் ெரயிலுக்கு பாதுகாப்பு

வாரணாசியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற 16 வரை நடைபெற உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர்.
 போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
 போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
Published on

கடலூர்:

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுரு வாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி, வாரணாசியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி வருகிற 16 வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, காசி - தமிழகம் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெற உள்ளன. இரு பிராந்திய மக்களிடையே உறவை ஆழப்படுத்துவது இதன் பரந்த நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக, தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ெரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர். இந்த ெரயில் நேற்று நள்ளிரவு பண்ருட்டி வழியாக சென்றது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் ெரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்ப ட்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com